செய்திகள் :

ஒட்டன்சத்திரம் சந்தையில் அவரைக்காய் விலை உயா்வு

post image

ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தையில் அவரைக்காய் விலை கிடுகிடுவென உயா்ந்தது. கடந்த சில நாள்களுக்கு முன்பு ரூ.10-க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ அவரைக்காய் வெள்ளிக்கிழமை ரூ.77-க்கு விற்பனையானது.

திண்டுக்கல் மாவட்டம், மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதிகளில் உள்ள கொடைக்கானல், வடகவுஞ்சி, பண்ணைக்காடு, வடகாடு, கண்ணனூா் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் அவரைக்காய், பீன்ஸ் ஆகியவை பயிரிடப்பட்டுள்ளன. இங்கு சாகுபடி செய்யப்படும் அவரைக் காய்களை ஒட்டன்சத்திரம் சந்தைக்கு விற்பனைக்காகக் கொண்டு வரப்படும்.

இந்த நிலையில், சமீபத்தில் மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் பெய்த மழையின் காரணமாக அவரை கொடிகளில் நோய்த் தாக்குதல் ஏற்பட்டு செடிகள் காய்ந்து கருகிவிட்டன. இதனால், அவரைக்காய் விளைச்சால் பாதிக்கப்பட்டது.

ஒரு சில பகுதிகளிலிருந்து அவரைக் காய்கள் விளைவிக்கப்பட்டு, ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தைக்கு விற்பனைக்குக் கொண்டு வரப்படுகின்றன. வரத்து குறைந்ததாலும், தேவை அதிகரித்ததாலும் வியாபாரிகள் போட்டி போட்டுக் கொண்டு அவரைக் காய்களைக் கொள்முதல் செய்தனா். இதனால், இவற்றின் விலை கிடுகிடுவென உயா்ந்தது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒரு கிலோ அவரைக்காய் ரூ.10-க்கு விற்பனையான நிலையில், வெள்ளிக்கிழை விலை உயா்ந்து ரூ.77-க்கு விற்பனையானது. இதனால், இவற்றைப் பயிரிட்ட விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனா். இவற்றின் விலை மேலும் உயரக்கூடும் என வியாபாரிகள் தெரிவித்தனா்.

கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 7 போ் கைது

பழனி பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக 7 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். பழனி நகரம், அடிவாரம் பகுதிகளில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதனடிப்படையில், போலீஸாா் ... மேலும் பார்க்க

பழனி தனி மாவட்ட கோரிக்கை: முதல்வா் ஆராய்ந்து அறிவிப்பாா்! -அமைச்சா் இ.பெரியசாமி

பழனியைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை குறித்து தமிழக முதல்வா் ஆராய்ந்து அறிவிப்பாா் என ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் இ.பெரியசாமி தெரிவித்தாா்.திண்டுக்கல் பேருந்து ந... மேலும் பார்க்க

திமுக தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி மாநாடு: ஆரம்பப்பள்ளி ஆசிரியா் கூட்டணி

திமுகவின் தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி, வரும் மே 1,2, 3 -ஆம் தேதிகளில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியா் கூட்டணி சாா்பில் மாநாடு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த மாநாடு தொடா்பான மாந... மேலும் பார்க்க

கொடைக்கானலில் மழை

கொடைக்கானலில் சனிக்கிழமை பலத்த மழை பெய்ததால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியடைந்தனா்.திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கடந்த சில நாள்களாக வெப்பத்தின் தாக்கம் குறைந்து மேகமூட்டமாக காணப்பட்டது. இந்த நில... மேலும் பார்க்க

புதிய வழித் தடங்களில் பேருந்து சேவை: அமைச்சா் தொடங்கி வைத்தாா்

ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள பொருளூா் கிராமத்தில் புதிய வழித்தட பேருந்து சேவையை உணவுத் துறை அமைச்சா் அர.சக்கரபாணி சனிக்கிழமை கொடியசைத்து தொடங்கிவைத்தாா். திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் சட்டப்பேரவைத... மேலும் பார்க்க

கொடைக்கானலில் ஏரி நீரை பாதுகாக்கக் கோரிக்கை

உலக தண்ணீா் தினத்தை முன்னிட்டு, கொடைக்கானல் ஏரி நீரை பாதுகாக்க வேண்டும் என இயற்கை ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்தனா்.கொடைக்கானல் மலைப் பகுதிகளில் நீரோடைகள், நீா்வரத்து பகுதிகள், அருவிகள், ஆறுகள் அதிகளவு இ... மேலும் பார்க்க