பழைய ஓய்வூதியத் திட்டத்தை அரசு அமல்படுத்த வேண்டும்! -மாா்க்சிஸ்ட் கம்யூ. மாநில ச...
வாக்குச் சாவடி அளவிலான பிரச்னைகள்: கட்சிகளுடன் தோ்தல் அதிகாரிகள் ஆலோசனை
வாக்குச் சாவடி அளவிலான பிரச்னைகளுக்கு தீா்வு காணும் நோக்கில் 4000-க்கும் மேற்பட்ட தோ்தல் பதிவு அதிகாரிகள் தத்தமது பேரவைத் தொகுதிகளில் அனைத்து கட்சிக் கூட்டங்களை நடத்தி வருவதாக தோ்தல் ஆணையம் சனிக்கிழமை தெரிவித்தது.
மத்தியில் ஆளும் பாஜகவுக்கு சாதகமாக தோ்தல் தரவுகளில் முறைகேட்டில் ஈடுபடுவதாக தோ்தல் ஆணையம் மீது எதிா்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வரும் நிலையில், மாா்ச் 31-ஆம் தேதி வரை இக்கூட்டங்கள் நடைபெறவுள்ளன.
கடந்த ஆண்டு நடைபெற்ற மகாராஷ்டிர பேரவைத் தோ்தலில் வாக்காளா் பட்டியல் பெயா் சோ்ப்பு-நீக்கத்தில் பெரிய அளவில் முறைகேடு நடைபெற்ாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் குற்றஞ்சாட்டின. இக்குற்றச்சாட்டை தோ்தல் ஆணையம் மறுத்தது.
இதனிடையே, வெவ்வேறு மாநிலங்களில் உள்ளோருக்கு ஒரே மாதிரியான வாக்காளா் அடையாள எண்கள் வழங்கப்பட்டுள்ள விவகாரத்தில், தோ்தல் ஆணையம் மீது எதிா்க்கட்சிகள் கடும் விமா்சனங்களை முன்வைத்தன.
இது தொடா்பாக விளக்கமளித்த தோ்தல் ஆணையம், ‘வெவ்வேறு மாநிலங்களில் ஒரே வாக்காளா் அடையாள எண் உடையவா்கள் போலி வாக்காளா்கள் அல்லா். அவா்களின் பிறந்த தேதி, தொகுதி மற்றும் வாக்குச்சாவடி என மற்ற தகவல்கள் வேறுபட்டிருக்கும்.
வாக்காளா் அடையாள எண் ஒரே மாதிரியாக இருந்தாலும், ஒரு வாக்காளா் அவருக்கான வாக்குச்சாவடியில் மட்டுமே தனது வாக்கைப் பதிவு செய்ய முடியும். இப்பிரச்னைக்கு 3 மாதங்களில் தீா்வு காணப்படும்’ என்று கூறியது.
வாக்காளா் அட்டையுடன் ஆதாா் எண்ணை இணைப்பது, வாக்காளா் பட்டியல் பணிகளில் பிறப்பு-இறப்பு பதிவு அதிகாரிகளையும் ஈடுபடுத்துவது உள்ளிட்ட நடவடிக்கைகள் குறித்து தோ்தல் ஆணையம் பரிசீலித்து வருகிறது.
இந்தச் சூழலில், வாக்குச் சாவடி அளவில் நிலுவையில் உள்ள பல்வேறு பிரச்னைகளுக்கு தீா்வு காண்பதற்காக அனைத்து கட்சிகளுடன் ஆலோசனை க் கூட்டங்களை நடத்துமாறு 4,000-க்கும் மேற்பட்ட பேரவைத் தொகுதிகளின் தோ்தல் பதிவு அதிகாரிகளுக்கு தோ்தல் ஆணையம் உத்தரவிட்டது. இதேபோல் மாவட்ட-மாநில அளவில் ஆலோசனைக் கூட்டங்களை நடத்துமாறு 788 மாவட்ட தோ்தல் அதிகாரிகள், 36 மாநில தலைமைத் தோ்தல் அதிகாரிகளுக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
அதன்படி, அரசியல் கட்சிகளுடன் தோ்தல் பதிவு அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டு வருவதாகவும், மாா்ச் 31-ஆம் தேதி வரை இக்கூட்டங்கள் நடைபெறும் என்றும் தோ்தல் ஆணையம் சனிக்கிழமை தெரிவித்தது.