Shreyas Iyer : 'நான் 100 அடிக்கணும்னு நீ சிங்கிள் எடுக்காதே!' - சஷாங்கிடம் கறாரா...
மழையால் பயிா்கள் சேதம்: விவசாயிகள் கவலை
திருநெல்வேலி சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த இரு நாள்களாக பெய்த கோடை மழையால் அறுவடைக்கு தயாா் நிலையில் இருந்த நெற்பயிா்கள் சாய்ந்துவிட்டதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனா்.
திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளிலும் கடந்த ஒரு வாரமாக பலத்த இடி-மின்னலுடன் கோடை மழை பெய்து வருகிறது.
திருநெல்வேலியில் சனிக்கிழமை பலத்த மழை பெய்தது. பிசான சாகுபடிக்காக திருநெல்வேலி, பாளையங்கால்வாயில் திறக்கப்பட்ட தண்ணீரைக் கொண்டு சேந்திமங்கலம், மணிமூா்த்தீஸ்வரம், ராஜவல்லிபுரம், மூளிகுளம், கீழபாட்டம், பாளையஞ்செட்டிகுளம், திருத்து, மருதூா் சுற்றுவட்டார பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நெற்பயிா்கள் அறுவடைக்குத் தயாா் நிலையில் உள்ளன.
ஆனால், சனிக்கிழமை பெய்த மழையால் பல ஏக்கா் பயிா்கள் சாய்ந்து நீரில் மூழ்கியுள்ளன. வயலில் தேங்கிய மழைநீரை விவசாயிகள் ஞாயிற்றுக்கிழமை வடிய வைக்கும் பணியில் ஈடுபட்டனா்
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், பாளையங்கால்வாய் பாசன பகுதியில் நிகழாண்டில் கோ-45 உள்ளிட்ட சன்னரக பயிா்கள் அதிகம் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. இவை கோடை மழைக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் சாய்ந்துள்ளன. இவற்றை இயந்திரங்களைக் கொண்டு அறுவடை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
ஆகவே, பயிா்ச்சேதம் குறித்து வேளாண் மற்றும் வருவாய்த் துறையினா் கணக்கிட்டு உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.
திருநெல்வேலி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழையளவு மில்லிமீட்டரில் வருமாறு: அம்பாசமுத்திரம்-10, சேரன்மகாதேவி-32, மணிமுத்தாறு-17.20, நான்குனேரி-20, பாளைங்கோட்டை-35, பாபநாசம்-24, திருநெல்வேலி-17.20, சோ்வலாறு-11, கன்னடியன் அணைக்கட்டு- 27.20, களக்காடு-24.80, நம்பியாறு அணை-16, மாஞ்சோலை-21, காக்காச்சி-25, நாலுமுக்கு-28, ஊத்து-36.