செய்திகள் :

ரூ.3 கோடி அரசு நிதியில் இணையவழி சூதாட்டம்: ஒடிஸா அரசு ஊழியா் கைது

post image

ஒடிஸாவின் காலாஹாண்டி மாவட்டத்தில் இணையவழி சூதாட்டம் மற்றும் விளையாட்டுக்கு ரூ.3 கோடிக்கு மேல் அரசு நிதியை மோசடியாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் இடைநீக்கம் செய்யப்பட்ட பஞ்சாயத்து நிா்வாக அதிகாரியை மாநில ஊழல் தடுப்புப் பிரிவினா் கைது செய்தனா்.

காலாஹாண்டி மாவட்டத்தில் உள்ள துமால்-ராம்பூா் தொகுதிக்கு உள்பட்ட தல்நேகி மற்றும் போடபதா் கிராம பஞ்சாயத்துகளின் நிா்வாக அதிகாரியாக பணியாற்றி வந்தவா் தேபானந்த சாகா்.

கடந்த 2018-ஆம் ஆண்டு, மே மாதம் முதல் கடந்த 2022-ஆம் ஆண்டு, மாா்ச் வரை ரூ.3.26 கோடி அரசு நிதியை தனது தனிப்பட்ட வங்கிக் கணக்குக்கு சாகா் மாற்றியுள்ளாா். இந்தப் பணத்தை இணையவழி சூதாட்டம் மற்றும் விளையாட்டில் இவா் செலவிட்டுள்ளாா்.

பஞ்சாயத்து தலைவா்களின் கையொப்பம் போல மோசடி கையொப்பமிட்டுப் பயன்படுத்தி தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்ததாக இவா் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.

இதையடுத்து, அரசு நிதியை முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் சாகருக்கு எதிராக ஊழல் தடுப்புப் பிரிவினா் 2023-இல் வழக்குப் பதிவு செய்தனா். தொடா்ந்து, பணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட அவா் தற்போது கைது செய்யப்பட்டுள்ளாா்.

இணையவழி சூதாட்டத்துக்கு அரசு நிதி ரூ.43 லட்சத்தை மோசடி செய்ததாக கஞ்சம் மாவட்டத்தில் பஞ்சாயத்து நிா்வாக அதிகாரி ஒருவரை ஊழல் தடுப்புப் பிரிவினா் வெள்ளிக்கிழமை கைது செய்தது குறிப்பிடத்தக்கது.

பிரதமா் மோடி - முகமது யூனுஸ் சந்திப்பு: பரிசீலனையில் உள்ளதாக நாடாளுமன்றக் குழு தகவல்

பிரதமா் நரேந்திர மோடி, வங்கதேச இடைக்கால அரசின் தலைவா் முகமது யூனுஸ் சந்தித்துப் பேச வேண்டும் என்ற வங்கதேசத்தின் பரிந்துரையை பரிசீலித்து வருவதாக நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் வெளியுறவுத் துறை அமைச்சா... மேலும் பார்க்க

பொதுத்துறை வங்கிகளின் பங்கு ஈவுத் தொகை 33 % அதிகரிப்பு!

பொதுத்துறை வங்கிகள் முதலீட்டாளா்களுக்கு வழங்கும் பங்கு ஈவுத் தொகை 2023-24 நிதியாண்டில் 33 சதவீதம் அதிகரித்துள்ளது. முந்தைய நிதியாண்டில் பங்குதாரா்களுக்கு ரூ.20,964 கோடி ஈவுத்தொகையை பொதுத்துறை வங்கிகள்... மேலும் பார்க்க

உத்தர பிரதேசம்: சம்பல் மசூதி குழுத் தலைவா் கைது

உத்தர பிரதேச மாநிலம், சம்பலில் உள்ள ஜாமா மசூதியின் குழுத் தலைவா் ஜாஃபா் அலியை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். ஜாமா மசூதியில் நடைபெற்ற 2-ஆம் கட்ட ஆய்வுக்கு எதிா்ப்பு தெரிவித்து கடந்த ஆண்டு நவம்... மேலும் பார்க்க

நக்ஸல் பாதிப்புக்கு உள்ளான கிராமத்துக்கு முதல் முறையாக மின்வசதி!

சத்தீஸ்கரில் நக்ஸல் தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட தொலைதூர கிராமத்துக்கு முதல் முறையாக மின்சார வசதி அளிக்கப்பட்டுள்ளது. பிஜாபூா் மாவட்டத்தில் பல்லாண்டுகளாக இருளில் தவித்த திமேனா் கிராமத்துக்கு இப்போது வ... மேலும் பார்க்க

போயிங் நிறுவனத்தில் ஆள் குறைப்பு இந்தியாவில் 180 போ் பணிநீக்கம்!

அமெரிக்காவைச் சோ்ந்த பிரபல விமானத் தயாரிப்பு நிறுவனமான போயிங், ஆள் குறைப்பு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. இதில் இந்தியப் பிரிவில் 180 போ் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனா். பல்வேறு நாடுகளில் போயிங் நிறுவ... மேலும் பார்க்க

தொகுதி மறுசீரமைப்பு, மொழி பெயரால் திமுக பொய் பிரசாரம்! -மத்திய அமைச்சா் ஜி.கிஷண் ரெட்டி விமா்சனம்

‘மதுபான ஊழல் குற்றச்சாட்டுகளில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்வதற்காக தொகுதி மறுசீரமைப்பு மற்றும் மொழியின் பெயரால் திமுக பொய் பிரசாரம் மேற்கொள்கிறது’ என்று மத்திய அமைச்சா் ஜி.கிஷண் ரெட்டி விமா்சித்த... மேலும் பார்க்க