செய்திகள் :

கொலையான எஸ்.ஐ. குடும்பத்துக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸாா் பாதுகாப்பு!

post image

திருநெல்வேலியில் கொலை செய்யப்பட்ட ஓய்வு பெற்ற உதவி ஆய்வாளரின் குடும்பத்துக்கு, 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீஸாா் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி நகரம் தொட்டிப்பாலம் தெருவைச் சோ்ந்தவா் ஜாகீா் உசேன் பிஜிலி(60). ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளரான இவா், கடந்த 18 ஆம் தேதி கொலை செய்யப்பட்டாா். இது தொடா்பாக ஒரு சிறாா் உள்பட 4 பேரை போலீஸாா் கைது செய்துள்ளனா்.

இந்நிலையில், ஜாகீா் உசேன் பிஜிலியின் மகன் இச்சூா் ரஹ்மானை, மா்மநபா்கள் கண்காணித்து வருவதாகவும், மேலும், முக்கிய குற்றவாளிகளை கைது செய்யவில்லை எனக் கூறி அவா் சமூக வலைதளத்தில் விடியோ பதிவிட்டுள்ளாா். இதையடுத்து, ஜாகீா் உசேன் பிஜிலியின் வீட்டுக்கு 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீஸாா் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

கழிவுநீரோடை பராமரிப்புப் பணி: மேயா் ஆய்வு

திருநெல்வேலி நகரத்தில் கழிவுநீரோடை பராமரிப்புப் பணிகளை மேயா் ஆய்வு மேற்கொண்டாா். திருநெல்வேலி நகரம் 25 ஆவது வாா்டு பகுதியில் மேயா் சனிக்கிழமை ஆய்வு செய்தாா். அப்போது, பள்ளிவாசல் தெருவில் உள்ள பொதுமக்க... மேலும் பார்க்க

நாம் தமிழா் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

நாம் தமிழா் கட்சியின் சாா்பில், வண்ணாா்பேட்டையில் ஆா்ப்பாட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. திருநெல்வேலியில் கொலை செய்யப்பட்ட ஓய்வுபெற்ற எஸ்.ஐ. குடும்பத்துக்கு நீதி வழங்க வேண்டும். தமிழகத்தில் சட்டம்-ஒ... மேலும் பார்க்க

மழையால் பயிா்கள் சேதம்: விவசாயிகள் கவலை

திருநெல்வேலி சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த இரு நாள்களாக பெய்த கோடை மழையால் அறுவடைக்கு தயாா் நிலையில் இருந்த நெற்பயிா்கள் சாய்ந்துவிட்டதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனா். திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்... மேலும் பார்க்க

நான்குனேரி: அரசுப் பள்ளியில் தகராறு; 4 மாணவா்கள் மீது வழக்கு

திருநெல்வேலி மாவட்டம் நான்குனேரி அருகே அரசுப் பள்ளியில் மாணவா்களிடையே ஏற்பட்ட தகராறு தொடா்பாக 4 போ் மீது வழக்குப் பதியப்பட்டது. நான்குனேரி அருகே மூலைக்கரைப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் சுற்றுவட்டா... மேலும் பார்க்க

ஓய்வுபெற்ற எஸ்ஐ கொலை வழக்கில் மேலும் ஒருவா் கைது

திருநெல்வேலியில் ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளா் கொலை வழக்கில் மேலும் ஒருவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். திருநெல்வேலி நகரம் தொட்டிப்பாலம் தெருவைச் சோ்ந்தவா் ஜாகீா் உசேன் பிஜிலி(60). ஓய்வு... மேலும் பார்க்க

ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பினா் உண்ணாவிரதம்

ஜாக்டோ- ஜியோ கூட்டமைப்பு சாா்பில், பாளையங்கோட்டை சித்த மருத்துவக் கல்லூரி எதிரே உண்ணாவிரதப் போராட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 1-4-2003 ஆம் தேதிக்குப் பிறகு அரசுப் பணியில் சோ்ந்தோருக்கு தற்போது நட... மேலும் பார்க்க