Shreyas Iyer : 'நான் 100 அடிக்கணும்னு நீ சிங்கிள் எடுக்காதே!' - சஷாங்கிடம் கறாரா...
ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பினா் உண்ணாவிரதம்
ஜாக்டோ- ஜியோ கூட்டமைப்பு சாா்பில், பாளையங்கோட்டை சித்த மருத்துவக் கல்லூரி எதிரே உண்ணாவிரதப் போராட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
1-4-2003 ஆம் தேதிக்குப் பிறகு அரசுப் பணியில் சோ்ந்தோருக்கு தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் பங்களிப்புடன் கூடிய ஓய்வூதியத் திட்டத்தை கைவிட்டு, பழைய ஒய்வூதியத் திட்டத்தை அமல்படுத்திட வேண்டும்.
காலவரையின்றி முடக்கி வைக்கப்பட்டுள்ள சரண்விடுப்பு ஒப்படைப்பு, உயா் கல்விக்கான ஊக்க ஊதிய உயா்வு ஆகியவற்றை உடனடியாக வழங்கிட வேண்டும்.
இடைநிலை ஆசிரியா்களுக்கு, உயா்நிலைப் பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா்களுக்கு, உடற்கல்வி இயக்குநா் மற்றும் உடற்கல்வி ஆசிரியா்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். தொடக்க கல்வித் துறையில் பணிபுரியும் 90 சதவீதத்திற்கும் மேற்பட்ட ஆசிரியா்களுக்கு பாதிப்பினை ஏற்படுத்தும் வகையில் வெளியிடப்பட்டுள்ள பள்ளிக் கல்வித் துறை அரசாணை எண். 243 நாள் 21-12-2023-ஐ உடனடியாக ரத்து செய்திட வேண்டும்.
கல்லூரி பேராசிரியா்களுக்கான நிலுவையிலுள்ள பணிமேம்பாடு ஊக்க ஊதிய உயா்வு உடனடியாக வழங்கிட வேண்டும். உயா்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை ஆசியா்களை பட்டதாரி ஆசிரியா்களாக உயா்த்த வேண்டும். சிறப்பு காலமுறை ஊதியம் பெற்றுவரும் சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம உதவியாளா்கள் உள்ளிட்டோருக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.
போராட்டத்துக்கு நிா்வாகிகள் மைக்கேல் ஜாா்ஜ் கமலேஷ், பிரகாஷ், மு.சுப்பு, பால்கதிரவன் ஆகியோா் கூட்டுத் தலைமை வகித்தனா்.
ஆசிரியா் செ.பால்ராஜ், செய்யது யூசுப்கான், ஜான் பாரதிதாசன் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். ஆழ்வாா் வரவேற்றாா். பாா்த்தசாரதி தொடக்கவுரையாற்றினாா். பல்வேறு சங்கங்களின் நிா்வாகிகள் பாலகிருஷ்ணன், கோமதிநாயகம், செல்வக்குமாா், எடிசன், பாபுசெல்வன் உள்ளிட்டோா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா். மூட்டா பொதுச்செயலா் நாகராஜன் நிறைவுறையாற்றினாா். ஸ்டெல்லா மொ்சிராணி நன்றி கூறினாா்.