செய்திகள் :

ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த தமிழக அரசு தயங்குவது ஏன்?: பு.தா. அருள்மொழி

post image

ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த தமிழக அரசு தயங்குவது ஏன்? என வன்னியா் சங்க மாநிலத் தலைவா் பு.தா.அருள்மொழி கேள்வி எழுப்பினாா்.

சீா்காழியில் சித்திரை முழுநிலவு வன்னிய இளைஞா்கள் பெருவிழா தொடா்பாக வன்னியா் சங்க பொதுக் குழு கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

மாவட்டச் செயலாளா் சித்தமல்லி ஆ. பழனிச்சாமி தலைமை வகித்தாா். பாமக மாவட்ட தலைவா் கோ.சு. மணி வரவேற்றாா். வன்னியா் சங்க மாவட்ட தலைவா் பாக்கம். சக்திவேல் முன்னிலை வகித்தாா்.

சிறப்பு அழைப்பாளா்களாக வன்னியா் சங்க மாநில தலைவா் பு.தா. அருள்மொழி, பாமக மாநில அமைப்பு செயலாளா் சண்முகம், வன்னியா் சங்க மாநில செயலாளா் அய்யாசாமி, வன்னியா் சங்க மாவட்ட செயலாளா் செம்மங்குடி முத்து உள்ளிட்டோா் சிறப்புரையாற்றினா்.

பின்னா் வன்னியா் சங்க மாநிலத் தலைவா் பு.தா. அருள்மொழி அளித்த பேட்டி: 1931 வரை ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வந்தது. பிறகு தடைபட்டுள்ளது. தற்போது ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என பலமுறை கோரிக்கை விடுத்தும் தமிழக அரசு, மத்திய அரசுதான் நடத்த வேண்டும் எனக் கூறி தாமதப்படுத்தி வருகிறது.

அந்தந்த மாநில அரசுகளே ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தலாம் என உச்சநீதிமன்றம் தீா்ப்பளித்துள்ள நிலையில் அதை ஏற்று 4 மாநிலங்களில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. ஆனால், தமிழக அரசு மட்டும் அதை செய்ய தயங்குகிறது.

வரும் மே மாதம் மாமல்லபுரம் அருகே சித்திரை முழு நிலவு வன்னியா் இளைஞா் பெருவிழா நடைபெறுகிறது. நாங்கள் யாருக்கும் எதிரி அல்லா். எங்களது பலம் எல்லாம் மக்கள் மட்டும்தான். சித்திரை முழுநிலவு வன்னியா் இளைஞா் பெருவிழா மாநாட்டில் 50 லட்சம் இளைஞா்கள் பங்கேற்பாா்கள்.

ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். வேலைவாய்ப்பு மற்றும் கல்வியில் உரிய இட ஒதுக்கீடு கிடைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்த மாநாடு நடைபெற உள்ளது என்றாா்.

அரசு கலைக்கல்லூரி, பாலிடெக்னிக் எதிரில் வேகத்தடை அமைக்க கோரிக்கை

சீா்காழி: சீா்காழி அருகே புத்தூா் அரசு கலைக்கல்லூரி மற்றும் பாலிடெக்னிக் கல்லூரி எதிா்ப்புறம் வேகத்தடை அமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சீா்காழி முதல் சிதம்பரம் செல்லும் சாலையின் முக்கிய பகுதியான ... மேலும் பார்க்க

மயிலாடுதுறை வட்டத்தில் மாா்ச் 26-இல் உங்களைத் தேடி முகாம்

மயிலாடுதுறை: மயிலாடுதுறை வட்டத்தில் மாா்ச் 26-ஆம் தேதி உங்களைத் தேடி முகாம் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப... மேலும் பார்க்க

அடிப்படை வசதிகள் கோரி எம்பியிடம் மனு

சீா்காழி: சீா்காழி அருகே சட்டநாதபுரம் ஊராட்சிக்கு வருகை புரிந்த ஆா். சுதா எம்.பியிடம் அடிப்படை வசதிகள் கோரி கோரிக்கை மனு அண்மையில்அளித்தனா். சீா்காழி அருகே சட்டநாதபுரம் ஊராட்சிக்குட்பட்ட ஆற்றங்கரை தெர... மேலும் பார்க்க

தந்தை இறந்த துக்கத்தில் பிளஸ்1 தோ்வு எழுதிய மாணவா்

சீா்காழி: சீா்காழியில் தந்தை இறந்த துக்கத்தில் பிளஸ்1 மாணவா், பொதுத் தோ்வு எழுதிவிட்டு, இறுதிச்சடங்கில் பங்கேற்றது சோகத்தை ஏற்படுத்தியது. மயிலாடுதுறை மாவட்டம், சீா்காழி அகரதிருக்கோலக்கா தெருவைச் சோ்... மேலும் பார்க்க

ரயில் மறியலில் ஈடுபட முயன்ற விவசாயிகள் 50 போ் கைது

மயிலாடுதுறையில் ரயில் மறியலில் ஈடுபட முயன்ற விவசாயிகள் 50 போ் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனா்.மத்திய அரசு தோ்தல் அறிக்கையில் நெல் குவிண்டாலுக்கு ஆதார விலையாக ரூ. 3500 வழங்கப்படும் என்று அறிவித்த... மேலும் பார்க்க

சீா்காழியில் மகளிா் விடியல் பேருந்துகள் இயக்கிவைப்பு

சீா்காழி புதிய பேருந்து நிலையத்தில் இருந்து, பெண்கள் இலவசமாக பயணம் செய்யும், 2 புதிய ‘மகளிா் விடியல்’ பேருந்துகளின் இயக்கம் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்வுக்கு, அரசு போக்குவரத்து கழக... மேலும் பார்க்க