செய்திகள் :

பாகிஸ்தான் பெண்ணை ஆன்லைனில் மணந்த பாஜக கவுன்சிலரின் மகன்!

post image

பாகிஸ்தானுடனான அரசியல் பதற்றங்களால் விசா கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டதால், பாகிஸ்தானிய பெண்ணை ஆன்லைனிலேயே பாஜக கவுன்சிலரின் மகன் திருமணம் செய்தார்.

உத்தரப் பிரதேசத்தில் பாஜக கவுன்சிலரான தஹ்சீன் ஷாஹித் என்பவரது மகன் முகமது அப்பாஸ் ஹைதருக்கும், பாகிஸ்தான் லாகூரைச் சேர்ந்த ஆண்ட்லீப் ஜஹ்ரா என்பவருக்கும் திருமண நிச்சயம் நடைபெற்றிருந்தது.

ஆனால் எதிர்பாராதவிதமாக, இரு நாட்டின் இடையே நிலவி வரும் அரசியல் பதற்றங்களால் ஜஹ்ராவுக்கு விசா வழங்கப்படுவதில் சிக்கல் ஏற்பட்டது. மேலும், ஜஹ்ராவின் தாயாரின் உடல்நிலையும் பாதிக்கப்பட்டு, அவரும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், ஜஹ்ரா இந்தியாவுக்கு வருவது என்பது இயலாத காரியம் ஆனது. இருப்பினும், ஹைதருக்கு திருமணம் நடந்தே ஆக வேண்டும் என்ற ஷாஹித்தின் நிலைப்பாட்டால், ஆன்லைனிலேயே திருமணத்தை நடத்தி விடலாம் என்று கூறினர்.

இதையும் படிக்க: சொல்லப் போனால்... மாமழை போற்றுதும்! மாமழை போற்றுதும்!

இதனையடுத்து, ஜஹ்ராவின் குடும்பத்தினரிடமும் கலந்தாலோசிக்கப்பட்டு முடிவெடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, இரு வீட்டினரும் குழுமி, இந்த ஆன்லைன் திருமண விழாவை நடத்தி வைத்தனர்.

இந்த திருமண விழாவில் பாஜகவின் எம்.எல்.சி.யான பிரிஜேஷ் சிங் பிரிஷு உள்பட பலரும் கலந்து கொண்டனர். ஜஹ்ராவுக்கு விரைவில் விசா கிடைக்கும் என்று நம்பிக்கை தெரிவித்த ஹைதர், ஆன்லைனிலேயே அவரை நிக்காஹ் செய்தார்.

சல்மான் கான் என்ன செய்தார்? கொலை மிரட்டல் ஏன்? விரிவாக!!

பாலிவுட்டில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகராக வலம்வரும் சல்மான் கான் மீது லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் கொலை முயற்சியில் இருந்து காப்பதற்கு பல்வேறான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சல்மான் கானும் காவல்துறையின... மேலும் பார்க்க

ராஜஸ்தான்: ஆட்டோ மீது பேருந்து மோதியதில் 12 பேர் பலி

ராஜஸ்தானின் தோல்பூர் மாவட்டத்தில் ஆட்டோ மீது பேருந்து மோதியதில் 12 பேர் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம், தௌல்பூரில் இருந்து ஜெய்ப்பூருக்கு பேருந்து சனிக்கிழமை இரவு 11 மணியள... மேலும் பார்க்க

ரயில்வே காலி பணியிடங்களை நிரப்ப 10 ஆண்டுகள் போதவில்லையா? ப. சிதம்பரம் கேள்வி!

ரயில்வே துறையில் காலிப் பணியிடங்களை நிரப்புவதில் அரசு சரிவர முயற்சிகள் எடுக்காதது குறித்து பல்வேறு தரப்பிலிருந்தும் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. இதனைத் தொடர்ந்து, ரயில்வே துறையில் பெரும்பாலான இடங்க... மேலும் பார்க்க

கன்னட நடிகர் சுதீப்பின் தாயார் காலமானார்

கன்னட நடிகர் சுதீப்பின் தாயார் சரோஜா ஞாயிற்றுக்கிழமை தனியார் மருத்துவமனையில் காலமானார்.வயது முதிர்வு தொடர்பான நோய் காரணமாக கன்னட நடிகர் சுதீப்பின் தாயார் சரோஜா(80) தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்ப... மேலும் பார்க்க

துப்பாக்கி முனையில் ரூ. 2 கோடி மதிப்பிலான நகை, பணம் கொள்ளை!

தில்லியில் ஓய்வுபெற்ற விஞ்ஞானியை துப்பாக்கி முனையில் மிரட்டி, கொள்ளையடித்தவர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.தில்லியில் பிரசாந்த் விஹார் பகுதியில் ஓய்வுபெற்ற விஞ்ஞானி ஷிபு சிங், தனது மனைவியுடன் தன... மேலும் பார்க்க

மணிப்பூரின் தௌபாலில் ஆயுதங்கள், வெடிபொருட்கள் மீட்பு

மணிப்பூரின் தௌபால் மாவட்டத்தில் நடத்தப்பட்ட சோதனையின் போது ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் கைப்பற்றப்பட்டன.மணிப்பூரின் எஸ்டிஎன்பிஏ கேட் அருகே ஐரோங் மலையில் பாதுகாப்புப் படையினர் சனிக்கிழமையன்று தேடுத... மேலும் பார்க்க