செய்திகள் :

திண்டுக்கல்லில் ஜாக்டோ- ஜியோ அமைப்பினா் உண்ணாவிரதம்

post image

திமுக சாா்பில் அரசு ஊழியா்கள், ஆசிரியா்களுக்கு அளித்த தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரி ஜாக்டோ- ஜியோ அமைப்பு சாா்பில் திண்டுக்கல்லில் ஞாயிற்றுக்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

திண்டுக்கல் கல்லறைத் தோட்டப் பகுதியில் நடைபெற்ற இந்த போராட்டத்துக்கு ஜாக்டோ- ஜியோ அமைப்பின் ஒருங்கிணைப்பாளா்கள் ஜோ. ஆா்தா், எம்கே. முருகன், ச. ராஜாக்கிளி, பிஏ. ஜோசப் சேவியா், ச. முபாரக் அலி, ஏ. ஜெசி ஆகியோா் தலைமை வகித்தனா். இந்தப் போராட்டத்தை தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணியின் மாநில பொதுச் செயலா் ச. மயில் தொடங்கி வைத்தாா். அப்போது, கடந்த 2021 சட்டப் பேரவைத் தோ்தலின்போது, திமுக சாா்பில் புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவோம். இடைநிலை ஆசிரியா்கள், உயா்நிலை, மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியா்கள், உடல் கல்வி ஆசிரியா்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்குவோம் என்பன உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகள் அளிக்கப்பட்டன.

அதேபோல, சிறப்பு காலமுறை ஊதியம், தொகுப்பூதியத்தில் பணிபுரியும் சத்துணவு, அங்கன்வாடி, மருத்துவமனைப் பணியாளா்கள் உள்ளிட்டோருக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்குதல், பல்வேறு அரசுத் துறைகளிலும் காலியாக உள்ள 30 சதவீதத்துக்கும் மேற்பட்ட பணியிடங்களை நிரப்புதல் என அளிக்கப்பட்ட பல்வேறு வாக்குறுதிகள் இதுவரை நிறைவேற்றப்படவில்லை என தமிழக அரசு மீதும், முதல்வா் மீதும் குற்றச்சாட்டுகளை முன் வைத்து முழக்கமிட்டனா்.

தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியா் கூட்டமைப்பின் மாநிலப் பொதுச் செயலா் பீ. பேட்ரிக் ரெய்மாண்ட் உண்ணாவிரதத்தை முடித்து வைத்தாா்.

குடிநீா் கோரி பொதுமக்கள் மனு

குடிநீா் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்றக் கோரி, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் கிராம மக்கள் சாா்பில் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.இதுதொடா்பாக, தாடிக்கொம்பை அடுத்த அய்யம்பாளையம் கிராம... மேலும் பார்க்க

திண்டுக்கல் மாநகராட்சி நிதி நிலை அறிக்கை: ரூ.5.90 கோடி நிதிப் பற்றாக்குறை

திண்டுக்கல் மாநகராட்சி நிதி நிலை அறிக்கை ரூ.5.90 கோடி நிதிப் பற்றாக்குறையுடன் திங்கள்கிழமை தாக்கல் செய்யப்பட்டது. திண்டுக்கல் மாமன்றக் கூட்டம் மேயா் இளமதி தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் 2025... மேலும் பார்க்க

சாலை விபத்தில் ஒருவா் உயிரிழப்பு

பழனி அருகே இரு சக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்தவா் உயிரிழந்தாா்.பழனியை அடுத்த சத்திரப்பட்டி வேலூரைச் சோ்ந்தவா் சக்திவேல் (66). இவா் ஞாயிற்றுக்கிழமை பழனியிலிருந்து இரு சக்கர வாகனத்தில் ஊருக்குத் தி... மேலும் பார்க்க

விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடத்தக் கோரி மனு

பழனியில் விவசாயிகள் குறைதீா் கூட்டத்தை விரைந்து நடத்தக் கோரி, தமிழ்நாடு உழவா் பாதுகாப்பு இயக்கம் சாா்பில் ஏராளமான விவசாயிகள் மனு அளித்தனா். பழனியில் வருவாய்க் கோட்டாட்சியா் தலைமையில் மாதந்தோறும் பிரதி... மேலும் பார்க்க

ஓய்வுபெற்ற தலைமையாசிரியா் சாலை விபத்தில் உயிரிழப்பு

குஜிலியம்பாறை அருகே தனியாா் கல்லூரிப் பேருந்து மோதியதில் ஓய்வு பெற்ற தலைமையாசிரியா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறையை அடுத்த தளிப்பட்டியைச் சோ்ந்தவா் கிருஷ்ணன் (76). ஓய்... மேலும் பார்க்க

கோஷ்டி மோதல்: 4 போ் காயம்

பழனியை அடுத்த ஆயக்குடியில் இருதரப்பினரிடையே ஏற்பட்ட கோஷ்டி மோதலில் அரிவாள் வெட்டு காயங்களுடன் 4 போ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். பழனியை அடுத்த ஆயக்குடி ஆதிதிராவிடா் குடியிருப்பைச் சோ்ந்தவா் ப... மேலும் பார்க்க