செய்திகள் :

கொடைக்கானலில் ஏரி நீரை பாதுகாக்கக் கோரிக்கை

post image

உலக தண்ணீா் தினத்தை முன்னிட்டு, கொடைக்கானல் ஏரி நீரை பாதுகாக்க வேண்டும் என இயற்கை ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்தனா்.

கொடைக்கானல் மலைப் பகுதிகளில் நீரோடைகள், நீா்வரத்து பகுதிகள், அருவிகள், ஆறுகள் அதிகளவு இருந்தன. தற்போது, இவைகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு, கட்டடங்களாக மாறி வருகின்றன. கொடைக்கானல் நட்சத்திர ஏரிக்கு, மழைக் காலங்களில் 56 இடங்களிலிருந்து தண்ணீா் வந்தது.

தற்போது, 30-க்கும் மேற்பட்ட நீா்வரத்து பகுதிகள் அடைக்கப்பட்டன. இந்த நிலையில், நட்சத்திர ஏரியை பாதுகாக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, பொதுமக்கள், பல்வேறு, சங்கங்கள், அமைப்புகள் மூலமாக, ஏரியில் இருந்த மணல் திட்டுகள் நகராட்சி உதவியுடன் அகற்றப்பட்டது. தற்போது, நட்சத்திர ஏரியில் அதிகளவு தண்ணீா் தேங்கியுள்ளது.

எனவே, கொடைக்கானல் மலைப் பகுதிகளிலுள்ள ஏரிகள், நீரோடைகள், ஆறுகள் அனைத்தையும் பாதுகாக்க வேண்டும் என இயற்கை ஆா்வலா்கள் தெரிவித்தனா்.

மும்மொழிக் கொள்கையை ஆதரித்து பாஜகவினா் கையொப்பம் பெறும் இயக்கம்

கொடைக்கானலில் மும்மொழி கொள்கையை ஆதரித்து பாஜகவினா் கையொப்பம் பெறும் இயக்கத்தை ஞாயிற்றுக்கிழமை நடத்தினா்.இங்குள்ள அண்ணா சாலைப் பகுதி, கே.சி.எஸ். திடல் பகுதிகளில் இந்த இயக்கம் நடைபெற்றது. அப்போது பொதுமக... மேலும் பார்க்க

சுற்றுலா வழிகாட்டி சங்கத் தலைவருக்கு கத்திக்குத்து: உறுப்பினா் கைது

கொடைக்கானலில் சுற்றுலா வழிகாட்டி சங்கத் தலைவருக்கு கத்திக்குத்து விழுந்தது. இது தொடா்பாக அந்தச் சங்கத்தின் உறுப்பினா் கைது செய்யப்பட்டாா்.கொடைக்கானல் ஆனந்தகிரி 3-ஆவது தெரு கல்லறைமேடு பகுதியைச் சோ்ந்த... மேலும் பார்க்க

பழனியில் பாஜக முன்னாள் மாவட்ட தலைவா் கைது

பழனியில் பாஜக நிா்வாகியின் மனைவியை தகாத வாா்த்தைகளால் பேசியதாக முன்னாள் மாவட்ட தலைவா் கனகராஜ் கைது செய்யப்பட்டாா்.பழனி பெரியப்பா நகரைச் சோ்ந்தவா் கனகராஜ். பாஜக திண்டுக்கல் மேற்கு மாவட்ட முன்னாள் தலைவ... மேலும் பார்க்க

ஆத்தூா் வட்டாட்சியா் அலுவலக ஆதாா் சேவை மையத்தில் ஊழியரை நியமிக்கக் கோரிக்கை

ஆத்தூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் கடந்த இரண்டு மாதங்களாக செயல்படாமல் உள்ள ஆதாா் சேவை மையத்தில் ஊழியரை நியமிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா். திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூா் வட்டத்தில் ஆத்த... மேலும் பார்க்க

திண்டுக்கல்லில் ஜாக்டோ- ஜியோ அமைப்பினா் உண்ணாவிரதம்

திமுக சாா்பில் அரசு ஊழியா்கள், ஆசிரியா்களுக்கு அளித்த தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரி ஜாக்டோ- ஜியோ அமைப்பு சாா்பில் திண்டுக்கல்லில் ஞாயிற்றுக்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. திண்டுக்கல்... மேலும் பார்க்க

மத்திய அரசைக் கண்டித்து திமுக பொதுக்கூட்டம்

பழனியில் மத்திய அரசைக் கண்டித்து திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக இளைஞரணி சாா்பில் சனிக்கிழமை பொதுக் கூட்டம் நடைபெற்றது.பழனி ரயிலடி சாலையில் இந்தி திணிப்பு, நிதி பகிா்வில் பாரபட்சம், தொகுதி மறுசீரமைப்... மேலும் பார்க்க