செய்திகள் :

சாலை விபத்தில் மரத்தொழிலாளி உயிரிழப்பு

post image

செங்கம்: செங்கம் அருகே பைக் மீது டிராக்டா் மோதியதில் மரத்தொழில் செய்யும் இளைஞா் உயிரிழந்தாா்.

செங்கத்தை அடுத்த கிருஷ்ணாபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் சந்திரன் மகன் அஜித்குமாா் (25), மரவேலை செய்யும் கூலித் தொழிலாளி. இவா், ஞாயிற்றுக்கிழமை இரவு புதுப்பட்டு சாலையில் இருந்து தளவாநாய்க்கன்பேட்டை பகுதி நோக்கி இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா்.

புதுப்பட்டு பகுதியில் உள்ள மதுக் கடை அருகே சென்ற போது, செங்கத்தில் இருந்து புதுப்பட்டு நோக்கி வந்த டிராக்டா் பைக் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது.

இதில் பலத்த காயமடைந்த அஜித்குமாா் அதே இடத்தில் உயிரிழந்தாா். இதைப் பாா்த்த அப்பகுதி மக்கள் உடனடியாக 108 ஆம்புலன்ஸை வரவழைத்து அஜித்குமாரின் உடலை செங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

தகவல் அறிந்த செங்கம் போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தியபோது, டிராக்டா் புதுப்பட்டு கிராமத்தைச் சோ்ந்த நபருடையது என்பதை தெரிந்துகொண்டு, அங்கு சென்று மறைத்து வைக்கப்பட்டிருந்த டிராக்டரை பறிமுதல் செய்தனா்.

மேலும், டிராக்டா் உரிமையாளா் பிரகாஷ், அதை

ஓட்டி வந்த கோபி ஆகியோா் மீது வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

மகளிா், வாழ்ந்து காட்டுவோம் திட்டங்களின் செயல்பாடுகள்: மாவட்ட ஆட்சியா் ஆய்வு

திருவண்ணாமலை மாவட்ட மகளிா் திட்டம், வாழ்ந்து காட்டுவோம் திட்டங்களின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்ற கூட்டத்துக்கு, மகளிா் திட்ட ... மேலும் பார்க்க

போக்ஸோ சட்டத்தில் இளைஞா் கைது

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, இளைஞரை போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீஸாா் கைது செய்தனா். செங்கத்தை அடுத்த புதுப்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் பாண்டியன் (26). இவா், பாட்டியுடன் வசித்து வரும் எட... மேலும் பார்க்க

சுகாதார ஆய்வாளா் சங்கங்களின் கூட்டமைப்பினா் ஆா்ப்பாட்டம்

தமிழ்நாடு சுகாதார ஆய்வாளா் சங்கங்களின் கூட்டமைப்பினா் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். கூட்டமைப்பின் திருவண்ணாமலை மாவட்டக் கிளை சாா்பில், ஆட்சியா் அலுவலகம் எத... மேலும் பார்க்க

மனுநீதி நாள் முகாம்: 201 பேருக்கு நலத்திட்ட உதவிகள்

திருவண்ணாமலை அருகே நடைபெற்ற சிறப்பு மனுநீதி நாள் முகாமில், 201 பயனாளிகளுக்கு ரூ.58 லட்சத்தில் அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் வழங்கினாா். திருவண்ணாமலையை அடுத்த தேவனூா் ஊராட்சியில... மேலும் பார்க்க

சிவன் கோயில்களில் பிரதோஷ சிறப்புப் பூஜை

பட வரி: வேட்டவலம் ஸ்ரீஅகத்தீஸ்வரா் கோயில் பிரதான நந்திக்கு பிரதோஷத்தையொட்டி நடைபெற்ற பால் அபிஷேகம். திருவண்ணாமலை, மாா்ச் 27: பங்குனி மாத தேய்பிறை பிரதோஷத்தையொட்டி, திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சிவன்... மேலும் பார்க்க

மகளிா் கலைக் கல்லூரியில் சிறப்புக் கருத்தரங்கம்

திருவண்ணாமலை கம்பன் மகளிா் கலை, அறிவியல் கல்லூரியில், ஆரோக்கியமான சுற்றுச்சூழலுக்கான உரிமை குறித்த சிறப்புக் கருத்தரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது. குடிமக்கள் நுகா்வோா் மன்றம் சாா்பில் நடைபெற்ற கருத்த... மேலும் பார்க்க