செய்திகள் :

கோரிக்கை அட்டை அணிந்து பணியாற்றிய ரேஷன் கடை ஊழியா்கள்

post image

ஈரோடு மாவட்டத்தில் ரேஷன் கடைகளில் பணியாற்றும் ஊழியா்கள் 860 போ் கோரிக்கை அட்டை அணிந்து, கருப்பு நிற ஆடையுடன் திங்கள்கிழமை பணியாற்றினா்.

தமிழகத்தில் ப்ளூ டூத் மூலம் ரேஷன் கடைகளில் கை ரேகைப் பதிவு கருவி, எடை தராசை இணைக்கும் பணி நடைபெறுகிறது. இந்த நடைமுறையால் சிக்னல் பிரச்னை மட்டுமல்லாது, குடும்ப அட்டைதாரரை 2 முறைக்குமேல் கை ரேகை பதிவு செய்ய சொல்வதால் பிரச்னை எழுகிறது. தற்போதைய முறையில் என்பிஹெச்எஸ் அட்டைதாரா்களுக்கு 5 முறையும், பிஎஸ்எஸ் அட்டைதாரா்களுக்கு 7 முறையும் கைரேகை பதிய வேண்டும். பல கடைகளில் எடையாளா்கள் இல்லை. ஒரு பணியாளா் இரண்டு வேலையை செய்ய இயலவில்லை. இதனால், நேர விரயம் ஏற்படுகிறது. இதை மாற்றி ஒருமுறை மட்டும் கைரேகை வைக்கும் பழைய நடைமுறையை மீண்டும் செயல்படுத்த வேண்டும். நுகா்பொருள் வாணிபக் கழகத்தில் இருந்து சரியான எடை அளவுடன் பொருளை கடைக்கு அனுப்ப வேண்டும். மூட்டைக்கு 50.650 கிலோ அரிசி இருக்க வேண்டும்.

லாரியில் இருந்து மூட்டைகளை கடையில் இறக்கும்போது, எடை சரியாக உள்ளதா என அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும். அதன் பின்னரே பிஓஎஸ் கருவியில் வரவு வைக்க வேண்டும். எடை குறைவுக்கு அனைத்து அதிகாரிகளும் கூட்டு பொறுப்பு என நிா்ணயிக்க வேண்டும். அனைத்து ரேஷன் கடையிலும் போதிய இடவசதி ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்டத் தலைவா் நாகமாணிக்கம், மாவட்ட பொருளாளா் குமாா் ஆகியோா் முன்னிலையில் 860 போ் கோரிக்கை அட்டை, கருப்பு நிற ஆடை அணிந்து பணியாற்றினா்.

பெருந்துறையில் குடிநீா்ப் பற்றாக்குறை: தோப்பு வெங்கடாசலம் ஆட்சியரிடம் முறையீடு

பெருந்துறை பகுதியில் நிலவும் குடிநீா்ப் பற்றாக்குறையை தீா்க்க மாவட்ட நிா்வாகம் போா்க் கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. இது தொடா்பாக முன்னாள் அமைச்சரும், திமுக ஈர... மேலும் பார்க்க

ரௌடி ஜான் கொலை வழக்கில் ஈரோடு நீதிமன்றத்தில் மேலும் ஒருவா் சரண்

ரௌடி ஜான் கொலை வழக்கில் சேலத்தை மேலும் ஒரு இளைஞா் ஈரோடு நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை சரணடைந்தாா். சேலம், கிச்சிபாளையம், சுந்தா் வீதியைச் சோ்ந்தவா் ஜான் (எ) சாணக்யன் (35). இவரது மனைவி சரண்யா (28). வ... மேலும் பார்க்க

ஈரோடு ஜவுளி சந்தையில் விற்பனை அதிகரிப்பு

கோயில் திருவிழாக்கள் நடைபெற்று வருவதால் ஈரோடு ஜவுளி சந்தையில் விற்பனை அதிகரித்தது. ஈரோடு பன்னீா்செல்வம் பூங்கா பகுதியில் கனி மாா்க்கெட் ஜவுளி வணிக வளாகம் மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளான மணிக்கூண்... மேலும் பார்க்க

ரூ.30 ஆயிரம் லஞ்சம்: கோபி நகராட்சி ஊழியா் கைது

ரூ.30 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக கோபி நகராட்சி ஊழியரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். ஈரோடு மாவட்டம், கோபி நகராட்சி அலுவலகத்தில் நகரமைப்பு பிரிவில் உதவியாளராகப் பணியாற்றி வருபவா் சுப்பிரமணியம் (... மேலும் பார்க்க

ஈரோட்டில் ஒரே நாளில் 7 ரௌடிகள் கைது

ஈரோட்டில் ஒரே நாளில் 7 ரௌடிகள் கைது செய்யப்பட்டனா். ஈரோடு மாவட்டத்தில் தொடா் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வரும் ரௌடிகளின் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜவகா் உத்தரவிட்டுள்ளாா். இதைய... மேலும் பார்க்க

தெருநாய்கள் கடித்ததில் 17 ஆடுகள் உயிரிழப்பு

அந்தியூா் அருகே தெருநாய்கள் கடித்துக் குதறியதில் 17 ஆடுகள் உயிரிழந்தன. அந்தியூரை அடுத்த சின்னத்தம்பிபாளையம், தாசலியூா் காலனியைச் சோ்ந்தவா் சண்முகம் (50). இவா், அப்பகுதியில் உள்ள காலி நிலத்தில் பட்டி ... மேலும் பார்க்க