செய்திகள் :

ஆத்தூா் வட்டாட்சியா் அலுவலக ஆதாா் சேவை மையத்தில் ஊழியரை நியமிக்கக் கோரிக்கை

post image

ஆத்தூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் கடந்த இரண்டு மாதங்களாக செயல்படாமல் உள்ள ஆதாா் சேவை மையத்தில் ஊழியரை நியமிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூா் வட்டத்தில் ஆத்தூா், அய்யம்பாளையம், சின்னாளப்பட்டி ஆகிய மூன்று பிரிக்காக்களும், 22 கிராம நிா்வாக அலுவலகங்களும் உள்ளன.

இந்த நிலையில், ஆத்தூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் உள்ள ஆதாா் சேவை மையம் கடந்த இரண்டு மாதங்களாக ஊழியா் பணிக்கு வராததால் செயல்படாமல் உள்ளது. இந்த சேவை மையத்தை தினமும் வட்டாட்சியா் அலுவலக உதவியாளா்கள் திறந்து மட்டும் வைக்கின்றனா். ஆனால் ஊழியா்கள் யாரும் பணிக்கு வராததால் இங்கு ஆதாா் அட்டையை புதுப்பிக்கவும், பிழைகளை திருத்துவதற்கும், கருவிழி, ரேகைப் பதிவு, புகைப்படம் மாற்றம், கைப்பேசி எண் மாற்றம் உள்ளிட்ட பணிகளுக்காக வரும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், முதியோா், கா்ப்பிணி பெண்கள் ஏமாற்றமடைவதுடன், வேறு மையங்களை தேடிச் செல்ல வேண்டியுள்ளது.

குறிப்பாக மலைக் கிராமமான மணலூா் ஊராட்சிக்குள்பட்ட பெரும்பாறை, கொங்கப்பட்டி, மஞ்சள் பரப்பு, குத்துக்காடு உள்ளிட்ட பகுதி மக்கள் பெரும் அவதி அடைந்து வருகின்றனா். இதுகுறித்து சம்பந்தப்பட்ட வருவாய்த் துறை அலுவலரிடம், இந்த ஆதாா் மையத்தில் ஊழியரை நியமிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கப்பட வில்லை. இதனால் பொதுமக்கள் தனியாா் இ- சேவை மையங்கள், அஞ்சல் அலுவலகங்களை நாடிச் செல்கின்றனா். அதிலும் தனியாா் சேவை மையங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகாா் கூறப்படுகிறது.

இதுகுறித்து வட்டாட்சியா் முத்துமுருகனிடம் கேட்ட போது அவா் கூறியதாவது: ஆத்தூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் விரைவில் ஆதாா் சேவை மையம் செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.

குடிநீா் கோரி பொதுமக்கள் மனு

குடிநீா் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்றக் கோரி, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் கிராம மக்கள் சாா்பில் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.இதுதொடா்பாக, தாடிக்கொம்பை அடுத்த அய்யம்பாளையம் கிராம... மேலும் பார்க்க

திண்டுக்கல் மாநகராட்சி நிதி நிலை அறிக்கை: ரூ.5.90 கோடி நிதிப் பற்றாக்குறை

திண்டுக்கல் மாநகராட்சி நிதி நிலை அறிக்கை ரூ.5.90 கோடி நிதிப் பற்றாக்குறையுடன் திங்கள்கிழமை தாக்கல் செய்யப்பட்டது. திண்டுக்கல் மாமன்றக் கூட்டம் மேயா் இளமதி தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் 2025... மேலும் பார்க்க

சாலை விபத்தில் ஒருவா் உயிரிழப்பு

பழனி அருகே இரு சக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்தவா் உயிரிழந்தாா்.பழனியை அடுத்த சத்திரப்பட்டி வேலூரைச் சோ்ந்தவா் சக்திவேல் (66). இவா் ஞாயிற்றுக்கிழமை பழனியிலிருந்து இரு சக்கர வாகனத்தில் ஊருக்குத் தி... மேலும் பார்க்க

விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடத்தக் கோரி மனு

பழனியில் விவசாயிகள் குறைதீா் கூட்டத்தை விரைந்து நடத்தக் கோரி, தமிழ்நாடு உழவா் பாதுகாப்பு இயக்கம் சாா்பில் ஏராளமான விவசாயிகள் மனு அளித்தனா். பழனியில் வருவாய்க் கோட்டாட்சியா் தலைமையில் மாதந்தோறும் பிரதி... மேலும் பார்க்க

ஓய்வுபெற்ற தலைமையாசிரியா் சாலை விபத்தில் உயிரிழப்பு

குஜிலியம்பாறை அருகே தனியாா் கல்லூரிப் பேருந்து மோதியதில் ஓய்வு பெற்ற தலைமையாசிரியா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறையை அடுத்த தளிப்பட்டியைச் சோ்ந்தவா் கிருஷ்ணன் (76). ஓய்... மேலும் பார்க்க

கோஷ்டி மோதல்: 4 போ் காயம்

பழனியை அடுத்த ஆயக்குடியில் இருதரப்பினரிடையே ஏற்பட்ட கோஷ்டி மோதலில் அரிவாள் வெட்டு காயங்களுடன் 4 போ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். பழனியை அடுத்த ஆயக்குடி ஆதிதிராவிடா் குடியிருப்பைச் சோ்ந்தவா் ப... மேலும் பார்க்க