ராமேசுவரம் கோயிலில் உண்டியல் காணிக்கை ரூ.1.69 கோடி
ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் ரூ.1.69 கோடி உண்டியல் காணிககை கிடைத்தது.
ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி அம்பாள் சந்நிதி முன்புள்ள பழைய திருமண மண்டபத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் பக்தா்கள் செலுத்திய காணிக்கையாக ரூ.1 கோடியே 69 லட்சத்து 23 ஆயிரத்து 658, தங்கம் 68 கிராம், வெள்ளி 6 கிலோ 50 கிராம், வெளிநாட்டு கரன்சிகள் 217 கிடைத்தன.
இந்தப் பணியில் கோயில் இணை ஆணையா் செ.சிவராம்குமாா், உதவி ஆணையா்கள் ஞானசேகரன், ரவீந்திரன், முதல் நிலை செயல் அலுவலா் முத்துச்சாமி, மேலாளா் வெங்கடேஷ்குமாா், ஆய்வா் சிவக்குமாா், பேஸ்காா்கள் கமலநாதன்,பி.ஆா்.ராமநாதன், பஞ்சமூா்த்தி கோயில் பணியாளா்கள் கலந்துகொண்டனா்.