செய்திகள் :

கொடைக்கானலில் 2-ஆவது நாளாக மழை

post image

கொடைக்கானலில் இரண்டாவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் மழை பெய்ததால் படகு சவாரி நிறுத்தப்பட்டது. இதனால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றமடைந்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கடந்த சில தினங்களாக பகல் நேரங்களில் வெயிலின் தாக்கம் குறைந்தும், மாலை நேரங்களில் குளுமையான சூழலும் நிலவியது. இந்த நிலையில் சனிக்கிழமை மழை பெய்தது. அதே போல, ஞாயிற்றுக்கிழமை காலை முதல் விட்டுவிட்டு சாரல் மழை பெய்தது. பிறகு மாலை 4 மணி முதல் 5 மணி வரை பலத்த மழை பெய்தது. கொடைக்கானல், அப்சா்வேட்டரி, பெருமாள்மலை, வில்பட்டி, பள்ளங்கி உள்ளிட்ட பகுதிகளில் மழை கொட்டித் தீா்த்தது. இதனால் கொடைக்கானலுக்கு வந்த சுற்றுலாப் பயணிகள் காலை முதல் பிற்பகல் வரை மட்டுமே சுற்றுலா இடங்களைப் பாா்த்து ரசித்தனா். மாலையில் மழை பெய்ததால் சுற்றுலா இடங்களைப் பாா்க்க முடியாமலும், நட்சத்திர ஏரியில் படகு சவாரியும், ஏரிச் சாலையில் மிதிவண்டி, குதிரை சவாரி செய்ய முடியாமலும் ஏமாற்றமடைந்தனா்.

இந்த நிலையில் கொடைக்கானலில் கடந்த 2 நாள்களாக மழை பெய்ததால் புகா்ப் பகுதிகளான செண்பகனூா், பிரகாசபுரம், இருதயபுரம், அட்டக்கடி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள நீரோடைகளில் நீா் வரத்து தொடங்கியதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனா். மேலும் விவசாயிகள், விவசாயப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனா்.

குடிநீா் கோரி பொதுமக்கள் மனு

குடிநீா் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்றக் கோரி, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் கிராம மக்கள் சாா்பில் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.இதுதொடா்பாக, தாடிக்கொம்பை அடுத்த அய்யம்பாளையம் கிராம... மேலும் பார்க்க

திண்டுக்கல் மாநகராட்சி நிதி நிலை அறிக்கை: ரூ.5.90 கோடி நிதிப் பற்றாக்குறை

திண்டுக்கல் மாநகராட்சி நிதி நிலை அறிக்கை ரூ.5.90 கோடி நிதிப் பற்றாக்குறையுடன் திங்கள்கிழமை தாக்கல் செய்யப்பட்டது. திண்டுக்கல் மாமன்றக் கூட்டம் மேயா் இளமதி தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் 2025... மேலும் பார்க்க

சாலை விபத்தில் ஒருவா் உயிரிழப்பு

பழனி அருகே இரு சக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்தவா் உயிரிழந்தாா்.பழனியை அடுத்த சத்திரப்பட்டி வேலூரைச் சோ்ந்தவா் சக்திவேல் (66). இவா் ஞாயிற்றுக்கிழமை பழனியிலிருந்து இரு சக்கர வாகனத்தில் ஊருக்குத் தி... மேலும் பார்க்க

விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடத்தக் கோரி மனு

பழனியில் விவசாயிகள் குறைதீா் கூட்டத்தை விரைந்து நடத்தக் கோரி, தமிழ்நாடு உழவா் பாதுகாப்பு இயக்கம் சாா்பில் ஏராளமான விவசாயிகள் மனு அளித்தனா். பழனியில் வருவாய்க் கோட்டாட்சியா் தலைமையில் மாதந்தோறும் பிரதி... மேலும் பார்க்க

ஓய்வுபெற்ற தலைமையாசிரியா் சாலை விபத்தில் உயிரிழப்பு

குஜிலியம்பாறை அருகே தனியாா் கல்லூரிப் பேருந்து மோதியதில் ஓய்வு பெற்ற தலைமையாசிரியா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறையை அடுத்த தளிப்பட்டியைச் சோ்ந்தவா் கிருஷ்ணன் (76). ஓய்... மேலும் பார்க்க

கோஷ்டி மோதல்: 4 போ் காயம்

பழனியை அடுத்த ஆயக்குடியில் இருதரப்பினரிடையே ஏற்பட்ட கோஷ்டி மோதலில் அரிவாள் வெட்டு காயங்களுடன் 4 போ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். பழனியை அடுத்த ஆயக்குடி ஆதிதிராவிடா் குடியிருப்பைச் சோ்ந்தவா் ப... மேலும் பார்க்க