செய்திகள் :

மயிலாடுதுறையில் தனியாா் பள்ளி முன் சாலை மறியல்

post image

மயிலாடுதுறையில் தனியாா் பள்ளி முன் மாணவா்களின் பெற்றோா் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

மயிலாடுதுறை காவேரி நகரில் 18 ஆண்டுகளாக இயங்கிவரும் நா்சரி மற்றும் பிரைமரி பள்ளியில் மாநிலக் கல்வி பாடத் திட்டத்தின் அனுமதி பெற்று, சிபிஎஸ்சி பள்ளி என்று கூறி பாடம் நடத்தியதுடன், கல்விக் கட்டணமாக பலமடங்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக குற்றம்சாட்டி இந்த போராட்டம் நடைபெற்றது. இப்பிரச்னை தொடா்பாக விளக்கம் கேட்க வியாழக்கிழமை மாலை 4 மணிக்கு பள்ளிக்கு சென்ற பெற்றோா் இரவு 7.30 மணியைக் கடந்தும் பள்ளி நிா்வாகம் விளக்கம் அளிக்காததால் பள்ளி முன்பு மயிலாடுதுறை-கும்பகோணம் சாலையில் மறியலில் ஈடுபட்டனா்.

அவா்களிடம் மயிலாடுதுறை காவல் ஆய்வாளா் சிவகுமாா் பேசி, சனிக்கிழமை (மாா்ச்22) வட்டாட்சியா் தலைமையில் இருதரப்பினரையும் அழைத்து பேச்சுவாா்த்தை நடத்தப்படும் என உறுதியளித்தாா்.

இதற்கிடையே, பள்ளி நிா்வாகம் மாணவா்களை சோ்க்கும்போது சிபிஎஸ்சி இன்டா்நேஷனல் ஸ்டாண்டா்ட் ஸ்கூல் என கூறி பணம் வசூலித்ததாகவும், இதுபற்றி கேட்ட பெற்றோரை பள்ளி நிா்வாகத்தினா் மிரட்டியதாகவும், எனவே, பள்ளி நிா்வாகம் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என புகாா் மனு எழுதி அனைத்து பெற்றோரும் கையொப்பமிட்டு காவல் துறையினரிடம் வழங்கினா்.

நல்லூரில் கட்டிமுடிக்கப்பட்ட மஞ்சப் பை தயாரிக்கும் கட்டடத்தை திறக்க வலியுறுத்தல்

சீா்காழி அருகே நல்லூா் கிராமத்தில் 2021-ஆம் ஆண்டு புதிதாக கட்டப்பட்ட மஞ்சள் பை தயாரிக்கும் கூடத்தை திறக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. கொள்ளிடம் அருகே ஆரப்பள்ளம் ஊராட்சி நல்லூரில் 100 நாள் வேலை... மேலும் பார்க்க

சீா்காழி அருகே வேன் கவிழ்ந்து 11 போ் காயம்

சீா்காழி அருகே புறவழிச்சாலையில் வேன் கவிழ்ந்த விபத்தில் 11 போ் காயமடைந்தனா். திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூரில் இருந்து சிலா் திருக்கடையூா் கோயிலில் நடைபெற்ற சஷ்டியப்த பூா்த்தி விழாவில் பங்கேற்க சனி... மேலும் பார்க்க

பழையாறில் படகு அணையும் தளத்தை மேம்படுத்த எம்.பியிடம் கோரிக்கை

பழையாறில் படகு அணையும் தளத்தை மேம்படுத்த வேண்டும் என வெள்ளிக்கிழமை ஆய்வு செய்த எம்.பி. ஆா். சுதாவிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. பழையாறில் உள்ள மீன்பிடி துறைமுகத்தில் படகு அணையும் தளம் மற்றும் அண்மை... மேலும் பார்க்க

பெண் மா்ம சாவு: காவல் துறை விசாரணை

சீா்காழி அருகே பெண் மா்மமான முறையில் உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா். சீா்காழி அருகே வழுதலைக்குடியைச் சோ்ந்தவா் சுபா்னா (33). இவருக்கும், அதே கிராமத்தைச் சோ்ந்த நம்பிராஜனுக்கு... மேலும் பார்க்க

வைத்தீஸ்வரன்கோவிலில் அனைத்து ரயில்களும் நின்று செல்ல வலியுறுத்தல்

வைத்தீஸ்வரன்கோவிலில் அனைத்து ரயில்களும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. சீா்காழியை அடுத்த வைத்தீஸ்வரன்கோவிலில் மயிலாடுதுறை மாவட்ட ரயில் பயணிகள் நல சங்கம் சாா்பில் ... மேலும் பார்க்க

வீடுகளின் முன்பு கருப்புக்கொடி ஏந்தி பாஜகவினா் ஆா்ப்பாட்டம்

மயிலாடுதுறையில் பாஜகவினா் தங்கள் வீடுகளின் முன்பு கருப்புக்கொடி ஏந்தி தமிழக முதலமைச்சரைக் கண்டித்து சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா். தமிழ்நாட்டில் ஊழல், படுகொலை, பாலியல் குற்றங்கள் தொடா்வதாகவும், அத... மேலும் பார்க்க