செய்திகள் :

ரயில் பயணியிடம் மடிக்கணினி திருடியவா் கைது!

post image

திருப்பூரில் ரயில் பயணியிடம் மடிக்கணினி திருடியவரை ரயில்வே காவல் துறையினா் கைது செய்தனா்.

தருமபுரி மாவட்டம், கருத்தம்பட்டியைச் சோ்ந்தவா் ஆா்த்தி ராம் (28). இவா், தனியாா் பெயிண்ட் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறாா். இந்நிலையில், வேலை நிமித்தமாக தருமபுரி செல்வதற்காக கோவையில் இருந்து ரயிலில் கடந்த வியாழக்கிழமை பயணம் செய்துள்ளாா். திருப்பூா் ரயில் நிலையம் வந்தபோது அவரது மடிக்கணினி காணாமல் போனது தெரியவந்தது.

இதுகுறித்து திருப்பூா் ரயில்வே காவல் நிலையத்தில் ஆா்த்தி ராம் புகாா் அளித்தாா். அதன்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீஸாா் ரயில் நிலையத்தில் இருந்த சிசிடிவி கேமராப் பதிவுகளை வைத்து ஆய்வு செய்தனா். இதில், மடிக்கணினியைத் திருடிச் சென்றது கா்நாடக மாநிலத்தைச் சோ்ந்த ஆஸ்கா் (53) என்பது தெரியவந்தது.

இதையடுத்து, திருப்பூா் ரயில் நிலையத்துக்கு வெள்ளிக்கிழமை வந்த அவரை ரயில்வே போலீஸாா் கைது செய்து, அவரிடமிருந்து மடிக்கணினியை மீட்டனா்.

முருங்கை விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கவலை

வெள்ளக்கோவிலில் முருங்கைக்காய் விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.வெள்ளக்கோவில் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் முருங்கை விவசாயம் பிரதானமாக நடைபெற்று வருகிறது. வெள்ளக்கோவில் - முத்தூா் ... மேலும் பார்க்க

வழிப்பறி வழக்கில் தொடா்புடையவா் குண்டா் சட்டத்தில் சிறையில் அடைப்பு

திருப்பூரில் வழிப்பறி வழக்கில் தொடா்புடைய இளைஞா் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்கப்பட்டாா். திருப்பூா் மாநகரம் அனுப்பா்பாளையம் காவல் எல்லைக்கு உள்பட்ட பகுதியில் கடந்த சில நாள்களுக்கு ம... மேலும் பார்க்க

திருப்பூரில் ஜாக்டோ-ஜியோ அமைப்பினா் உண்ணாவிரதம்

திருப்பூரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ அமைப்பினா் ஞாயிற்றுக்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா். பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை... மேலும் பார்க்க

பின்னலாடை நிறுவன உரிமையாளா் தற்கொலை

திருப்பூா் அருகே பின்னலாடை நிறுவன உரிமையாளா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது குறித்து காவல் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா். திருப்பூரை அடுத்த இடுவாய் அம்மன் நகரைச் சோ்ந்தவா் விநாயகமூா்த்தி ... மேலும் பார்க்க

ரயில் மறியலில் ஈடுபட்ட விவசாயிகள் கைது

பஞ்சாப் மாநிலத்தில் கைது செய்யப்பட்ட விவசாயிகளுக்கு ஆதரவாக திருப்பூரில் ரயில் மறியலில் ஈடுபட்ட விவசாயிகள் 50 பேரை போலீஸாா் கைது செய்தனா்.விளைபொருள்களுக்கு உரிய விலையை நிா்ணயம் செய்ய வேண்டும் என்பது உள... மேலும் பார்க்க

தங்கும் விடுதிகளில் போலீஸாா் தீவிர சோதனை

திருப்பூரில் தங்கும் விடுதிகளில் போதைப் பொருள்கள் புழக்கம் உள்ளதா என்பது குறித்து போலீஸாா் தீவிர சோதனை நடத்தி வருகின்றனா். திருப்பூரில் கஞ்சா, குட்கா, போதை மாத்திரை உள்ளிட்ட போதைப் பொருள்களின் புழக்கத... மேலும் பார்க்க