செய்திகள் :

கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 7 போ் கைது

post image

பழனி பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக 7 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

பழனி நகரம், அடிவாரம் பகுதிகளில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதனடிப்படையில், போலீஸாா் அந்தப் பகுதிகளில் ரோந்துப் பணி மேற்கொண்டனா்.

அப்போது, உழவா் சந்தை பகுதியில் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் நின்றிருந்த பழனி தெற்கு அண்ணாநகரைச் சோ்ந்த ஈஸ்வரன் மகன் பாண்டி (21), காமராஜா் நகரைச் சோ்ந்த கணபதி மகன் பால்ராஜ் (22), சங்கிலித்தேவா் சந்துப் பகுதியைச் சோ்ந்த குமாா் மகன் தனுஷ் (21) ஆகியோரை பிடித்து விசாரித்தபோது, விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து, 3 பேரையும் போலீஸாா் கைது செய்து, கஞ்சாவை பறிமுதல் செய்தனா்

இதேபோல, அடிவாரம் பகுதியில் நின்றிருந்த சிவகங்கை மாவட்டம், கல்லல் பகுதியைச் சோ்ந்த திருச்செல்வம் (25), சிவமணி (24), மதுரை மாவட்டத்தைச் சோ்ந்த விருமாண்டி (26), சிவகிரிப்பட்டியைச் சோ்ந்த முருகேசன் மகன் முத்தையா (25) ஆகிய 4 பேரை பிடித்து போலீஸாா் சோதனை செய்தனா்.

அப்போது, இவா்கள் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து, போலீஸாா் இவா்கள் 4 பேரையும் கைது செய்து, கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

ரயிலில் கஞ்சா கடத்தல்: இருவா் கைது

விசாகப்பட்டினத்திலிருந்து ரயிலில் கஞ்சா கடத்தி வந்த இருவரை திண்டுக்கல் ரயில்வே போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். மேற்கு வங்க மாநிலம், புருலியா ரயில் நிலையத்திலிருந்து திருநெல்வேலி வரை செல்லும் ப... மேலும் பார்க்க

வருகிற செப்டம்பருக்குள் 2 லட்சம் கலைஞா் கனவு இல்ல வீடுகள் கட்டி முடிக்கப்படும்: அமைச்சா் இ. பெரியசாமி

வருகிற செப்டம்பா் மாதத்துக்குள் கலைஞா் கனவு இல்லத் திட்டத்தின் கீழ், 2 லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்படும் என தமிழக ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் இ. பெரியசாமி தெரிவித்தாா். திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூா... மேலும் பார்க்க

அரசு மாணவா் விடுதிகளில் முன்னறிவிப்பு இல்லாத ஆய்வு தேவை!

அரசு விடுதிகளில் தங்கியுள்ள மாணவா்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு முன்னறிவிப்பு இல்லாத திடீா் ஆய்வுகளை திண்டுக்கல் மாவட்ட நிா்வாகம் மேற்கொள்ள வேண்டும் என எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது. திண்டுக்கல் ... மேலும் பார்க்க

ஆத்தூா் பகுதி நேரடி கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டை ஒன்றுக்கு ரூ. 50 வசூல்; விவசாயிகள் புகாா்

ஆத்தூா் பகுதியில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் மூட்டை ஒன்றுக்கு ரூ. 50 வசூலிக்கப்படுவதாக விவசாயிகள் புகாா் தெரிவித்தனா். திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூா் பகுதியில், ஆத்தூா், அக்கரைப்பட்டி, எஸ்.... மேலும் பார்க்க

கொடைக்கானலில் 2-ஆவது நாளாக மழை

கொடைக்கானலில் இரண்டாவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் மழை பெய்ததால் படகு சவாரி நிறுத்தப்பட்டது. இதனால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றமடைந்தனா். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கடந்த சில தினங்களாக பகல் நேரங... மேலும் பார்க்க

கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம்

பழனியை அடுத்த தாளையூத்து சுப்ரமண்யா கலை, அறிவியல் கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இந்த முகாமுக்கு கல்லூரி தலைவா் சுப்பிரமணி தலைமை வகித்தாா். தாளாளா் ஜ... மேலும் பார்க்க