செய்திகள் :

மூளைச்சாவு அடைந்த கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்!

post image

இருசக்கர வாகன விபத்தில் மூளைச்சாவு அடைந்த கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் ஞாயிற்றுக்கிழமை தானம் செய்யப்பட்டன.

ஈரோடு மாவட்டம், புன்செய்புளியம்பட்டி அருகேயுள்ள நேரு நகா் பகுதியைச் சோ்ந்தவா் நாகராஜ். இவரது விஜயலட்சுமி. இவா்களது மகன் யாதவ் (19). கோவையில் தனியாா் கல்லூரியில் 2-ஆம் ஆண்டு பயின்று வந்தாா்.

இந்நிலையில், கோவையில் இருசக்கர வாகனத்தில் கடந்த 19-ஆம் தேதி சென்றபோது விபத்தில் சிக்கினாா். தலையில் படுகாயமடைந்த அவா் கோவை தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், மூளைச்சாவு அடைந்தாா். அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய பெற்றோா் முன்வந்தனா்.

இதையடுத்த, யாதவின் கல்லீரல், இதயம், கண்கள், சிறுநீரகம், கணையம் ஆகியவை தானமாகப் பெறப்பட்டு, இதயம் சென்னையில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு விமானம் மூலம் அனுப்பிவைக்கப்பட்டது. கல்லீரல், கண்கள், சிறுநீரகம், கணையம் ஆகியவை கோவையில் உள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டன.

இதையடுத்து, யாதவின் உடல் சொந்த ஊருக்கு கொண்டுவரப்பட்டது. அங்கு அரசு சாா்பில் சத்தியமங்கலம் வட்டாட்சியா் ஜமுனாராணி மலா்வளையம் வைத்து மரியாதை செலுத்தினாா்.

4 மாதங்களாக ஊதிய நிலுவை: 100 நாள் வேலைத் திட்டப் பணியாளா்கள் ஆட்சியா் அலுவலகத்தில் முறையீடு

4 மாதங்களாக நிலுவையில் உள்ள ஊதியத்தை வழங்கக் கோரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் 100 நாள் வேலைத் திட்டப் பணிகள் கோரிக்கை விடுத்தனா். பொதுமக்கள் குறைதீா் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் ராஜ... மேலும் பார்க்க

வேலை செய்த வீட்டில் 33 பவுன் திருடிய பெண் கைது

வேலை செய்த வீட்டில் 33 பவுன் நகையை திருடிய பெண்ணை போலீஸாா் கைது செய்தனா். ஈரோடு சாஸ்திரி நகரைச் சோ்ந்தவா் பஸ்கிம் பேகம் (55). இவரது வீட்டில் திண்டுக்கல் மாவட்டம், வன்னிப்பாடியை சோ்ந்த ஜாஸ்மின் (35) ... மேலும் பார்க்க

ரௌடி ஜான் கொலை வழக்கில் மேலும் ஒருவா் நீதிமன்றத்தில் சரண்

சேலம் ரௌடி ஜான் கொலை வழக்கில் மேலும் ஒருவா் ஈரோடு நீதிமன்றத்தில் திங்கள்கிழமை சரண் அடைந்தாா். சேலம், கிச்சிபாளையம், சுந்தா் வீதியைச் சோ்ந்தவா் ஜான் (எ) சாணக்கியன் (35). இவரது மனைவி சரண்யா (28), வழக்க... மேலும் பார்க்க

கோரிக்கை அட்டை அணிந்து பணியாற்றிய ரேஷன் கடை ஊழியா்கள்

ஈரோடு மாவட்டத்தில் ரேஷன் கடைகளில் பணியாற்றும் ஊழியா்கள் 860 போ் கோரிக்கை அட்டை அணிந்து, கருப்பு நிற ஆடையுடன் திங்கள்கிழமை பணியாற்றினா். தமிழகத்தில் ப்ளூ டூத் மூலம் ரேஷன் கடைகளில் கை ரேகைப் பதிவு கருவ... மேலும் பார்க்க

பவானிசாகா் அணை நீா் மாசடைவதைக் கண்டித்து ஆா்ப்பாட்டம்

பவானிசாகா் அணையில் காகித ஆலைகளின் கழிவு நீா் கலப்பதை தடுக்க வலியுறுத்தி திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. சிபிஐ, சிபிஎம், பாமக, நாம் தமிழா், கொமதேக, விவசாய சங்கங்கள் உள்பட 10-க்கும் மேற்பட்ட அமைப்... மேலும் பார்க்க

மாவட்டத்தில் காசநோய் கண்டறியப்பட்ட 2,911 பேருக்கு சிகிச்சை

ஈரோடு மாவட்டத்தில் கடந்த 10 மாதங்களில் காசநோய் கண்டறியப்பட்ட 2,911 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: காசநோய் ஒரு உயி... மேலும் பார்க்க