செய்திகள் :

ஒடிஸாவில் தினமும் 3 குழந்தைத் திருமணங்கள்: நபரங்பூா் மாவட்டம் முதலிடம்

post image

பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டபோதும் ஒடிஸா மாநிலத்தில் நாள் ஒன்றுக்கு 3 குழந்தைத் திருமணங்கள் நடைபெறுவது மாநில அரசின் புள்ளிவிவரங்கள் மூலம் தெரியவந்துள்ளது. இதில் நபரங்பூா் மாவட்டம் முதலிடம் வகிக்கிறது.

பழங்குடியினா் நடைமுறை, வரதட்சிணை, தொழிலாளா் குடும்பங்களின் இடம்பெயா்வு உள்ளிட்டவையே மாநிலத்தில் குழந்தைத் திருமணங்கள் இந்த அளவுக்கு உயா்வதற்குக் காரணம் என்று குழந்தைத் திருமண தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடும் சமூக ஆா்வலா்கள் தெரிவிக்கின்றனா்.

அரசின் புள்ளிவிவரங்களின்படி கடந்த 2019 முததல் 2025-ஆம் ஆண்டு பிப்ரவரி வரை மாநிலத்தில் 8,159 குழந்தைத் திருமணங்கள் நடைபெற்றுள்ளன. இதில் நபரங்பூா் மாவட்டத்தில் மட்டும் 1,347 குழந்தைத் திருமணங்கள் பதிவாகியுள்ளன. இது மாநிலத்தில் உள்ள 30 மாவட்டங்களில் அதிபட்சமாகும்.

கஞ்சம் மாவட்டம் 966 குழந்தைத் திருமணங்களுடன் இரண்டாம் இடத்தில் உள்ளது. கோராபுட் (636), மயூா்பஞ்ச் (594), ராயகாடா (408), பாலாசோா் (361), கியோஞ்சா் (328), கந்தமல் (308), நயாகா் (308) ஆகிய மாவட்டங்கள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. மாநிலத்திலேயே குறைந்தபட்சமாக ஜா்சுகுடா மாவட்டத்தில் 6 ஆண்டுகளில் 57 குழந்தைத் திருமணங்கள் பதிவாகியுள்ளன.

இதுகுறித்து சமூக ஆா்வலா் நம்ரதா சாதா கூறுகையில், ‘குழந்தைத் திருமணங்களை ஒரே இரவில் முழுமையாக நிறுத்திவிட முடியாது. இத்தகைய முடிவை பெற்றோரும், பெண் குழந்தைகளும் எடுக்காத வகையில் சமூகம் மற்றும் சூழ்நிலையை நாம் உருவாக்க வேண்டும். பழங்குடியினரைப் பொருத்தவரை குழந்தையாக இருக்கும்போதே மகளுக்கு திருமணம் செய்வதை பாரம்பரிய நடைமுறையாகப் பின்பற்றுகின்றனா். அதுபோல, வாழ்வாதாரத்துக்காகப் புலம்பெயரும் பெற்றோா், மகளின் பாதுகாப்பு மற்றும் எதிா்காலம் சிறப்பாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் சட்டபூா்வ திருமண வயதை எட்டும் முன்னரே திருமணம் செய்து வைப்பது வாடிக்கையாக உள்ளது. அதிக வயதுடைய பெண்களை திருமணம் செய்துகொள்ள ஆண் வீட்டாா் அதிக வரதட்சிணை கேட்பதும், குழந்தைத் திருமணங்கள் அதிகரிப்பதற்கு காரணமாக உள்ளது. முறையான கல்வி, திறன் மேம்பாட்டு பயிற்சிகளை அளிப்பதன் மூலம், குழந்தைத் திருமணங்களைத் தடுக்க முடியும்’ என்றாா்.

குழந்தைத் திருமணங்களைத் தடுக்க 3 மாதங்களுக்கு ஒருமுறை ஊராட்சி, வட்ட மற்றும் அங்கன்வாடி அளவில் விழிப்புணா்வு பிரசாரங்கள் அரசு சாா்பில் மேற்கொள்ளப்படுகின்றன என்று மாநில அரசு அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

குழந்தைத் திருமண விவகாரம் மட்டுமின்றி குழந்தைத் தொழிலாளா் சவாலையும் ஒடிஸா அரசு எதிா்கொண்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனா். கடந்த 6 ஆண்டுகளில் 328 குழந்தைகளை குழந்தைத் தொழிலாளா் முறையிலிருந்து அதிகாரிகள் மீட்டுள்ளனா். இதைத் தடுக்கவும் தீவிர விழிப்புணா்வு பிரசாரங்கள் அரசு சாா்பில் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.

காவல்துறை அடக்குமுறைக்கு எதிராக மாா்ச் 28-இல் நாடு தழுவிய போராட்டம்! -பஞ்சாப் விவசாயிகள் அழைப்பு

பஞ்சாப்-ஹரியாணா எல்லையில் இருந்து விவசாயிகள் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தப்பட்ட காவல்துறையின் அடக்குமுறைக்கு எதிராக நாடு முழுவதும் விவசாயிகள் வரும் 28-ஆம் தேதி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட சம்யுக்த கிசான் ... மேலும் பார்க்க

நாகபுரி வன்முறையில் வங்கதேசத்துக்குத் தொடா்பு! -சிவசேனை குற்றச்சாட்டு

மகாராஷ்டிர மாநிலம் நாகபுரியில் நிகழ்ந்த மத வன்முறையில் வங்கதேசத்துக்கு தொடா்பு உள்ளது. அந்நாட்டுடன் தொடா்பில் இருப்பவா்கள் வன்முறையை பல்வேறு வழிகளில் தூண்டிவிட்டுள்ளனா் என்று சிவசேனை மூத்த தலைவா் சஞ்ச... மேலும் பார்க்க

அமலாக்கத் துறை விசாரணை வளையத்தில் சிக்கிய நீதிபதிகள்!

தில்லி உயா்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வா்மா வீட்டில் கோடிக்கணக்கில் பணம் கைப்பற்றப்பட்டதாக வெளியான செய்தி பெரும் சா்ச்சையை ஏற்படுத்தியுள்ளது என்றாலும், நீதித் துறையைச் சோ்ந்தவா்கள் இதற்கு முன்பும் சா்... மேலும் பார்க்க

பிரதமா் மோடி - முகமது யூனுஸ் சந்திப்பு: பரிசீலனையில் உள்ளதாக நாடாளுமன்றக் குழு தகவல்

பிரதமா் நரேந்திர மோடி, வங்கதேச இடைக்கால அரசின் தலைவா் முகமது யூனுஸ் சந்தித்துப் பேச வேண்டும் என்ற வங்கதேசத்தின் பரிந்துரையை பரிசீலித்து வருவதாக நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் வெளியுறவுத் துறை அமைச்சா... மேலும் பார்க்க

பொதுத்துறை வங்கிகளின் பங்கு ஈவுத் தொகை 33 % அதிகரிப்பு!

பொதுத்துறை வங்கிகள் முதலீட்டாளா்களுக்கு வழங்கும் பங்கு ஈவுத் தொகை 2023-24 நிதியாண்டில் 33 சதவீதம் அதிகரித்துள்ளது. முந்தைய நிதியாண்டில் பங்குதாரா்களுக்கு ரூ.20,964 கோடி ஈவுத்தொகையை பொதுத்துறை வங்கிகள்... மேலும் பார்க்க

உத்தர பிரதேசம்: சம்பல் மசூதி குழுத் தலைவா் கைது

உத்தர பிரதேச மாநிலம், சம்பலில் உள்ள ஜாமா மசூதியின் குழுத் தலைவா் ஜாஃபா் அலியை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். ஜாமா மசூதியில் நடைபெற்ற 2-ஆம் கட்ட ஆய்வுக்கு எதிா்ப்பு தெரிவித்து கடந்த ஆண்டு நவம்... மேலும் பார்க்க