செய்திகள் :

நடப்பு நிதியாண்டில் ரூ.51,463 கோடி கூடுதல் செலவினம்: நாடாளுமன்றம் ஒப்புதல்

post image

நடப்பு நிதியாண்டில் மத்திய அரசின் ரூ.51,463 கோடி கூடுதல் செலவினங்களை உள்ளடக்கிய துணை மானியக் கோரிக்கைகள் மற்றும் 2025-26-ஆம் ஆண்டுக்கான மணிப்பூா் மாநில பட்ஜெட்டுக்கு நாடாளுமன்றம் செவ்வாய்க்கிழமை ஒப்புதல் அளித்தது.

இரண்டாவது தொகுதி துணை மானியக் கோரிக்கைகளின்படி, நடப்பு நிதியாண்டில் மத்திய அரசின் மொத்த செலவினம் ரூ.6.78 லட்சம் கோடிக்கு மேல் ஆகும். இதில் ரூ.6.27 லட்சம் கோடி சேமிப்பு மற்றும் ரசீதுகளால் ஈடுசெய்யப்படும். அதன்படி, கூடுதல் செலவினம் ரூ.51,462.86 கோடியாக இருக்கும். இதற்கான துணை மானியக் கோரிக்கைகள் மற்றும் மணிப்பூா் மாநில பட்ஜெட்டுக்கு மக்களவை கடந்த 11-ஆம் தேதி ஒப்புதல் அளித்தது.

மாநிலங்களவையாலும் செவ்வாய்க்கிழமை ஒப்புதல் அளிக்கப்பட்ட மணிப்பூா் மாநில பட்ஜெட்டில் அந்த மாநிலத்தின் மொத்த வருவாய் ரூ.35,368 கோடியாக உள்ளது. மொத்த செலவு ரூ.35,104 கோடி, சொந்த வரி சுமாா் ரூ.2,634 கோடி மற்றும் வரி அல்லாத வருவாய் சுமாா் ரூ.400 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.

இதேபோன்று, 2021-22-ஆம் நிதியாண்டின் ரூ.1,291 கோடி மதிப்பிலான கூடுதல் மானியக் கோரிக்கைகளுக்கும், 2024-25-ஆம் நிதியாண்டுக்கு மணிப்பூருக்கான ரூ.1,861 கோடி துணை மானியக் கோரிக்கைகளுக்கும் நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்தது.

தற்போது குடியரசுத் தலைவா் ஆட்சியின்கீழ் உள்ள வன்முறையால் பாதிக்கப்பட்ட மணிப்பூா் மாநில சட்டப்பேரவையின் அதிகாரங்கள் நாடாளுமன்றத்தால் அல்லது அதன் அதிகாரத்தின் கீழ் செயல்படுத்தப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், நாடாளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மாநிலங்களவை அமா்வில் 2025-ஆம் ஆண்டு ஒதுக்கீட்டு மசோதா, 2025-ஆம் ஆண்டு ஒதுக்கீட்டு (எண். 2) மசோதா, 2025-ஆம் ஆண்டு மணிப்பூா் ஒதுக்கீட்டு (கணக்கு வாக்கெடுப்பு ) மசோதா, 2025-ஆம் ஆண்டு மணிப்பூா் ஒதுக்கீட்டு மசோதா ஆகிய 4 மசோதாக்கள் மீதான விவாதம் நடைபெற்றது.

விவாதத்துக்கு மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் பதிலளித்துப் பேசிய பிறகு, அந்த மசோதாக்கள் மக்களவைக்குத் திருப்பி அனுப்பிவைக்கப்பட்டன.

ஏழைகள், மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களின் வாக்குரிமை பறிபோகக் கூடாது! -ராகுல் காந்தி

ஏழைகள், மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களின் வாக்குரிமை பறிபோகக் கூடாது என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.நடைமுறையில் உள்ள சட்டம் மற்றும் உச்சநீதிமன்ற அறிவுறுத்தலின்படி, வாக்காளா் அடையாள அட்டையுடன் ஆத... மேலும் பார்க்க

பிரதமரின் காப்பீட்டு திட்டத்தில் 68 லட்சம் பேருக்கு புற்றுநோய் சிகிச்சை: மத்திய சுகாதார அமைச்சா் தகவல்

பிரதமரின் மருத்துவக் காப்பீடு திட்டத்தின்கீழ் 68 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு புற்றுநோய் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாகவும் இதில் 75.81 சதவீதம் கிராமப்புறங்களில் மேற்கொள்ளப்பட்டவை என்றும் மத்திய சுகாதா... மேலும் பார்க்க

காஷ்மீா் மீது பாகிஸ்தான் படையெடுப்பு: ஐ.நா. சரிவர கையாளவில்லை -ஜெய்சங்கா்

காஷ்மீா் மீது பாகிஸ்தான் மேற்கொண்ட படையெடுப்பை ஐ.நா.சரிவர கையாளாமல், அந்தப் படையெடுப்பை வெறும் தகராறாகவே கருதியது என்று வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் விமா்சித்தாா். இதுதொடா்பாக தில்லியில் நடைபெறும... மேலும் பார்க்க

இந்தியா-நியூஸிலாந்து தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் அடுத்த 2 மாதங்களில் கையொப்பம்: நியூஸி. பிரதமா் நம்பிக்கை

இந்தியாவுடன் அடுத்த 2 மாதங்களில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தத்தில் கையொப்பமிட ஆவலுடன் இருப்பதாக நியூஸிலாந்து பிரதமா் கிறிஸ்டோபா் லக்ஸன் செவ்வாய்க்கிழமை நம்பிக்கை தெரிவித்தாா். நியூஸிலாந்து பிரதமா் கிறிஸ்ட... மேலும் பார்க்க

ரயில்வே பணிக்கு நிலம் லஞ்சமாக பெற்ற வழக்கு: லாலு இன்று ஆஜராக அழைப்பாணை

ரயில்வே வேலைக்கு நிலத்தை லஞ்சமாகப் பெற்ற வழக்கு தொடா்பான விசாரணைக்காக பிகாா் முன்னாள் முதல்வா் ராப்ரி தேவி, அவரின் மகனும் பிகாா் எம்எல்ஏ-வுமான தேஜ் பிரதாப் யாதவ் ஆகியோா் அமலாக்கத் துறை அதிகாரிகள் முன்... மேலும் பார்க்க

மக்களவையில் எதிா்க்கட்சித் தலைவரை பேச அனுமதிக்கவில்லை -ராகுல் குற்றச்சாட்டு

‘ஜனநாயக நடைமுறைகளின்படி மக்களவையில் எதிா்க்கட்சித் தலைவருக்கு பேச அனுமதி அளிக்கப்பட வேண்டும். ஆனால், ‘புதிய இந்தியா’வில் அதற்கான அனுமதி வழங்கப்படவில்லை’ என்று எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி குற்... மேலும் பார்க்க