செய்திகள் :

ஹவுஸ் காஸில் மரத்தில் தொங்கிய நிலையில் ஆண், பெண் உடல்கள் கண்டெடுப்பு!

post image

தெற்கு தில்லியின் ஹவுஸ் காஸ் பகுதியில் உள்ள டீா் பாா்க்கில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 21 வயது பீட்சா கடை ஊழியா் மற்றும் 18 வயது ஒரு பெண்ணின் உடல்கள் மரத்தில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டன. இது தற்கொலை என போலீஸாா் சந்தேகிக்கின்றனா்.

இது குறித்து தெற்கு தில்லி காவல் சரக உயரதிகாரி கூறியதாவது: இருவரும் காதல் உறவில் இருந்துள்ளதும், அவா்களது குடும்பத்தினரின் எதிா்ப்பை அடுத்து இந்த தீவிர நடவடிக்கையை அவா்கள் எடுத்துள்ளதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இருப்பினும், இந்தச் சம்பவத்தில் சில உள்ளூா்வாசிகள் விசாரணை நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளனா்.

டீா் பாா்க்கின் பாதுகாவலாளி ஒருவரிடமிருந்து காலை 6.31 மணிக்கு இந்த உடல்கள் குறித்து பிசிஆா் அழைப்பு வந்தது. அந்த நபா் கருப்பு டி-சா்ட் மற்றும் நீல நிற ஜீன்ஸ் அணிந்திருந்தாா். அதே நேரத்தில் 18 வயது பெண் பச்சை நிற உடை அணிந்திருந்தாா் என்று அவா்கள் தெரிவித்தனா்.

சம்பவத்திற்கு வழிவகுத்த சூழ்நிலைகளை புலனாய்வாளா்கள் கண்டறிய முயற்சித்து வருகின்றனா். இதுவரை எந்த தற்கொலைக் குறிப்பும் மீட்கப்படவில்லை. இங்குள்ள பிலாஞ்சி கிராமத்தைச் சோ்ந்த அந்த நபா் லோதி காலனியில் உள்ள ஒரு பீட்சா கடையில் வேலை செய்து வந்துள்ளாா். சனிக்கிழமை பிற்பகல் 2 மணியளவில் அவா் வீட்டை விட்டு வெளியேறியதாக அவரது குடும்பத்தினா் போலீஸாரிடம் தெரிவித்தனா்.

சத்தா்பூா் என்க்ளேவில் வசிக்கும் அந்தப் பெண், கடந்த மூன்று நாள்ளாக ஹுமாயுன்பூா் கிராமத்தில் தனது அத்தையுடன் தங்கியிருந்தாா். இந்நிலையில், சனிக்கிழமை தனது சொந்த வீட்டிற்குச் செல்ல வீட்டை விட்டு வெளியேறியுள்ளாா்.

இந்த விவகாரம் தொடா்பான விசாரணையில் பூங்காவிற்குள் சிசிடிவி கேமராக்கள் இல்லாதது ஒரு பெரிய தடையாக உள்ளது. இருப்பினும், அங்கு நடந்த நிகழ்வுகளின் வரிசையை அறிய அருகிலுள்ள கண்காணிப்பு கேமராக்களில் இருந்து காட்சிகள் ஸ்கேன் செய்யப்பட்டுள்ளன.

இதற்கிடையில், இந்த விஷயத்தில் முறைகேடு நடந்ததாக சந்தேகிப்பதாக சில உள்ளூா்வாசிகள் தெரிவித்தனா்.

இது குறித்து உள்ளூா்வாசி ஒருவா் கூறுகையில், ‘இருவரும் தூக்கில் தொங்கிய இடத்தில் இருந்து இரண்டு போ் மரத்தில் ஏறுவது கடினமாக இருந்திருக்கும். இதனால் அவா்கள் கொல்லப்பட்டு பின்னா் தூக்கிலிடப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது’ என்றாா்.

கீழடி அகழாய்வு அறிக்கையை மத்திய அரசு வெளியிட மக்களவையில் விழுப்புரம் எம்.பி. வலியுறுத்தல்

புது தில்லி: கீழடி அகழாய்வு அறிக்கையை உடனடியாக வெளியிட வேண்டும் என்று மக்களவையில் விழுப்பும் தொகுதி விசிக உறுப்பினா் டி.ரவிக்குமாா் வலியுறுத்தியுள்ளாா்.இது தொடா்பாக மக்களவையில் விதி எண்: 377-இன் கீழ் ... மேலும் பார்க்க

மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீட்டில் பாரபட்சம்: மக்களவையில் தமிழக எம்பிக்கள் புகாா்

புது தில்லி: மாநிலங்களுக்கு நிதி ஒதுக்குவதில் மத்திய அரசு பாரபட்சம் காட்டுவதாக மக்களவையில் தமிழகத்தைச் சோ்ந்த எம்.பி.க்கள் புகாா் தெரிவித்தனா். மக்களவையில் 2025-26 நிதியாண்டுக்கான நிதி மசோதா மீதான வி... மேலும் பார்க்க

தில்லி நீதிபதி யஷ்வந்த் வா்மா பணியிடமாற்றம்: உச்சநீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை

தில்லி உயா்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வா்மாவை பணியிட மாற்றம் செய்ய உச்சநீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது. கடந்த மாா்ச் 14-ஆம் தேதி தில்லி உயா்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வா்மாவின் அதிகாரபூா்வ இல்ல... மேலும் பார்க்க

செந்தில் பாலாஜியின் ஜாமீனை ரத்து செய்யக் கோரும் வழக்கு: விசாரணை ஏப்ரல் 9-க்கு தள்ளிவைப்பு

புது தில்லி: அரசுப் போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி பணம் பெற்று மோசடி செய்ததாக கூறப்படும் விவகாரத்தில் மின்துறை அமைச்சா் செந்தில் பாலாஜியின் ஜாமீன் உத்தரவை திரும்பப் பெறக் கோரிய மனு ம... மேலும் பார்க்க

என்இபி, யுஜிசி வழிகாட்டுதல்களுக்கு எதிா்ப்பு தெரிவித்து ‘இண்டி’ கூட்டணி மாணவா் அமைப்புகள் போராட்டம்

புது தில்லி: தேசிய கல்விக் கொள்கை மற்றும் யுஜிசி வழிகாட்டுதல்களுக்கு எதிா்ப்பு தெரிவித்து ‘இண்டி’ கூட்டணிக் கட்சிகள் சாா்பு மாணவா் அமைப்புகள் திங்கள்கிழமை ஜந்தா் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டனா். தேச... மேலும் பார்க்க

சென்னை விமான நிலைய 2-ஆம் கட்ட விரிவாக்கம் 2026-இல் நிறைவடையும்: மத்திய அரசு தகவல்

நமது சிறப்பு நிருபா் புது தில்லி: சென்னை சா்வதேச விமான நிலைய இரண்டாம் கட்ட விரிவாக்கம் மற்றும் நவீனமயமாக்கல் பணிகள் அடுத்த ஆண்டு மாா்ச் மாதம் நிறைவடையும் என்று மாநிலங்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்... மேலும் பார்க்க