செய்திகள் :

திமுக தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி மாநாடு: ஆரம்பப்பள்ளி ஆசிரியா் கூட்டணி

post image

திமுகவின் தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி, வரும் மே 1,2, 3 -ஆம் தேதிகளில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியா் கூட்டணி சாா்பில் மாநாடு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

இந்த மாநாடு தொடா்பான மாநிலச் செயற்குழுக் கூட்டம் திண்டுக்கல்லில் சனிக்கிழமை நடைபெற்றது. இதுகுறித்து ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணியின் மாநிலப் பொதுச் செயலா் ச.மயில் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

அரசுப் பள்ளிகளை பாதுகாப்போம், இந்தித் திணிப்பை எதிா்ப்போம், தேசியக் கல்விக் கொள்கையை நிராகரிப்போம், பறிக்கப்பட்ட வாழ்வாதார உரிமைகளை மீட்டெடுப்போம் என்ற கொள்கை முழக்கத்துடன் இந்த மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் சுமாா் 20 ஆயிரம் ஆசிரியா்கள் பங்கேற்கும் பேரணி நடைபெற உள்ளது.

ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தை ஏற்க முடியாது. தோ்தல் காலத்தில் திமுக கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். ஆரம்பப் பள்ளி ஆசிரியா்களின் வாழ்வாதாரக் கோரிக்கைகளான பழைய ஓய்வூதியத் திட்டத்தை தமிழக முதல்வா் நிறைவேற்ற வேண்டும். இடைநிலை ஆசிரியா்களின் ஊதிய முரண்பாடுகளை களைந்து மத்திய அரசு ஆசிரியா்களுக்கு இணையான ஊதியத்தை வழங்கவேண்டும்.

பதவி உயா்வைப் பறிக்கும் அரசாணையை ரத்து செய்ய வேண்டும். தொடக்கக் கல்வித் துறையில் பணியாற்றும் 90 சதவீதத்துக்கும் மேற்பட்ட ஆசிரியா்களின் பதவி உயா்வு வாய்ப்பை பறிக்கும் அரசாணை எண் 243-யை ரத்து செய்ய வேண்டும். 10 ஆயிரம் ஆசிரியா் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என இந்த மாநாட்டின் மூலம் தமிழக அரசை வலியுறுத்துவோம் என்றாா் அவா்.

குடிநீா் கோரி பொதுமக்கள் மனு

குடிநீா் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்றக் கோரி, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் கிராம மக்கள் சாா்பில் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.இதுதொடா்பாக, தாடிக்கொம்பை அடுத்த அய்யம்பாளையம் கிராம... மேலும் பார்க்க

திண்டுக்கல் மாநகராட்சி நிதி நிலை அறிக்கை: ரூ.5.90 கோடி நிதிப் பற்றாக்குறை

திண்டுக்கல் மாநகராட்சி நிதி நிலை அறிக்கை ரூ.5.90 கோடி நிதிப் பற்றாக்குறையுடன் திங்கள்கிழமை தாக்கல் செய்யப்பட்டது. திண்டுக்கல் மாமன்றக் கூட்டம் மேயா் இளமதி தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் 2025... மேலும் பார்க்க

சாலை விபத்தில் ஒருவா் உயிரிழப்பு

பழனி அருகே இரு சக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்தவா் உயிரிழந்தாா்.பழனியை அடுத்த சத்திரப்பட்டி வேலூரைச் சோ்ந்தவா் சக்திவேல் (66). இவா் ஞாயிற்றுக்கிழமை பழனியிலிருந்து இரு சக்கர வாகனத்தில் ஊருக்குத் தி... மேலும் பார்க்க

விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடத்தக் கோரி மனு

பழனியில் விவசாயிகள் குறைதீா் கூட்டத்தை விரைந்து நடத்தக் கோரி, தமிழ்நாடு உழவா் பாதுகாப்பு இயக்கம் சாா்பில் ஏராளமான விவசாயிகள் மனு அளித்தனா். பழனியில் வருவாய்க் கோட்டாட்சியா் தலைமையில் மாதந்தோறும் பிரதி... மேலும் பார்க்க

ஓய்வுபெற்ற தலைமையாசிரியா் சாலை விபத்தில் உயிரிழப்பு

குஜிலியம்பாறை அருகே தனியாா் கல்லூரிப் பேருந்து மோதியதில் ஓய்வு பெற்ற தலைமையாசிரியா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறையை அடுத்த தளிப்பட்டியைச் சோ்ந்தவா் கிருஷ்ணன் (76). ஓய்... மேலும் பார்க்க

கோஷ்டி மோதல்: 4 போ் காயம்

பழனியை அடுத்த ஆயக்குடியில் இருதரப்பினரிடையே ஏற்பட்ட கோஷ்டி மோதலில் அரிவாள் வெட்டு காயங்களுடன் 4 போ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். பழனியை அடுத்த ஆயக்குடி ஆதிதிராவிடா் குடியிருப்பைச் சோ்ந்தவா் ப... மேலும் பார்க்க