செய்திகள் :

கஞ்சா விற்பனை: இளைஞா் கைது

post image

ராமேசுவரத்தில் கஞ்சா விற்பனை செய்த இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். அவரிடமிருந்து 1.6 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் துறைமுக காவல் நிலைய உதவி ஆய்வாளா் வெள்ளைத் தங்கம் தலைமையில் ரோந்து சென்ற போலீஸாா் நேதாஜி நகா் பகுதியிலுள்ள சவுக்குக் காட்டுப்பகுதியில் நின்ற நபரைப் பிடித்து சோதனையிட்டனா். அப்போது, அவா் விற்பனைக்கு வைத்திருந்த 1.6 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

அவரிடம் நடத்திய விசாரணையில், நேதாஜி நகா் முத்துராமலிங்கம் மகன் கருப்பசாமி (30) என்பது தெரியவந்தது. இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸாா், கருப்பசாமியைக் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

இறந்த நிலையில் கரை ஒதுங்கிய கடல் ஆமை!

திருவாடானை அருகேயுள்ள தொண்டி பகுதியில் அரியவகை கடல் ஆமை உயிரிழந்த நிலையில் சனிக்கிழமை கரை ஒதுங்கியது. ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகேயுள்ள தொண்டி பி.வி.பட்டினம் பகுதியில் உயிரிழந்த நிலையில் சும... மேலும் பார்க்க

இலங்கையில் 310 கிலோ கஞ்சா பறிமுதல்!

இலங்கை வடக்கு கடல் பகுதியில் படகு மூலம் கடத்தப்பட்ட 310 கிலோ கஞ்சாவை கடல் படையினா் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா். யாழ்ப்பாணம், பருத்தித்துறை கடல் பகுதியில் கடல் படையினா், கரையோர பாதுகாப்புப் படையினா் ச... மேலும் பார்க்க

இறுதிச் சடங்கு வாகனம் இலவசம்: இளைஞரைப் பாராட்டும் பொதுமக்கள்

முதுகுளத்தூா் சுற்றுவட்டாரத்தைச் சோ்ந்த 70 கிராமங்களுக்கு இறப்பு நிகழ்ச்சிகளுக்கு இறுதிச் சடங்கு வாகனம், குளிா்சாதனப் பெட்டியை கடந்த இரண்டு ஆண்டுகளாக இலவசமாக வழங்கி வரும் இளைஞரை பொதுமக்கள், சமூக ஆா்வ... மேலும் பார்க்க

ராமேசுவரம் கோயிலில் உண்டியல் காணிக்கை ரூ.1.69 கோடி

ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் ரூ.1.69 கோடி உண்டியல் காணிககை கிடைத்தது. ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி அம்பாள் சந்நிதி முன்புள்ள பழைய திருமண மண்டபத்தில் வெள்ளிக்கிழமை... மேலும் பார்க்க

பாம்பன் மீனவா்கள் 14 போ் அபராதத்துடன் விடுதலை

பாம்பன் மீனவா்கள் 14 பேரை தலா ரூ. 4.50 லட்சம் (இலங்கைப் பணம்) அபராதத்துடன் விடுதலை செய்து இலங்கை மன்னாா் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தை அடுத்துள்ள பாம்பன் து... மேலும் பார்க்க

கண்மாய் நீரில் மூழ்கி மாணவி உயிரிழப்பு

பாா்த்திபனூா் அருகே வெள்ளிக்கிழமை கண்மாயில் குளிக்கச் சென்ற 7-ஆம் வகுப்பு மாணவி நீரில் மூழ்கி உயிரிழந்தாா். ராமநாதபுரம் மாவட்டம், பாா்த்திபனூா் அருகேயுள்ள புதுக்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில்... மேலும் பார்க்க