செய்திகள் :

பணிப்பெண்ணிடம் கூடுதல் சாவி; நடிகை நேகா வீட்டில் மாயமான ரூ.34 லட்சம் மதிப்பிலான நகை - வழக்கு பதிவு

post image

பாலிவுட் நடிகை நேகா மாலிக், மும்பை அந்தேரி பகுதியில் வசித்து வருகிறார். அவரது வீட்டில் ஷானாஸ் முஸ்தபா ஷேக் என்ற பெண் வேலை செய்து வந்தார். நடிகை நேகா அடிக்கடி பொது நிகழ்ச்சிகளுக்கு செல்லக்கூடியவர் என்பதால் நகைகளை அணிந்து விட்டு வீட்டு பீரோவில் வைப்பது வழக்கம். பீரோவையும் பூட்டமாட்டார்.

நேகாவின் தாயாரும் அடிக்கடி வீட்டு வேலைக்கார பெண் முன்னிலையில் நகையை அணிந்துவிட்டு அதனை கழற்றி அப்படியே வைத்துவிடுவது வழக்கம். நேகா தனது வீட்டு வேலைக்கார பெண்ணிடம் தன் வீட்டுச்சாவி ஒன்றை கொடுத்து வைத்திருந்தார். வீட்டில் தானோ அல்லது தனது தாயாரோ இல்லாத நேரத்தில் வீட்டிற்கு வந்தால் வீட்டு வேலையை செய்ய வசதியாக இருக்கும் என்று கருதி இவ்வாறு கொடுத்து வைத்திருந்தார்.

இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு நேகா படப்பிடிப்புகாக சென்ற நேரம் அவரது தாயார் மஞ்சு காலையில் அங்குள்ள குருத்வாராவிற்கு சென்றுவிட்டார்.

அந்த நேரத்தில் வீட்டு வேலைக்கார பெண் மட்டும் விட்டில் இருந்தார். வெளியில் சென்று இருந்த நேகா வீட்டிற்கு வந்து தான் அணிந்திருந்த நகைகளை கழற்றி வைத்தபோது ஏற்கனவே இருந்த நகைகள் காணாமல் போய் இருந்தது. இதையடுத்து நேகாவும், அவரது தாயாரும் சேர்ந்து மீண்டும் வீடு முழுக்க நகைகளை தேடிப்பார்த்தனர். ஆனால் வீட்டில் நகைகள் கிடைக்கவில்லை. வேலைக்கு வந்து கொண்டிருந்த வேலைக்கார பெண் வேலைக்கு வருவதை நிறுத்திவிட்டார். இதையடுத்து நேகா அம்போலி போலீஸில் புகார் செய்தார். அதன் அடிப்படையில் போலீஸார் பணிப்பெண் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தேனி : போலி நகை விற்பனை செய்தவர் கொன்று புதைப்பு; 7 பேர் கைது - நடந்தது என்ன?

கர்நாடக மாநிலம் பெங்களூரு பகுதியைச் சேர்ந்தவர் திலீப் (40). இவரும் இவரது சகோதரி மகன் கழுவா என்பவரும் (37) தேனி மாவட்டத்தில் வீடுகளில் அலங்காரத்திற்கு வைக்கும் கண்ணாடி பொருட்களை விற்பனை செய்து வந்தனர்.... மேலும் பார்க்க

MyV3Ads: `பணம் கிடைக்கவில்லை என்றால்...' - காவல்துறை முக்கிய அறிவிப்பு

கோவை மாவட்டத்தைத் தலையிடமாகக் கொண்டு MyV3Ads என்கிற நிறுவனம் இயங்கி வந்தது. APP -ல் விளம்பரம் பார்த்தால் பணம் என்று மக்களிடம் நூதன முறையில் ஆசையைத் தூண்டியது. அதை நம்பி தென்னிந்தியா முழுவதும் இருந்து ... மேலும் பார்க்க

தமிழகத்தை உலுக்கிய கண்ணகி, முருகேசன் ஆணவக் கொலை; புகாரை கூட ஏற்காத போலீஸ் - வழக்கு கடந்து வந்த பாதை

கடலூர் மாவட்டம், விருதாச்சலத்தை அடுத்த குப்பநத்தம் புதுக்காலனியைச் சேர்ந்த சாமிக்கண்ணு என்பவரின் மகன் முருகேசன். பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த முருகேசனுக்கும், அதே பகுதியில் வசித்த மாற்று சமூகத்தைச் சேர... மேலும் பார்க்க

`போலி’ ஆன்லைன் கோர்டில் குற்றவாளியாக அறிவிப்பு - 71 வயது மூதாட்டியிடம் ரூ.4.82 கோடி அபகரிப்பு

மும்பையில் ஆன்லைன் மோசடிகள் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. மத்திய அரசு இது தொடர்பாக விழிப்புணர்வு பிரசாரம் செய்தபோதிலும் பொதுமக்கள் இது போன்ற மோசடிக்கு ஆளாகி வருகின்றனர். குறிப்பாக வயதானவர்கள் மற்ற... மேலும் பார்க்க

தகராறு முற்றியதால் மனைவியைக் கொன்று, தற்கொலை செய்த கணவர்; நிர்க்கதியான 3 குழந்தைகள்; நடந்தது என்ன?

புதுக்கோட்டை மாவட்டம், வடவாளம் வட்டம், கீழக்காயம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் வீரமுத்து. இவர் பெயிண்டராக வேலை செய்து வருகிறார்.இவருக்கு ராஜேஸ்வரி என்ற மனைவியும், ஒரு மகன், இரண்டு மகள் என்று மூன்று குழ... மேலும் பார்க்க

கௌதம் கம்பீருக்கு கொலை மிரட்டல் விடுத்த கல்லூரி மாணவர் கைது!

இந்திய கிரிக்கெட் தலைமை பயிற்சியாளரும் முன்னாள் பாஜக எம்.பியுமான கவுதம் கம்பீருக்கு கொலை மிரட்டல் விடுத்த மாணவர் கைது செய்யப்பட்டுள்ளார். டெல்லி காவல்துறையினர் கைது செய்துள்ள 21 வயது இஞ்சினியரிங் மாணவ... மேலும் பார்க்க