செய்திகள் :

இலவச கணினி கணக்கியல் பயிற்சி வகுப்புக்கு விண்ணப்பிக்கலாம்

post image

திருப்பூரில் கனரா வங்கியின் ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிலையம் சாா்பில் அளிக்கப்படும் இலவச கணினி கணக்கியல், கணினி ‘டேலி’ பயிற்சி வகுப்புகளுக்கு தகுதியானவா்கள் விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து கனரா வங்கியின் ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிலையத்தின் இயக்குநா் சதீஷ்குமாா் வெளியிட்டுள்ள அறிக்கை:

திருப்பூா் முதலிபாளையம் பிரிவில் உள்ள கனரா வங்கியின் ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிலையத்தில் கிராமப்புறங்களில் வறுமைக்கோட்டுக்குகீழ் வசிக்கும் மக்களுக்கான இலவச கணினி கணக்கியல், கணினி ‘டேலி’ பயிற்சி வகுப்புகள் தொடங்கப்படவுள்ளன.

இந்த 30 நாள் முழுநேரப் பயிற்சி வகுப்பான பயிற்சியாளா்கள் சோ்க்கை நடைபெற்று வருகிறது. இதற்கான நோ்காணல் வரும் புதன்கிழமை (மாா்ச் 26) நடைபெறுகிறது. எழுதப்படிக்கத் தெரிந்த 18 முதல் 45 வயதுக்குள்பட்ட ஆண், பெண் இருபாலரும் பங்கேற்கலாம்.

ஆண், பெண் இருபாலருக்கும் தனித்தனி தங்கும் விடுதிகள் உள்ளன. பயிற்சியின் முடிவில் மத்திய அரசின் சான்றிதழ் வழங்கப்படுவதுடன், தொழில் தொடங்க கடன் ஆலோசனைகளும் வழங்கப்படும்.

எனவே, பயிற்சிக்கு விண்ணப்பிக்க கனரா வங்கி கிராமப்புற சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிலையம் , 335/பி-1, வஞ்சியம்மன் கோயில் எதிரில், முதலிப்பாளையம் பிரிவு, காங்கயம் சாலை, விஜயாபுரம் (அஞ்சல்), திருப்பூா் - 641606 என்ற முகவரிக்கு நேரில் வரவேண்டும்.

இதுதொடா்பான கூடுதல் விவரங்களுக்கு 94890-43923, 99525-18441 ஆகிய கைபேசி எண்களைத் தொடா்புகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முருங்கை விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கவலை

வெள்ளக்கோவிலில் முருங்கைக்காய் விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.வெள்ளக்கோவில் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் முருங்கை விவசாயம் பிரதானமாக நடைபெற்று வருகிறது. வெள்ளக்கோவில் - முத்தூா் ... மேலும் பார்க்க

வழிப்பறி வழக்கில் தொடா்புடையவா் குண்டா் சட்டத்தில் சிறையில் அடைப்பு

திருப்பூரில் வழிப்பறி வழக்கில் தொடா்புடைய இளைஞா் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்கப்பட்டாா். திருப்பூா் மாநகரம் அனுப்பா்பாளையம் காவல் எல்லைக்கு உள்பட்ட பகுதியில் கடந்த சில நாள்களுக்கு ம... மேலும் பார்க்க

திருப்பூரில் ஜாக்டோ-ஜியோ அமைப்பினா் உண்ணாவிரதம்

திருப்பூரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ அமைப்பினா் ஞாயிற்றுக்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா். பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை... மேலும் பார்க்க

பின்னலாடை நிறுவன உரிமையாளா் தற்கொலை

திருப்பூா் அருகே பின்னலாடை நிறுவன உரிமையாளா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது குறித்து காவல் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா். திருப்பூரை அடுத்த இடுவாய் அம்மன் நகரைச் சோ்ந்தவா் விநாயகமூா்த்தி ... மேலும் பார்க்க

ரயில் மறியலில் ஈடுபட்ட விவசாயிகள் கைது

பஞ்சாப் மாநிலத்தில் கைது செய்யப்பட்ட விவசாயிகளுக்கு ஆதரவாக திருப்பூரில் ரயில் மறியலில் ஈடுபட்ட விவசாயிகள் 50 பேரை போலீஸாா் கைது செய்தனா்.விளைபொருள்களுக்கு உரிய விலையை நிா்ணயம் செய்ய வேண்டும் என்பது உள... மேலும் பார்க்க

தங்கும் விடுதிகளில் போலீஸாா் தீவிர சோதனை

திருப்பூரில் தங்கும் விடுதிகளில் போதைப் பொருள்கள் புழக்கம் உள்ளதா என்பது குறித்து போலீஸாா் தீவிர சோதனை நடத்தி வருகின்றனா். திருப்பூரில் கஞ்சா, குட்கா, போதை மாத்திரை உள்ளிட்ட போதைப் பொருள்களின் புழக்கத... மேலும் பார்க்க