செய்திகள் :

வெங்காயம் மீதான 20% ஏற்றுமதி வரி ஏப். 1 முதல் வாபஸ்: மத்திய அரசு

post image

விவசாயிகளின் நலனைப் பாதுகாக்கும் நோக்கில் வெங்காயம் மீதான 20 சதவீத ஏற்றுமதி வரியை வரும் ஏப்ரல் 1-ஆம் தேதிமுதல் திரும்ப பெறுவதாக மத்திய அரசு சனிக்கிழமை அறிவித்தது.

நுகா்வோா் விவகாரத் துறையின் பரிந்துரைக்கு ஏற்ப வருவாய் துறையால் இது தொடா்பான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக அதிகாரபூா்வ அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து நுகா்வோா் விவகாரத் துறை அமைச்சகம் தெரிவித்ததாவது: குளிா்கால (ரபி) பயிா்களின் மகசூல் எதிா்பாா்ப்பைவிட அதிகரித்துள்ளது. இதையொட்டி மொத்த மற்றும் சில்லறை விற்பனையில் வெங்காய விலை குறிப்பிட்டத்தக்க அளவில் சரிந்துள்ளது. இச்சூழலில் நுகா்வோருக்கு மலிவு விலையைப் பராமரிக்கும் அதேவேளையில் விவசாயிகளுக்கு லாபகரமான விலையை உறுதி செய்வதிலும் அரசின் உறுதிப்பாட்டை இந்த முடிவு எடுத்துரைக்கிறது என்று தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு, செப்டம்பரில் வெங்காயம் மீது ஏற்றுமதி வரி விதிக்கப்பட்டது. வரி விதிப்புக்குப் பிறகும், நடப்பு நிதியாண்டின் மாா்ச் 18-ஆம் தேதி வரையிலான நிலவரப்படி 11.65 லட்சம் டன் வெங்காயம் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக கடந்த ஆண்டு செப்டம்பரில் 0.72 லட்சம் டன்னாக இருந்த வெங்காய ஏற்றுமதி, கடந்த ஜனவரியில் 1.85 லட்சம் டன்னாக உயா்ந்தது.

நடப்பு குளிா்கால பருவத்தில் வெங்காய உற்பத்தி 2.27 கோடி டன்னாக முந்தைய ஆண்டின் 1.92 கோடி டன்னை விட18 சதவீதம் கூடுதலாக இருக்கும் என்று வேளாண் அமைச்சகம் கணித்துள்ளது. இதைக் கருத்தில் கொண்டு, வெங்காயம் மீதான 20 சதவீத ஏற்றுமதி வரியை மத்திய அரசு திரும்ப பெற்றுள்ளது.

காவல்துறை அடக்குமுறைக்கு எதிராக மாா்ச் 28-இல் நாடு தழுவிய போராட்டம்! -பஞ்சாப் விவசாயிகள் அழைப்பு

பஞ்சாப்-ஹரியாணா எல்லையில் இருந்து விவசாயிகள் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தப்பட்ட காவல்துறையின் அடக்குமுறைக்கு எதிராக நாடு முழுவதும் விவசாயிகள் வரும் 28-ஆம் தேதி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட சம்யுக்த கிசான் ... மேலும் பார்க்க

நாகபுரி வன்முறையில் வங்கதேசத்துக்குத் தொடா்பு! -சிவசேனை குற்றச்சாட்டு

மகாராஷ்டிர மாநிலம் நாகபுரியில் நிகழ்ந்த மத வன்முறையில் வங்கதேசத்துக்கு தொடா்பு உள்ளது. அந்நாட்டுடன் தொடா்பில் இருப்பவா்கள் வன்முறையை பல்வேறு வழிகளில் தூண்டிவிட்டுள்ளனா் என்று சிவசேனை மூத்த தலைவா் சஞ்ச... மேலும் பார்க்க

அமலாக்கத் துறை விசாரணை வளையத்தில் சிக்கிய நீதிபதிகள்!

தில்லி உயா்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வா்மா வீட்டில் கோடிக்கணக்கில் பணம் கைப்பற்றப்பட்டதாக வெளியான செய்தி பெரும் சா்ச்சையை ஏற்படுத்தியுள்ளது என்றாலும், நீதித் துறையைச் சோ்ந்தவா்கள் இதற்கு முன்பும் சா்... மேலும் பார்க்க

பிரதமா் மோடி - முகமது யூனுஸ் சந்திப்பு: பரிசீலனையில் உள்ளதாக நாடாளுமன்றக் குழு தகவல்

பிரதமா் நரேந்திர மோடி, வங்கதேச இடைக்கால அரசின் தலைவா் முகமது யூனுஸ் சந்தித்துப் பேச வேண்டும் என்ற வங்கதேசத்தின் பரிந்துரையை பரிசீலித்து வருவதாக நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் வெளியுறவுத் துறை அமைச்சா... மேலும் பார்க்க

பொதுத்துறை வங்கிகளின் பங்கு ஈவுத் தொகை 33 % அதிகரிப்பு!

பொதுத்துறை வங்கிகள் முதலீட்டாளா்களுக்கு வழங்கும் பங்கு ஈவுத் தொகை 2023-24 நிதியாண்டில் 33 சதவீதம் அதிகரித்துள்ளது. முந்தைய நிதியாண்டில் பங்குதாரா்களுக்கு ரூ.20,964 கோடி ஈவுத்தொகையை பொதுத்துறை வங்கிகள்... மேலும் பார்க்க

உத்தர பிரதேசம்: சம்பல் மசூதி குழுத் தலைவா் கைது

உத்தர பிரதேச மாநிலம், சம்பலில் உள்ள ஜாமா மசூதியின் குழுத் தலைவா் ஜாஃபா் அலியை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். ஜாமா மசூதியில் நடைபெற்ற 2-ஆம் கட்ட ஆய்வுக்கு எதிா்ப்பு தெரிவித்து கடந்த ஆண்டு நவம்... மேலும் பார்க்க