செய்திகள் :

தில்லியில் பள்ளியருகே வெடிவிபத்து? காவல்துறையினர் விசாரணை!

post image

தில்லியில் பள்ளியருகே வெடிவிபத்து ஏற்பட்டதுபோல் சப்தம் கேட்டதாக காவல்துறையினருக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

தில்லியில் பிரசாந்த் விஹார் பகுதியில் உள்ள சி.ஆர்.பி.எஃப். பள்ளியருகே, ஞாயிற்றுக்கிழமை (அக்.20) காலையில் பயங்கரமான வெடி விபத்து ஏற்பட்டதுபோல் சப்தம் கேட்டதாக அப்பகுதி மக்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து காவல்துறையினர், தடயவியல் குழுக்கள், வெடிகுண்டு செயலிழப்பு குழுக்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். சி.ஆர்.பி.எஃப். பள்ளியின் சுற்றுச் சுவர் சேதமடைந்தும், அருகில் நிறுத்தப்பட்டிருந்த கார்களின் கண்ணாடிகள் உடைந்தும், கடைகளின் பெயர்ப்பலகைகள் சேதமடைந்த நிலையிலும் காணப்பட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.

இந்த நிகழ்வுக்கான காரணத்தைக் கண்டறியும் முயற்சியில் ஈடுபட்டிருப்பதாகவும், நிலத்தடி கழிவுநீர் பாதை ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

இதையும் படிக்க:சொல்லப் போனால்... மாமழை போற்றுதும்! மாமழை போற்றுதும்!

மேலும், அந்தப் பகுதியைச் சேர்ந்த ஒருவர் கூறியதாவது, ``காலை 7.47 மணியளவில் பிரசாந்த் விஹாரில் உள்ள சி.ஆர்.பி.எஃப். பள்ளி அருகே குண்டுவெடிப்பு சப்தம் கேட்டது. அங்கிருந்து புகை மூட்டம் கிளம்புவதையும் விடியோவில் பதிவு செய்தேன்’’ என்று தெரிவித்தார்.

அப்பகுதியை தீயணைப்புக் குழுவினர் உள்பட பலர் சுற்றி வளைத்துள்ள நிலையில், இந்த சம்பவத்துக்கான காரணம் விசாரிக்கப்பட்டு வருகிறது.

ராஜஸ்தான்: ஆட்டோ மீது பேருந்து மோதியதில் 12 பேர் பலி

ராஜஸ்தானின் தோல்பூர் மாவட்டத்தில் ஆட்டோ மீது பேருந்து மோதியதில் 12 பேர் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம், தௌல்பூரில் இருந்து ஜெய்ப்பூருக்கு பேருந்து சனிக்கிழமை இரவு 11 மணியள... மேலும் பார்க்க

ரயில்வே காலி பணியிடங்களை நிரப்ப 10 ஆண்டுகள் போதவில்லையா? ப. சிதம்பரம் கேள்வி!

ரயில்வே துறையில் காலிப் பணியிடங்களை நிரப்புவதில் அரசு சரிவர முயற்சிகள் எடுக்காதது குறித்து பல்வேறு தரப்பிலிருந்தும் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. இதனைத் தொடர்ந்து, ரயில்வே துறையில் பெரும்பாலான இடங்க... மேலும் பார்க்க

கன்னட நடிகர் சுதீப்பின் தாயார் காலமானார்

கன்னட நடிகர் சுதீப்பின் தாயார் சரோஜா ஞாயிற்றுக்கிழமை தனியார் மருத்துவமனையில் காலமானார்.வயது முதிர்வு தொடர்பான நோய் காரணமாக கன்னட நடிகர் சுதீப்பின் தாயார் சரோஜா(80) தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்ப... மேலும் பார்க்க

துப்பாக்கி முனையில் ரூ. 2 கோடி மதிப்பிலான நகை, பணம் கொள்ளை!

தில்லியில் ஓய்வுபெற்ற விஞ்ஞானியை துப்பாக்கி முனையில் மிரட்டி, கொள்ளையடித்தவர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.தில்லியில் பிரசாந்த் விஹார் பகுதியில் ஓய்வுபெற்ற விஞ்ஞானி ஷிபு சிங், தனது மனைவியுடன் தன... மேலும் பார்க்க

மணிப்பூரின் தௌபாலில் ஆயுதங்கள், வெடிபொருட்கள் மீட்பு

மணிப்பூரின் தௌபால் மாவட்டத்தில் நடத்தப்பட்ட சோதனையின் போது ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் கைப்பற்றப்பட்டன.மணிப்பூரின் எஸ்டிஎன்பிஏ கேட் அருகே ஐரோங் மலையில் பாதுகாப்புப் படையினர் சனிக்கிழமையன்று தேடுத... மேலும் பார்க்க

பாகிஸ்தான் பெண்ணை ஆன்லைனில் மணந்த பாஜக கவுன்சிலரின் மகன்!

பாகிஸ்தானுடனான அரசியல் பதற்றங்களால் விசா கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டதால், பாகிஸ்தானிய பெண்ணை ஆன்லைனிலேயே பாஜக கவுன்சிலரின் மகன் திருமணம் செய்தார்.உத்தரப் பிரதேசத்தில் பாஜக கவுன்சிலரான தஹ்சீன் ஷாஹித் எ... மேலும் பார்க்க