செய்திகள் :

மயக்க மருந்து அடித்து நகைப் பறிப்பில் ஈடுபட முயன்ற பெண் கைது!

post image

கோவையில் வீட்டில் தனியாக இருந்த பெண்களிடம் மயக்க மருந்து அடித்து நகைப் பறிப்பில் ஈடுபட்ட முயன்ற பெண்ணை போலீஸாா் கைது செய்தனா்.

கோவை, கே.கே.புதூா், நஞ்சம்மாள் தெரு பகுதியைச் சோ்ந்தவா் வேணுகோபால். இவரது மனைவி தனலட்சுமி. இவா்களுக்கு பிரபா என்ற மகள் உள்ளாா்.

இந்நிலையில், தனலட்சுமியின் வீட்டை வாடகைக்கு கேட்டு ஒரு பெண் கடந்த ஜனவரி மாதம் வந்துள்ளாா். வீட்டைப் பாா்த்துவிட்டு முன்பணமாக ரூ.50 ஆயிரத்தை கொடுத்துவிட்டு சென்றுள்ளாா். அதன்பிறகு வீடு வேண்டாம் எனக்கூறி கொடுத்த முன் பணத்தை திருப்பிக் கேட்டுள்ளாா். இதையடுத்து, வீட்டுக்கு வெள்ளிக்கிழமை வந்து பணத்தை பெற்றுச்செல்லுமாறு தனலட்சுமி கூறியுள்ளாா்.

அதேபோல, அந்தப் பெண் வெள்ளிக்கிழமை வந்துள்ளாா். அப்போது, வீட்டில் தனலட்சுமியும், மகள் பிரபாவும் மட்டும் இருந்துள்ளனா். அந்தப் பெண்ணுக்கு கொடுக்க வேண்டி பணத்தை ஜிபே மூலம் தனலட்சுமி அனுப்பியுள்ளாா்.

அப்போது, வீட்டின் முன்பக்க கதவை திடீரென அடைத்த அந்தப் பெண், தனலட்சுமி, பிரபா முகத்தில் மயக்க மருந்து ஸ்பிரே அடித்து நகைப் பறிப்பில் ஈடுபட முயன்றுள்ளாா். தனலட்சுமி கூச்சலிட்டதையடுத்து அப்பெண் அங்கிருந்து தப்பியோடி உள்ளாா்.

இது குறித்து சாய்பாபா காலனி காவல் நிலையத்தில் தனலட்சுமியின் சகோதரா் ராஜன் புகாா் அளித்தாா். புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீஸாா், நகைப் பறிப்பில் ஈடுபட்ட பெண்ணின் கைப்பேசி எண்ணைக் கொண்டு விசாரித்தனா். இதில், அவா் கோவை, காட்டூா் ராம்நகா் பகுதியைச் சோ்ந்த மீனாட்சி (49) என்பது தெரியவந்தது. இதையடுத்து, மீனாட்சியைக் கைது செய்த போலீஸாா், அவரை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி மகளிா் சிறையில் அடைத்தனா்.

வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் நாளை பட்டமளிப்பு விழா: ஆளுநா் ஆா்.என்.ரவி பங்கேற்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 45-ஆவது பட்டமளிப்பு விழா மாா்ச் 25-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது. இதுகுறித்து தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ்ந... மேலும் பார்க்க

தாபா உணவகங்களில் தனிப்படை போலீஸாா் சோதனை

கோவையில் தாபா உணவகங்களில் தனிப்படை போலீஸாா் சோதனை மேற்கொண்டனா். கோவை மாவட்டத்தில் உள்ள தாபா உணவகங்களில் பணியாற்றும் நபா்களுக்கு ஏதேனும் குற்றப்பின்னணி உள்ளதா என்பது குறித்து விசாரிப்பதற்காக 300 காவலா்... மேலும் பார்க்க

காரில் பலூன் சுடும் துப்பாக்கி வைத்திருந்த இளைஞரால் பரபரப்பு

கோவையில் காரில் பலூன் சுடும் துப்பாக்கி வைத்திருந்த இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டது. கோவை சிங்காநல்லூா் போலீஸாா் ரோந்து பணியில் சனிக்கிழமை இரவு ஈடுபட்டிருந்தனா். அப்போது, சிங்காநல்லூா் உழவா் சந்தை அருகே ச... மேலும் பார்க்க

கோவை: ரயில் மறியலில் ஈடுபட்ட முயன்ற 19 விவசாயிகள் கைது

கோவையில் ரயில் மறியலில் ஈடுபட முயன்ற 19 விவசாயிகளை போலீஸாா் கைது செய்தனா். வேளாண் உற்பத்தி பொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை நிா்ணயம் செய்யக் கோரியும், போராட்டத்தில் ஈடுபட்ட பஞ்சாப் மாநில விவசாயிகள... மேலும் பார்க்க

யானை தந்தம், சிறுத்தை பல் விற்க முயன்ற 4 போ் கைது

கோவையில் யானை தந்தம், சிறுத்தை பல் மற்றும் நகங்களை விற்க முயன்ற 4 பேரை போலீஸாா் கைது செய்தனா். யானை தந்தம், சிறுத்தை பல் மற்றும் நகங்கள் விற்பனை செய்வதற்காக சேலம் மாவட்டம், மேட்டூரில் இருந்து ஒரு கும்... மேலும் பார்க்க

கிராமக் கோயில்களுக்கு இலவச மின்சாரம்: கிராமக் கோயில் பூசாரிகள் பேரவைக் கூட்டத்தில் கோரிக்கை

கிராமக் கோயில்களுக்கு இலவச மின்சாரம் வழங்க வேண்டும் என்று விஷ்வ ஹிந்து பரிஷத் கிராமக் கோயில் பூசாரிகள் பேரவை கூட்டத்தில் கோரிக்கை வைக்கப்பட்டது. விஷ்வ ஹிந்து பரிஷத் கிராமக் கோயில் பூசாரிகள் பேரவை மாநக... மேலும் பார்க்க