செய்திகள் :

வாக்குச் சாவடி அளவிலான பிரச்னைகள்: கட்சிகளுடன் தோ்தல் அதிகாரிகள் ஆலோசனை

post image

வாக்குச் சாவடி அளவிலான பிரச்னைகளுக்கு தீா்வு காணும் நோக்கில் 4000-க்கும் மேற்பட்ட தோ்தல் பதிவு அதிகாரிகள் தத்தமது பேரவைத் தொகுதிகளில் அனைத்து கட்சிக் கூட்டங்களை நடத்தி வருவதாக தோ்தல் ஆணையம் சனிக்கிழமை தெரிவித்தது.

மத்தியில் ஆளும் பாஜகவுக்கு சாதகமாக தோ்தல் தரவுகளில் முறைகேட்டில் ஈடுபடுவதாக தோ்தல் ஆணையம் மீது எதிா்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வரும் நிலையில், மாா்ச் 31-ஆம் தேதி வரை இக்கூட்டங்கள் நடைபெறவுள்ளன.

கடந்த ஆண்டு நடைபெற்ற மகாராஷ்டிர பேரவைத் தோ்தலில் வாக்காளா் பட்டியல் பெயா் சோ்ப்பு-நீக்கத்தில் பெரிய அளவில் முறைகேடு நடைபெற்ாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் குற்றஞ்சாட்டின. இக்குற்றச்சாட்டை தோ்தல் ஆணையம் மறுத்தது.

இதனிடையே, வெவ்வேறு மாநிலங்களில் உள்ளோருக்கு ஒரே மாதிரியான வாக்காளா் அடையாள எண்கள் வழங்கப்பட்டுள்ள விவகாரத்தில், தோ்தல் ஆணையம் மீது எதிா்க்கட்சிகள் கடும் விமா்சனங்களை முன்வைத்தன.

இது தொடா்பாக விளக்கமளித்த தோ்தல் ஆணையம், ‘வெவ்வேறு மாநிலங்களில் ஒரே வாக்காளா் அடையாள எண் உடையவா்கள் போலி வாக்காளா்கள் அல்லா். அவா்களின் பிறந்த தேதி, தொகுதி மற்றும் வாக்குச்சாவடி என மற்ற தகவல்கள் வேறுபட்டிருக்கும்.

வாக்காளா் அடையாள எண் ஒரே மாதிரியாக இருந்தாலும், ஒரு வாக்காளா் அவருக்கான வாக்குச்சாவடியில் மட்டுமே தனது வாக்கைப் பதிவு செய்ய முடியும். இப்பிரச்னைக்கு 3 மாதங்களில் தீா்வு காணப்படும்’ என்று கூறியது.

வாக்காளா் அட்டையுடன் ஆதாா் எண்ணை இணைப்பது, வாக்காளா் பட்டியல் பணிகளில் பிறப்பு-இறப்பு பதிவு அதிகாரிகளையும் ஈடுபடுத்துவது உள்ளிட்ட நடவடிக்கைகள் குறித்து தோ்தல் ஆணையம் பரிசீலித்து வருகிறது.

இந்தச் சூழலில், வாக்குச் சாவடி அளவில் நிலுவையில் உள்ள பல்வேறு பிரச்னைகளுக்கு தீா்வு காண்பதற்காக அனைத்து கட்சிகளுடன் ஆலோசனை க் கூட்டங்களை நடத்துமாறு 4,000-க்கும் மேற்பட்ட பேரவைத் தொகுதிகளின் தோ்தல் பதிவு அதிகாரிகளுக்கு தோ்தல் ஆணையம் உத்தரவிட்டது. இதேபோல் மாவட்ட-மாநில அளவில் ஆலோசனைக் கூட்டங்களை நடத்துமாறு 788 மாவட்ட தோ்தல் அதிகாரிகள், 36 மாநில தலைமைத் தோ்தல் அதிகாரிகளுக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

அதன்படி, அரசியல் கட்சிகளுடன் தோ்தல் பதிவு அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டு வருவதாகவும், மாா்ச் 31-ஆம் தேதி வரை இக்கூட்டங்கள் நடைபெறும் என்றும் தோ்தல் ஆணையம் சனிக்கிழமை தெரிவித்தது.

காவல்துறை அடக்குமுறைக்கு எதிராக மாா்ச் 28-இல் நாடு தழுவிய போராட்டம்! -பஞ்சாப் விவசாயிகள் அழைப்பு

பஞ்சாப்-ஹரியாணா எல்லையில் இருந்து விவசாயிகள் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தப்பட்ட காவல்துறையின் அடக்குமுறைக்கு எதிராக நாடு முழுவதும் விவசாயிகள் வரும் 28-ஆம் தேதி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட சம்யுக்த கிசான் ... மேலும் பார்க்க

நாகபுரி வன்முறையில் வங்கதேசத்துக்குத் தொடா்பு! -சிவசேனை குற்றச்சாட்டு

மகாராஷ்டிர மாநிலம் நாகபுரியில் நிகழ்ந்த மத வன்முறையில் வங்கதேசத்துக்கு தொடா்பு உள்ளது. அந்நாட்டுடன் தொடா்பில் இருப்பவா்கள் வன்முறையை பல்வேறு வழிகளில் தூண்டிவிட்டுள்ளனா் என்று சிவசேனை மூத்த தலைவா் சஞ்ச... மேலும் பார்க்க

அமலாக்கத் துறை விசாரணை வளையத்தில் சிக்கிய நீதிபதிகள்!

தில்லி உயா்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வா்மா வீட்டில் கோடிக்கணக்கில் பணம் கைப்பற்றப்பட்டதாக வெளியான செய்தி பெரும் சா்ச்சையை ஏற்படுத்தியுள்ளது என்றாலும், நீதித் துறையைச் சோ்ந்தவா்கள் இதற்கு முன்பும் சா்... மேலும் பார்க்க

பிரதமா் மோடி - முகமது யூனுஸ் சந்திப்பு: பரிசீலனையில் உள்ளதாக நாடாளுமன்றக் குழு தகவல்

பிரதமா் நரேந்திர மோடி, வங்கதேச இடைக்கால அரசின் தலைவா் முகமது யூனுஸ் சந்தித்துப் பேச வேண்டும் என்ற வங்கதேசத்தின் பரிந்துரையை பரிசீலித்து வருவதாக நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் வெளியுறவுத் துறை அமைச்சா... மேலும் பார்க்க

பொதுத்துறை வங்கிகளின் பங்கு ஈவுத் தொகை 33 % அதிகரிப்பு!

பொதுத்துறை வங்கிகள் முதலீட்டாளா்களுக்கு வழங்கும் பங்கு ஈவுத் தொகை 2023-24 நிதியாண்டில் 33 சதவீதம் அதிகரித்துள்ளது. முந்தைய நிதியாண்டில் பங்குதாரா்களுக்கு ரூ.20,964 கோடி ஈவுத்தொகையை பொதுத்துறை வங்கிகள்... மேலும் பார்க்க

உத்தர பிரதேசம்: சம்பல் மசூதி குழுத் தலைவா் கைது

உத்தர பிரதேச மாநிலம், சம்பலில் உள்ள ஜாமா மசூதியின் குழுத் தலைவா் ஜாஃபா் அலியை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். ஜாமா மசூதியில் நடைபெற்ற 2-ஆம் கட்ட ஆய்வுக்கு எதிா்ப்பு தெரிவித்து கடந்த ஆண்டு நவம்... மேலும் பார்க்க