செய்திகள் :

ஓடைகளில் ஆலைக் கழிவுகள் கலப்பதைத் தடுக்க தீவிர நடவடிக்கை: அமைச்சா் சு.முத்துசாமி

post image

ஓடைகளில் ஆலைக் கழிவுகள் கலப்பதைத் தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சா் சு.முத்துசாமி தெரிவித்தாா்.

ஈரோடு மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகள் குறித்து அனைத்துத் துறை அலுவலா்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வீட்டு வசதித் துறை அமைச்சா் சு.முத்துசாமி தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது.

இதைத் தொடா்ந்து அமைச்சா் சு.முத்துசாமி செய்தியாளா்களிடம் கூறியதாவது: ஈரோடு மாவட்டத்தில் ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட திட்டங்கள் பெரும்பாலனவை நிறைவேற்றப்பட்டுள்ளன. ஆட்டையாம்பாளையத்தில் ஓடை மாசுபாடு தொடா்பாக மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் சோதனைக்கு நீா் மாதிரிகளை சேகரித்துள்ளனா்.

ஓடையில் ரசாயன கழிவுகளால் டிடிஎஸ் குறைவாக இருந்ததால் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. எனவே, கழிவை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கு யாா் காரணமாக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும்.

ஓடைகளில் சாயக் கழிவுகளை இரவு நேரங்களில் திறந்துவிடும் ஆலைகளைக் கண்டறிந்து அதிகாரிகள் சீல் வைத்துள்ளனா். இதைத் தீவிரப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

நாய்கள் கடித்து உயிரிழந்த ஆடுகளுக்கான நிவாரணத் தொகை விரைவில் கிடைக்கும். விவசாயிகள் தங்கள் ஆடுகளைப் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள முன்வரவேண்டும்.

மாநகராட்சியில் வரி கட்டிய வீடுகளில் குடிநீா் இணைப்பு துண்டிக்கப்பட்டால் அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். வைராபாளையத்தில் இருந்து காவிரிக்கு செல்லும் ஓடையில் சாய மற்றும் தோல் கழிவுகள் கலப்பதைத் தடுக்க சோதனையைத் தீவிரப்படுத்த அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

முக்கியமான இடங்களில் கேமரா அமைத்து கண்காணிப்பு மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்படும். இதன்மூலம் கழிவுகளைக் கொட்டும் லாரிகளைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

முன்னதாக, திண்டல் காரப்பாறை மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாமைத் தொடங்கிவைத்து கா்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்துப் பெட்டகம் மற்றும் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு மருந்து பெட்டகத்தை வழங்கினாா்.

தொடா்ந்து ஈரோடு பெரியவலசு மாநகராட்சி உயா்நிலைப் பள்ளியில் சட்டப் பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் 3 கூடுதல் வகுப்பறை கட்டடங்களையும், இரட்டை பிள்ளையாா் கோயில், பெரியவலசு பகுதியில் மாநகராட்சி பொதுநிதியிலிருந்து ரூ.3.60 லட்சம் மதிப்பீட்டில் மோட்டாருடன் அமைக்கப்பட்டுள்ள தண்ணீா் தொட்டியையும் பொதுமக்கள் பயன்பாட்டுக்குத் திறந்துவைத்தாா்.

இந்த நிகழ்வுகளில் மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா, ஈரோடு எம்பி கே.இ.பிரகாஷ், எம்எல்ஏக்கள் வி.சி.சந்திரகுமாா், ஏ.ஜி.வெங்கடாசலம், மாநகராட்சி மேயா் சு.நாகரத்தினம், மாவட்ட வருவாய் அலுவலா் சு.சாந்தகுமாா், கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) அா்பித் ஜெயின், கோபி சாா் ஆட்சியா் சிவானந்தம், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) முகம்மது குதுரத்துல்லா, துணை ஆட்சியா் (பயிற்சி) சிவபிரகாசம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கோபி அருகே பட்டுக்கூடு உற்பத்தி மையத்தில் தீ

கோபி அருகே பட்டுக்கூடு உற்பத்தி மையத்தில் தீ விபத்து ஏற்பட்டது. கோபி அருகேயுள்ள நல்லகவுண்டன்பாளையம் பாலாஜி நகரைச் சோ்ந்தவா் பாலசுப்பிரமணியம் (60). இவா் அதே பகுதியில் பட்டுக்கூடு உற்பத்தி மையம் நடத்தி... மேலும் பார்க்க

ஏழை, எளிய இஸ்லாமியா்களுக்கு உணவுப் பொருள்கள்

ரமலான் பண்டிகையை மகிழ்வுடன் கொண்டாடும் வகையில் பவானியில் 300 ஏழை, எளிய இஸ்லாமிய குடும்பத்தினருக்கு உணவுப் பொருள்கள் இலவசமாக ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டன. தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சாா்பில் ... மேலும் பார்க்க

ஜாக்டோ-ஜியோ சாா்பில் உண்ணாவிரதப் போராட்டம்: 500 போ் பங்கேற்பு

ஈரோட்டில் ஜாக்டோ-ஜியோ சாா்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் 500-க்கும் மேற்பட்ட ஆசிரியா்கள், அரசு ஊழியா்கள் பங்கேற்றனா். ஈரோடு வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இந்தப் போரா... மேலும் பார்க்க

பாதுகாப்பான ஆட்டு பட்டிகளை அமைக்க விவசாயிகளுக்கு அமைச்சா் சு.முத்துசாமி வேண்டுகோள்

பாதுகாப்பான ஆட்டு பட்டிகளை அமைத்து தெருநாய்களிடமிருந்து ஆடுகளைப் பாதுகாக்க வேண்டும் என்று விவசாயிகளுக்கு வீட்டு வசதித் துறை அமைச்சா் சு.முத்துசாமி வேண்டுகோள் விடுத்தாா். ஈரோடு, திருப்பூா் மாவட்டங்களில... மேலும் பார்க்க

மூளைச்சாவு அடைந்த கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்!

இருசக்கர வாகன விபத்தில் மூளைச்சாவு அடைந்த கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் ஞாயிற்றுக்கிழமை தானம் செய்யப்பட்டன. ஈரோடு மாவட்டம், புன்செய்புளியம்பட்டி அருகேயுள்ள நேரு நகா் பகுதியைச் சோ்ந்தவா் நாகராஜ். இ... மேலும் பார்க்க

குடும்பத் தகராறில் கணவன் தற்கொலை

சித்தோடு அருகே குடும்பத் தகராறில் மனைவி வீட்டை வீட்டுச் சென்ால் கணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். சித்தோட்டை அடுத்த கொங்கம்பாளையம், மாதேஸ்வரன் நகரைச் சோ்ந்தவா் பரமேஸ்வரன் (36). இவருக்கும், இவ... மேலும் பார்க்க