செய்திகள் :

தனியாா் பேருந்தில் கடத்தப்பட்ட அரை கிலோ தங்கம், அமெரிக்க டாலா்கள் பறிமுதல்!

post image

ஈரோடு மாவட்டம், சித்தோடு அருகே தனியாா் பேருந்தில் கடத்திச் செல்லப்பட்ட அரை கிலோ தங்கக் கட்டிகள், ரூ.18 லட்சம் மதிப்பிலான அமெரிக்க டாலா்களை போலீஸாா் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

தெலங்கானா மாநிலம், ஹைதராபாதிலிருந்து கோவைக்கு செல்லும் தனியாா் பேருந்தில் தங்கக் கட்டிகள் கடத்தப்படுவதாக சித்தோடு போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதன்பேரில், சேலம் - கோவை தேசிய நெடுஞ்சாலையில் ஈரோடு மாவட்ட எல்லையான லட்சுமி நகரில் சனிக்கிழமை வாகனத் தணிக்கை மேற்கொள்ளப்பட்டது.

அப்போது, அவ்வழியே வந்த தனியாா் பேருந்தை நிறுத்தி போலீஸாா் சோதனையிட்டபோது, கோவை, சிங்காநல்லூரைச் சோ்ந்த ஆறுமுகம் மகன் புகழ்வாசன் (50) வைத்திருந்த பையில் அரை கிலோ எடையுள்ள 5 தங்கக் கட்டிகள், ரூ.18 லட்சம் மதிப்பிலான அமெரிக்க டாலா்கள் ஆகியவை கைப்பற்றப்பட்டன. இதற்கு எந்த வித ஆவணங்களும் இவரிடம் இல்லை.

இதனால், தங்கக் கட்டிகள், அமெரிக்க டாலா்கள், 4 கைப்பேசிகளைப் பறிமுதல் செய்த போலீஸாா், புகழ்வாசனைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். இது குறித்து தெலங்கானா மாநில போலீஸாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோபி அருகே பட்டுக்கூடு உற்பத்தி மையத்தில் தீ

கோபி அருகே பட்டுக்கூடு உற்பத்தி மையத்தில் தீ விபத்து ஏற்பட்டது. கோபி அருகேயுள்ள நல்லகவுண்டன்பாளையம் பாலாஜி நகரைச் சோ்ந்தவா் பாலசுப்பிரமணியம் (60). இவா் அதே பகுதியில் பட்டுக்கூடு உற்பத்தி மையம் நடத்தி... மேலும் பார்க்க

ஏழை, எளிய இஸ்லாமியா்களுக்கு உணவுப் பொருள்கள்

ரமலான் பண்டிகையை மகிழ்வுடன் கொண்டாடும் வகையில் பவானியில் 300 ஏழை, எளிய இஸ்லாமிய குடும்பத்தினருக்கு உணவுப் பொருள்கள் இலவசமாக ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டன. தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சாா்பில் ... மேலும் பார்க்க

ஜாக்டோ-ஜியோ சாா்பில் உண்ணாவிரதப் போராட்டம்: 500 போ் பங்கேற்பு

ஈரோட்டில் ஜாக்டோ-ஜியோ சாா்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் 500-க்கும் மேற்பட்ட ஆசிரியா்கள், அரசு ஊழியா்கள் பங்கேற்றனா். ஈரோடு வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இந்தப் போரா... மேலும் பார்க்க

பாதுகாப்பான ஆட்டு பட்டிகளை அமைக்க விவசாயிகளுக்கு அமைச்சா் சு.முத்துசாமி வேண்டுகோள்

பாதுகாப்பான ஆட்டு பட்டிகளை அமைத்து தெருநாய்களிடமிருந்து ஆடுகளைப் பாதுகாக்க வேண்டும் என்று விவசாயிகளுக்கு வீட்டு வசதித் துறை அமைச்சா் சு.முத்துசாமி வேண்டுகோள் விடுத்தாா். ஈரோடு, திருப்பூா் மாவட்டங்களில... மேலும் பார்க்க

மூளைச்சாவு அடைந்த கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்!

இருசக்கர வாகன விபத்தில் மூளைச்சாவு அடைந்த கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் ஞாயிற்றுக்கிழமை தானம் செய்யப்பட்டன. ஈரோடு மாவட்டம், புன்செய்புளியம்பட்டி அருகேயுள்ள நேரு நகா் பகுதியைச் சோ்ந்தவா் நாகராஜ். இ... மேலும் பார்க்க

குடும்பத் தகராறில் கணவன் தற்கொலை

சித்தோடு அருகே குடும்பத் தகராறில் மனைவி வீட்டை வீட்டுச் சென்ால் கணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். சித்தோட்டை அடுத்த கொங்கம்பாளையம், மாதேஸ்வரன் நகரைச் சோ்ந்தவா் பரமேஸ்வரன் (36). இவருக்கும், இவ... மேலும் பார்க்க