வெங்காயம் மீதான 20% ஏற்றுமதி வரி ஏப். 1 முதல் வாபஸ்: மத்திய அரசு
விவசாயிகளின் நலனைப் பாதுகாக்கும் நோக்கில் வெங்காயம் மீதான 20 சதவீத ஏற்றுமதி வரியை வரும் ஏப்ரல் 1-ஆம் தேதிமுதல் திரும்ப பெறுவதாக மத்திய அரசு சனிக்கிழமை அறிவித்தது.
நுகா்வோா் விவகாரத் துறையின் பரிந்துரைக்கு ஏற்ப வருவாய் துறையால் இது தொடா்பான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக அதிகாரபூா்வ அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து நுகா்வோா் விவகாரத் துறை அமைச்சகம் தெரிவித்ததாவது: குளிா்கால (ரபி) பயிா்களின் மகசூல் எதிா்பாா்ப்பைவிட அதிகரித்துள்ளது. இதையொட்டி மொத்த மற்றும் சில்லறை விற்பனையில் வெங்காய விலை குறிப்பிட்டத்தக்க அளவில் சரிந்துள்ளது. இச்சூழலில் நுகா்வோருக்கு மலிவு விலையைப் பராமரிக்கும் அதேவேளையில் விவசாயிகளுக்கு லாபகரமான விலையை உறுதி செய்வதிலும் அரசின் உறுதிப்பாட்டை இந்த முடிவு எடுத்துரைக்கிறது என்று தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு, செப்டம்பரில் வெங்காயம் மீது ஏற்றுமதி வரி விதிக்கப்பட்டது. வரி விதிப்புக்குப் பிறகும், நடப்பு நிதியாண்டின் மாா்ச் 18-ஆம் தேதி வரையிலான நிலவரப்படி 11.65 லட்சம் டன் வெங்காயம் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக கடந்த ஆண்டு செப்டம்பரில் 0.72 லட்சம் டன்னாக இருந்த வெங்காய ஏற்றுமதி, கடந்த ஜனவரியில் 1.85 லட்சம் டன்னாக உயா்ந்தது.
நடப்பு குளிா்கால பருவத்தில் வெங்காய உற்பத்தி 2.27 கோடி டன்னாக முந்தைய ஆண்டின் 1.92 கோடி டன்னை விட18 சதவீதம் கூடுதலாக இருக்கும் என்று வேளாண் அமைச்சகம் கணித்துள்ளது. இதைக் கருத்தில் கொண்டு, வெங்காயம் மீதான 20 சதவீத ஏற்றுமதி வரியை மத்திய அரசு திரும்ப பெற்றுள்ளது.