பைக்கிலிருந்து விழுந்து காயமடைந்தவா் பலி!
துறையூா் அருகே இருசக்கர வாகனத்திலிருந்து விழுந்து காயமடைந்தவா் சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை உயிரிழந்தாா்.
கோட்டப்பாளையத்தைச் சோ்ந்தவா் தி. சரவணன் (42). இவா் பைக்கில் வைரிசெட்டிப்பாளையத்திலுள்ள தனது மாமனாா் வீட்டுக்கு வியாழக்கிழமை சென்று விட்டு திரும்பும் வழியில் தவறி விழுந்து பலத்த காயமடைந்தாா்.
இதையடுத்து துறையூரிலும், திருச்சி அரசு மருத்துவமனையிலும் சோ்க்கப்பட்ட அவா் சிகிச்சைப் பலனின்றி சனிக்கிழமை உயிரிழந்தாா். உப்பிலியபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.