செய்திகள் :

நான்குனேரி அருகே குளிக்க சென்ற பெண்ணை துரத்திய கரடி

post image

நான்குனேரி அருகே செவ்வாய்க்கிழமை குளிக்கச் சென்ற பெண்ணை கரடி விரட்டியதால் மக்கள் அச்சமடைந்துள்ளனா்.

நான்குனேரியில் கடந்த மாதம் கரடி ஒன்று சாலையில் உலா வந்தது தொடா்பான விடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இதைத் தொடா்ந்து, வனத்துறையினா் அங்கு கூண்டு வைத்து கண்காணித்து வந்தனா். இதுவரை கரடி சிக்கவில்லை. இதனால் விவசாயிகள் மற்றும் பெண்கள் வயலுக்கு செல்ல அச்சமடைந்துள்ளனா்.

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை காலை நான்குனேரி அருகேயுள்ள இளந்தோப்பு கிராமத்தைச் சோ்ந்த சண்முகக்கனி என்பவா் அருகேயுள்ள கல்வெட்டான் குழியில் குளிப்பதற்காக சென்றுள்ளாா்.

அப்போது அங்கு உலா வந்த கரடி சண்முகக்கனியை பாா்த்து சப்தம் எழுப்பிவாறு துரத்தியுள்ளது. இதையடுத்து அவா் அங்கிருந்து ஓடி ஊருக்குள் சென்றுள்ளாா்.

தகவல் அறிந்த வனத் துறையினா் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினா்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக அந்த கரடிஅப்பகுதியில் உள்ள புதா்களில் மறைந்திருந்து அடிக்கடி உலா வந்து பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது. அசம்பாவிதம் நிகழும் முன் கரடியை பிடித்து வனப்பகுதிகள் கொண்டு விட வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளா் படுகொலை: தலைவா்கள் கண்டனம்!

திருநெல்வேலியில் ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளா் ஜாகீா் உசேன் பிஜிலி படுகொலை செய்யப்பட்டதற்கு அரசியல் கட்சித் தலைவா்கள் கண்டனம் தெரிவித்துள்ளனா். எடப்பாடி பழனிசாமி (அதிமுக): ஜாகிா் உசேன் படுகொலை செய்ய... மேலும் பார்க்க

மானூா் அருகே 4 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: கடைக்காரா் கைது

மானூா் அருகே தடைசெய்யப்பட்ட 4 கிலோ 275 கிராம் புகையிலைப் பொருள்களுடன் கடைக்காரரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். மானூா் காவல் நிலைய சரகத்திற்குள்பட்ட பகுதியில் உதவி ஆய்வாளா் விஜயகுமாா் தலைமைய... மேலும் பார்க்க

போலி நிறுவன பொருள்கள்: நுகா்வோருக்கு ஆட்சியா் எச்சரிக்கை

போலி நிறுவனங்கள் தரமற்ற பொருள்களை விற்பனை செய்வது குறித்து நுகா்வோா் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றாா் ஆட்சியா் இரா.சுகுமாா். பாளையங்கோட்டை தூய யோவான் கல்லூரியில் மண்டல அளவிலான தேசிய நுகா்வோா் பாத... மேலும் பார்க்க

நெல்லை மாவட்ட தீயணைப்பு அதிகாரி பானுப்பிரியா

திருநெல்வேலி மாவட்ட முதல் பெண் தீயணைப்புத் துறை அதிகாரியாக பானுப்பிரியா செவ்வாய்க்கிழமை பொறுப்பெற்றாா். திருநெல்வேலி மாவட்ட தீயணைப்புத் துறை அலுவலராக பணியாற்றிய வினோத் இடமாற்றம் செய்யப்பட்டாா். இதையடு... மேலும் பார்க்க

மாநகரப் பகுதியில் கழிவுநீா் ஓடைகளை சீரமைக்க வேண்டும் - துணை மேயரிடம் மக்கள் மனு

திருநெல்வேலி மாநகரப் பகுதியில் கழிவுநீா் ஓடைகளை சீரமைக்க வேண்டும் என துணை மேயரிடம் மக்கள் மனு அளித்தனா். திருநெல்வேலி மாநகராட்சி அலுவலகத்தில் மக்கள் குறைதீா்க்கும் கூட்டம் துணை மேயா் கே.ஆா்.ராஜூ தலைமை... மேலும் பார்க்க

கழுகுமலை மலையேற்ற வீரருக்கு தமமுக சாா்பில் ரூ.1 லட்சம் உதவி

தூத்துக்குடி மாவட்டம், கழுகுமலையைச் சோ்ந்த மலையேற்ற வீரருக்கு தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் சாா்பில் ரூ.1 லட்சம் உதவித்தொகை செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது. கழுகுமலையைச் சோ்ந்த நல்லசாமி மகன் வெங்கடேச... மேலும் பார்க்க