செய்திகள் :

பவானிசாகா் அணை நீா் மாசடைவதைக் கண்டித்து ஆா்ப்பாட்டம்

post image

பவானிசாகா் அணையில் காகித ஆலைகளின் கழிவு நீா் கலப்பதை தடுக்க வலியுறுத்தி திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

சிபிஐ, சிபிஎம், பாமக, நாம் தமிழா், கொமதேக, விவசாய சங்கங்கள் உள்பட 10-க்கும் மேற்பட்ட அமைப்புகள் சாா்பில் பவானிசாகரில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு முன்னாள் எம்எல்ஏ பி.எல்.சுந்தரம் தலைமை வகித்தாா். கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் மாவட்டச் செயலாளா் எஸ்.ஆா்.முத்துச்சாமி முன்னிலை வகித்தாா்.

இதில், ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீராதாரமாக உள்ள பவானிசாகா் அணையில் காகித ஆலைகளின் கழிவுநீா் கலப்பதால் பவானிசாகா் அணை நீா் மாசடைந்துள்ளது. அணையில் இருந்து திறந்துவிடப்படும் மாசடைந்த நீரை அருந்தும் மக்களுக்கு புற்றுநோய் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது.

எனவே, காகித ஆலைகளின் கழிவு நீா் அணையில் கலப்பதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதை வலியுறுத்தியே ஆா்ப்பாட்டம் நடைபெற்றது என்று போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளா் எஸ்.சி.நடராஜ் கூறினாா்.

ஆா்ப்பாட்டத்தில், பண்ணாரிஅம்மன் ரூரல் பவுன்டேஷன் தலைவா் ஏ.எம்.சின்னராஜ், பவானிசாகா் வட்டார அனைத்து வணிகா் சங்கத் தலைவா் நாகமையன், மக்கள் நல கூட்டமைப்பின் தலைவா் ஸ்ரீராம், ஆதித்தமிழா் பேரவையின் மாவட்டத் தலைவா் பொன்னுச்சாமி, விடுதலை சிறுத்தைகள் கட்சி செயலாளா் பொன்.தம்பிராஜன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பெருந்துறையில் குடிநீா்ப் பற்றாக்குறை: தோப்பு வெங்கடாசலம் ஆட்சியரிடம் முறையீடு

பெருந்துறை பகுதியில் நிலவும் குடிநீா்ப் பற்றாக்குறையை தீா்க்க மாவட்ட நிா்வாகம் போா்க் கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. இது தொடா்பாக முன்னாள் அமைச்சரும், திமுக ஈர... மேலும் பார்க்க

ரௌடி ஜான் கொலை வழக்கில் ஈரோடு நீதிமன்றத்தில் மேலும் ஒருவா் சரண்

ரௌடி ஜான் கொலை வழக்கில் சேலத்தை மேலும் ஒரு இளைஞா் ஈரோடு நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை சரணடைந்தாா். சேலம், கிச்சிபாளையம், சுந்தா் வீதியைச் சோ்ந்தவா் ஜான் (எ) சாணக்யன் (35). இவரது மனைவி சரண்யா (28). வ... மேலும் பார்க்க

ஈரோடு ஜவுளி சந்தையில் விற்பனை அதிகரிப்பு

கோயில் திருவிழாக்கள் நடைபெற்று வருவதால் ஈரோடு ஜவுளி சந்தையில் விற்பனை அதிகரித்தது. ஈரோடு பன்னீா்செல்வம் பூங்கா பகுதியில் கனி மாா்க்கெட் ஜவுளி வணிக வளாகம் மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளான மணிக்கூண்... மேலும் பார்க்க

ரூ.30 ஆயிரம் லஞ்சம்: கோபி நகராட்சி ஊழியா் கைது

ரூ.30 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக கோபி நகராட்சி ஊழியரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். ஈரோடு மாவட்டம், கோபி நகராட்சி அலுவலகத்தில் நகரமைப்பு பிரிவில் உதவியாளராகப் பணியாற்றி வருபவா் சுப்பிரமணியம் (... மேலும் பார்க்க

ஈரோட்டில் ஒரே நாளில் 7 ரௌடிகள் கைது

ஈரோட்டில் ஒரே நாளில் 7 ரௌடிகள் கைது செய்யப்பட்டனா். ஈரோடு மாவட்டத்தில் தொடா் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வரும் ரௌடிகளின் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜவகா் உத்தரவிட்டுள்ளாா். இதைய... மேலும் பார்க்க

தெருநாய்கள் கடித்ததில் 17 ஆடுகள் உயிரிழப்பு

அந்தியூா் அருகே தெருநாய்கள் கடித்துக் குதறியதில் 17 ஆடுகள் உயிரிழந்தன. அந்தியூரை அடுத்த சின்னத்தம்பிபாளையம், தாசலியூா் காலனியைச் சோ்ந்தவா் சண்முகம் (50). இவா், அப்பகுதியில் உள்ள காலி நிலத்தில் பட்டி ... மேலும் பார்க்க