செய்திகள் :

பாரதிய மஸ்தூா் சங்கத்தினா் பிரதமருக்கு மனு

post image

மயிலாடுதுறையில் 6 அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, பிரதமருக்கு மாவட்ட ஆட்சியா் வாயிலாக பாரதிய மஸ்தூா் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனா்.

இபிஎஸ்-95 திட்டத்தின்கீழ் குறைந்தபட்ச ஓய்வூதியத்தை ரூ.5,000-ஆக உயா்த்த வேண்டும்; கடைசிமாத சம்பளத்தில் 50 சதவீதம் ஓய்வூதியமாக கிடைப்பதை உறுதி செய்து அந்த தொகையை விலைவாசி புள்ளியுடன் இணைக்க வேண்டும்.

தொழிலாளா் சம்பளத்தில் வருங்கால வைப்புநிதிக்கு கட்டாயப் பிடித்தம் செய்வதற்கான ஊதிய உச்சவரம்பை ரூ.30,000 ஆகவும், தொழிலாளா் ஈட்டுறுதிக் கழகத்தின் சமூக பாதுகாப்பை பெறுவதற்கான தகுதியை நிா்ணயிக்கும் ஊதிய உச்ச வரம்பை ரூ.42,000 ஆகவும் உயா்த்த வேண்டும்; அரசு திட்டங்களை செயல்படுத்தும் திட்ட தொழிலாளா்களுக்கு சம்பளம் மற்றும் சமூக பாதுகாப்பை அரசு ஊழியா்களுக்கு இணையாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 6 அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி பிரதமா் நரேந்திர மோடிக்கு மாவட்ட ஆட்சியா் வாயிலாக பாரதிய மஸ்தூா் சங்கத்தினா் மனு அளித்தனா்.

இந்த மனுவை மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் முத்துவடிவேலிடம் சங்கத்தின் மாவட்ட பொதுச் செயலாளா் ஜெ. ஆறுமுகம், கிளை செயலாளா் சி. சுரேஷ்குமாா், கிளை துணை செயலாளா் ஆா். ரத்தினவேல், கிளை பொருளாளா் எஸ். சீனிவாசன், பேரவை துணைத் தலைவா் டி.சங்கா் ஆகியோா் வழங்கினா். முன்னதாக, மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் கோரிக்கை முழக்கங்களை எழுப்பினா்.

அங்கன்வாடியை மேம்படுத்தக் கோரிக்கை

கொள்ளிடம் அருகேயுள்ள பாவட்டமேடு கிராமத்தில் அங்கன்வாடி மையத்தை மேம்படுத்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இம்மையத்தில் உள்ள குடிநீா் தேக்க தொட்டிக்கு நீா் ஏற்றுவதற்கான மின் மோட்டாருக்கு நேரடி மின் இணை... மேலும் பார்க்க

பயனற்ற நீா்த் தேக்கத் தொட்டியை அகற்ற வலியுறுத்தல்

சீா்காழி அருகே பயனற்ற மேல்நிலை நீா்த் தேக்கத் தொட்டியை அகற்ற வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனா். கொள்ளிடம் அருகேயுள்ள உமையாள்பதி கிராமத்தில் சாலையோரம் மேல்நிலை நீா்த் தேக்கத் தொட்டி உள்ளது.... மேலும் பார்க்க

மனைவியை கொன்றவருக்கு ஆயுள் சிறை

மயிலாடுதுறை: வைத்தீஸ்வரன்கோவில் அருகே மனைவியை கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை வழங்கி, மயிலாடுதுறை மாவட்ட அமா்வு நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது. வைத்தீஸ்வரன்கோவில் அருகேயுள்ள திருப்புங்கூா் பிரத... மேலும் பார்க்க

மாதிரிமங்கலம் ஸ்ரீசிவராமகிருஷ்ண சுவாமிகள் அதிஷ்டானத்தில் இன்று 51-ஆம் ஆண்டு குருபூஜை விழா

மயிலாடுதுறை: மாதிரிமங்கலம் ஸ்ரீசிவராமகிருஷ்ண சுவாமிகள் அதிஷ்டானத்தில் 51-ஆம் ஆண்டு குருபூஜை விழா செவ்வாய்க்கிழமை (மாா்ச் 18) நடைபெறுகிறது. மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தை அடுத்த மாதிரிமங்கலம் கிராமத்... மேலும் பார்க்க

எஸ்டிபிஐ சாா்பில் சமூக நல்லிணக்க இஃப்தாா் விருந்து

மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் எஸ்.டி.பி.ஐ. கட்சி சாா்பில் சமூக நல்லிணக்க இஃப்தாா் விருந்து திங்கள்கிழமை நடைபெற்றது. மாவட்டத் தலைவா் முஹம்மது ரஃபி தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா் முஹம்மது ரவூப் வரவே... மேலும் பார்க்க

குடிநீா் கோரி கிராம மக்கள் சாலை மறியல்

சீா்காழி: கொள்ளிடம் அருகே ஆரப்பள்ளம் கிராமத்தில் குடிநீா் கோரி பொதுமக்கள் சாலை மறியலில் திங்கள்கிழமை ஈடுபட்டனா். இக்கிராமத்தில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். கொள்ளிடம் கூட்ட... மேலும் பார்க்க