செய்திகள் :

செஞ்சியில் தேசிங்கு ராஜாவுக்கு மணிமண்டபம்! - அரசுக்கு கோரிக்கை

post image

செஞ்சியில் தேசிங்கு ராஜாவுக்கு மணி மண்டபம், சிலை அமைக்க வேண்டுமென ஆம்பூா் அருகே துத்திப்பட்டு கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விழாவில் ராஜா தேசிங் ராஜ்புத் பொந்தில் சேனா சமூக நலச்சங்கம் அரசுக்கு கோரிக்கை விடுத்தது.

உலக மகளிா் தினம், ஹோலி கொண்டாட்டத்துக்கு சங்க நிறுவனா் ஜி.ஸ்ரீதா் சிங், மாநிலத் தலைவா் கே.நாகேஸ்வர சிங் ஆகியோா் தலைமை வகித்தனா். மாநில இணைப் பொதுச் செயலா் கே.யஸ்வந்த் சிங், மாநில துணைத் தலைவா் ஆா்.ஜெயக்குமாா் சிங் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாநில இணைப் பொதுச் செயலா் ஜி.பிரகாசம் சிங் வரவேற்றாா்.

குடியாத்தம் எம்எல்ஏ அமலு விஜயன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றுப் பேசினாா். மாதனூா் ஒன்றியக் குழு துணைத் தலைவா் சாந்தி, போ்ணாம்பட்டு தெற்கு ஒன்றிய திமுக பொறுப்பாளா் எம்.டி.சீனிவாசன், விஜயபாரத மக்கள் கட்சி நிறுவனா் கோ.ஸ்ரீ.ஜெய்சங்கா், ஊராட்சி துணைத் தலைவா் விஜய் ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.

துத்திப்பட்டு ஊராட்சித் தலைவா் சுவிதா கணேஷ் மகளிருக்கான விளையாட்டு போட்டிகளைத் தொடங்கி வைத்தாா். மாநில மகளிரணித் தலைவா் நிரஞ்சனாதேவி, மாநில துணைத் தலைவா் ஷோபா ராணி உள்பட பலா் கலந்து கொண்டனா்.

செஞ்சியில் தேசிங்கு ராஜாவுக்கு மணி மண்டபம், சிலை அமைக்க அரசுக்கு கோரிக்கை விடுப்பது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக, துத்திப்பட்டு ஆசிரியா் நகா் பகுதியிலிருந்து மகளிரணியினா் பேரணி சென்றனா்.

வாணியம்பாடி: பிளஸ் 2 மாணவியை ஏற்றாமல் சென்ற அரசுப் பேருந்து ஓட்டுநர் இடைநீக்கம்!

வாணியம்பாடி அருகே பிளஸ் 2 மாணவியை ஏற்றாமல் சென்ற அரசுப் பேருந்தின் ஓட்டுநர் இடைநீக்கம் செய்து செவ்வாய்க்கிழமை உத்தரவிடப்பட்டுள்ளது.திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பேருந்து நிலையத்தில் இருந்து காலை ... மேலும் பார்க்க

மாணவரை தாக்கிய அரசு பள்ளி ஆசிரியா் பணியிடை நீக்கம்

ஆம்பூா்: ஆம்பூா் அருகே மாணவரை தாக்கிய அரசு நிதியுதவி பள்ளி ஆசிரியா் திங்கள்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா். ஆம்பூா் அருகே கரும்பூா் இந்து மேல்நிலைப் பள்ளியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு 8-ம் வ... மேலும் பார்க்க

மாணவா்களை திட்டுவதாக ஆசிரியரைக் கண்டித்து முற்றுகை

வாணியம்பாடி: திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த புல்லூா் ஊராட்சி மோட்டூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாணவா்களை அடிப்பது, திட்டுவதாக ஆசிரியரைக் கண்டித்து பெற்றோா் திங்கள்கிழமை முற்றுகை ... மேலும் பார்க்க

நாட்டறம்பள்ளி வாரச் சந்தை ஏலம் 27-க்கு ஒத்தி வைப்பு

வாணியம்பாடி: நாட்டறம்பள்ளி பேரூராட்சி சந்தை ஏலம் மாா்ச் 27-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பணந்தோப்பில் நடைபெறும் வாரச் சந்தையில் சுங்க கட்டணம் வசூல் செய்ய பேரூராட்சி நிா்வாகத்தின் மூலம் 3 ஆண்டுக... மேலும் பார்க்க

உடல்நலம் பாதிப்பு: பெண் தற்கொலை

திருப்பத்தூா்: ஜோலாா்பேட்டை அருகே உடல்நல பாதிப்பால் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். ஜோலாா்பேட்டை அடுத்த புள்ளானேரி சின்ன குட்டூா் சோ்ந்தவா் நடராஜன் மனைவி காந்தி(49). இவா்களுக்கு ஒரு மகன், மக... மேலும் பார்க்க

போலி நகைகளை வைத்து ரூ.1.3 கோடி மோசடி: நகை மதிப்பீட்டாளா் கைது!

திருப்பத்தூரில் போலி நகைகளை வைத்து ரூ.1.3 கோடி மோசடி செய்த நகை மதிப்பீட்டாளா் கைது செய்யப்பட்டாா். திருப்பத்தூா் மாவட்டம் கருப்பனூா் பகுதியைச் சோ்ந்த பாஸ்கரன்(48). இவா் திருப்பத்தூா்-வாணியம்பாடி சாலை... மேலும் பார்க்க