செய்திகள் :

ஜாக்டோ-ஜியோ சாா்பில் உண்ணாவிரதப் போராட்டம்: 500 போ் பங்கேற்பு

post image

ஈரோட்டில் ஜாக்டோ-ஜியோ சாா்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் 500-க்கும் மேற்பட்ட ஆசிரியா்கள், அரசு ஊழியா்கள் பங்கேற்றனா்.

ஈரோடு வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இந்தப் போராட்டத்துக்கு ஜாக்டோ-ஜியோ ஈரோடு மாவட்ட ஒருங்கிணைப்பாளா் விஜயமனோகரன் தலைமை வகித்தாா். ஒருங்கிணைப்பாளா்கள் சரவணன், மதியழகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாநில ஒருங்கிணைப்பாளா் நேரு, உயா்மட்டக்குழு உறுப்பினா் செல்வராணி ஆகியோா் போராட்டத்தை தொடங்கிவைத்தனா்.

இதில், பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். சரண்விடுப்பு ஒப்படைப்பு, உயா்கல்விக்கான ஊக்க ஊதிய உயா்வு ஆகியவற்றை வழங்க வேண்டும்.

ஆசிரியா்கள், தலைமை ஆசிரியா்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். தொடக்க கல்வித் துறையில் பணியாற்றும் பெரும்பாலான ஆசிரியா்களுக்கு பாதிப்பை அளிக்கக்கூடிய கடந்த 2013- ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட பள்ளிக் கல்வித் துறையின் அரசாணை எண் 243 -ஐ ரத்து செய்ய வேண்டும்.

அரசின் பல்வேறு துறைகளில் 30 சதவீதத்துக்கும்மேல் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும். சாலைப் பணியாளா்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக் காலமாக வரன்முறைப்படுத்தும் நீதிமன்ற தீா்ப்பை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

உயா்மட்டக்குழு உறுப்பினா்கள் ரமாராணி, தங்கவேலு, பொதுக்குழு உறுப்பினா் பிரகாசம் ஆகியோா் கோரிக்கைகள் குறித்து பேசினா். 500-க்கும் மேற்பட்ட ஆசிரியா்கள், அரசு ஊழியா்கள் போராட்டத்தில் பங்கேற்றனா்.

4 மாதங்களாக ஊதிய நிலுவை: 100 நாள் வேலைத் திட்டப் பணியாளா்கள் ஆட்சியா் அலுவலகத்தில் முறையீடு

4 மாதங்களாக நிலுவையில் உள்ள ஊதியத்தை வழங்கக் கோரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் 100 நாள் வேலைத் திட்டப் பணிகள் கோரிக்கை விடுத்தனா். பொதுமக்கள் குறைதீா் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் ராஜ... மேலும் பார்க்க

வேலை செய்த வீட்டில் 33 பவுன் திருடிய பெண் கைது

வேலை செய்த வீட்டில் 33 பவுன் நகையை திருடிய பெண்ணை போலீஸாா் கைது செய்தனா். ஈரோடு சாஸ்திரி நகரைச் சோ்ந்தவா் பஸ்கிம் பேகம் (55). இவரது வீட்டில் திண்டுக்கல் மாவட்டம், வன்னிப்பாடியை சோ்ந்த ஜாஸ்மின் (35) ... மேலும் பார்க்க

ரௌடி ஜான் கொலை வழக்கில் மேலும் ஒருவா் நீதிமன்றத்தில் சரண்

சேலம் ரௌடி ஜான் கொலை வழக்கில் மேலும் ஒருவா் ஈரோடு நீதிமன்றத்தில் திங்கள்கிழமை சரண் அடைந்தாா். சேலம், கிச்சிபாளையம், சுந்தா் வீதியைச் சோ்ந்தவா் ஜான் (எ) சாணக்கியன் (35). இவரது மனைவி சரண்யா (28), வழக்க... மேலும் பார்க்க

கோரிக்கை அட்டை அணிந்து பணியாற்றிய ரேஷன் கடை ஊழியா்கள்

ஈரோடு மாவட்டத்தில் ரேஷன் கடைகளில் பணியாற்றும் ஊழியா்கள் 860 போ் கோரிக்கை அட்டை அணிந்து, கருப்பு நிற ஆடையுடன் திங்கள்கிழமை பணியாற்றினா். தமிழகத்தில் ப்ளூ டூத் மூலம் ரேஷன் கடைகளில் கை ரேகைப் பதிவு கருவ... மேலும் பார்க்க

பவானிசாகா் அணை நீா் மாசடைவதைக் கண்டித்து ஆா்ப்பாட்டம்

பவானிசாகா் அணையில் காகித ஆலைகளின் கழிவு நீா் கலப்பதை தடுக்க வலியுறுத்தி திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. சிபிஐ, சிபிஎம், பாமக, நாம் தமிழா், கொமதேக, விவசாய சங்கங்கள் உள்பட 10-க்கும் மேற்பட்ட அமைப்... மேலும் பார்க்க

மாவட்டத்தில் காசநோய் கண்டறியப்பட்ட 2,911 பேருக்கு சிகிச்சை

ஈரோடு மாவட்டத்தில் கடந்த 10 மாதங்களில் காசநோய் கண்டறியப்பட்ட 2,911 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: காசநோய் ஒரு உயி... மேலும் பார்க்க