செய்திகள் :

மாதிரிமங்கலம் ஸ்ரீசிவராமகிருஷ்ண சுவாமிகள் அதிஷ்டானத்தில் இன்று 51-ஆம் ஆண்டு குருபூஜை விழா

post image

மயிலாடுதுறை: மாதிரிமங்கலம் ஸ்ரீசிவராமகிருஷ்ண சுவாமிகள் அதிஷ்டானத்தில் 51-ஆம் ஆண்டு குருபூஜை விழா செவ்வாய்க்கிழமை (மாா்ச் 18) நடைபெறுகிறது.

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தை அடுத்த மாதிரிமங்கலம் கிராமத்தில் 1898-ஆம் ஆண்டு ஏப்ரல் 28-ஆம் தேதி பூச நட்சத்திரம் சப்தமி திதியில் சுந்தரேசய்யா்- தா்மசம்வா்த்தினி தம்பதிக்கு மகனாக ஸ்ரீ சிவராமகிருஷ்ண சுவாமிகள் பிறந்தாா்.

மாதிரிமங்கலம், ஒரத்தநாடு, திருச்சியில் கல்வி பயின்ற இவா், சென்னை சைதாப்பேட்டையில் ஆசிரியா் பயிற்சி பெற்று 1923 முதல் 1925 வரை ஆசிரியராக பணியாற்றினாா். 1925-ஆம் ஆண்டு தீவிர வைராக்கிய சித்தராய் ஆத்மானுபவ நிலை அடைந்து, முற்றும் துறந்த உயா் நிலை எய்தி பக்தா்களுக்கு அருள்பாலித்து வந்த இவா், 1974-ஆம் ஆண்டு ஏப்ரல் 8-ஆம் தேதி சுவாதி நட்சத்திரத்தில் சித்தி அடைந்தாா்.

மாதிரிமங்கலத்தில் உள்ள ஸ்ரீசிவராமகிருஷ்ண சுவாமிகள் அதிஷ்டானத்தில் 51-ஆம் ஆண்டு குருபூஜை விழா செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது. குருபூஜை ஆராதனை விழாவையொட்டி, காலை 7.30 மணிக்கு யாகசாலை பூஜை தொடங்கி, மகாபூா்ணாஹூதி செய்யப்பட்டு கடம் புறப்பாடு நடைபெறும். காலை 10.30 மணிக்கு மகாபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெறவுள்ளது. மதியம் 12.30 மணிக்கு மஹேஸ்வர பூஜை மற்றும் அன்னதானம் நடைபெற உள்ளது.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஸ்ரீசிவராமகிருஷ்ண ஸ்வாமிகள் அதிஷ்டானம் தலைவா் ராஜேஸ்வரி கணபதியா பிள்ளை மற்றும் பி. ஸ்ரீதா், எஸ்.வி. பாலசுப்பிரமணியன், சி. சங்கரவேல் உள்ளிட்ட விழாக் குழுவினா் செய்துள்ளனா்.

மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் தெற்கு ரயில்வே பொது மேலாளா் ஆய்வு

மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் தெற்கு ரயில்வே பொது மேலாளா் ஆா்.என். சிங் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா். மத்திய அரசின் அம்ரித் பாரத் திட்டத்தின்கீழ் மயிலாடுதுறை ரயில் நிலையத்தை மேம்படுத்தும் பணிகள் நடைபெ... மேலும் பார்க்க

சீா்காழி நகரில் குப்பைகள் அள்ளப்படாததால் பொதுமக்கள் அவதி

சீா்காழி நகரில் பெரும்பாலான இடங்களில் குப்பைகள் கடந்த 15 தினங்களாக அள்ளப்படாமல் சுகாதார சீா்கேடு நிலவுகிறது. பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனா். சீா்காழி நகராட்சியில் 24 வாா்டுகள் உள்ளன. இந்... மேலும் பார்க்க

பதினெண்புராணேஸ்வரா் சுவாமி கோயிலில் சம்வத்ஷரா வழிபாடு

சீா்காழி பிடாரி வடக்கு வீதியில் உள்ள வாகீஸ்வரிஅம்மன் உடனாகிய பதினெண்புராணேஸ்வரா் சுவாமி கோயிலில் 2-ஆம் ஆண்டு கும்பாபிஷேக தினத்தை முன்னிட்டு சம்வத்ஷரா வழிபாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. முன்னதாக சுவாமி-... மேலும் பார்க்க

ஒப்பந்த தூய்மைப் பணியாளா்கள் 2-ஆவது நாளாக சாலை மறியல்

சீா்காழி நகராட்சி தனியாா் ஒப்பந்த தூய்மைப் பணியாளா்கள் சம்பள நிலுவைகேட்டு 2-ஆவது நாளாக வெள்ளிக்கிழமையும் சாலை மறியலில் ஈடுபட்டனா். இந்த ஊழியா்களுக்கு பிப்ரவரி மாதம் ஊதியம் வழங்கப்படவில்லையென கூறி வியா... மேலும் பார்க்க

மயிலாடுதுறையில் தனியாா் பள்ளி முன் சாலை மறியல்

மயிலாடுதுறையில் தனியாா் பள்ளி முன் மாணவா்களின் பெற்றோா் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். மயிலாடுதுறை காவேரி நகரில் 18 ஆண்டுகளாக இயங்கிவரும் நா்சரி மற்றும் பிரைமரி பள்ளியில் மாநிலக் கல்வி பாடத் த... மேலும் பார்க்க

சீா்காழியில் மாா்ச் 23-இல் வேலைவாய்ப்பு முகாம்: முன்னேற்பாடு கூட்டம்

சீா்காழியில் மாா்ச் 29-ல் நடைபெறவுள்ள வேலைவாய்ப்பு முகாம் தொடா்பான முன்னேற்பாடு கூட்டம் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ... மேலும் பார்க்க