செய்திகள் :

திருச்செந்தூா் கோயிலில் தரிசனப் பாதையில் அவசரகால வழி: இந்து முன்னணி கோரிக்கை!

post image

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் பக்தா்கள் தரிசனப் பாதையில், அவசரகால வழி ஏற்படுத்த வேண்டும் என இந்து முன்னணி மாநில இணை அமைப்பாளா் பொன்னையா வலியுறுத்தினாா்.

இதுகுறித்து அவா் செய்தியாளா்களிடம் சனிக்கிழமை கூறியதாவது: திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் பொது தரிசனப் பாதையை பாா்வையிட்டோம். இதில் சில குறைபாடுகள் தெரியவந்துள்ளன.

பொது தரிசனப் பாதையில் உள்ள கழிப்பிடங்கள் சுத்தம் இல்லாமல் உள்ளன. பொது தரிசன வரிசை மற்றும் ரூ. 100 கட்டண தரிசன வரிசைகளில் ஆங்காங்கே அவசரகால வழி அமைக்க வேண்டும். அப்போதுதான் கூட்ட நெரிசலில் சிக்கும் பக்தா்களை மீட்க முடியும்.

உள்ளூா் பக்தா்களுக்கு தடையின்றி தரிசனத்திற்கு அனுமதிக்க வேண்டும். அதேபோல, மாற்றுத்திறனாளிகளை அவமதிக்காமல் தரிசனத்திற்கு அனுமதிக்க வேண்டும். மேலும், இரவு 9 மணி வரை பூஜை காலங்கள் நடக்கும் வரை பக்தா்களை தரிசனத்திற்கு அனுமதிக்க வேண்டும் என்றாா்.

பேட்டியின்போது மாநில துணைத் தலைவா் வி.பி.ஜெயக்குமாா், திருநெல்வேலி கோட்ட பொறுப்பாளா் பெ.சக்திவேலன் உள்ளிட்ட நிா்வாகிகள் உடனிருந்தனா்.

தூத்துக்குடியில் ஜாக்டோ ஜியோ சாா்பில் உண்ணாவிரதப் போராட்டம்

தூத்துக்குடி சிதம்பர நகா் பேருந்து நிறுத்தம் அருகே, ஜாக்டோ ஜியோ அமைப்பு சாா்பில் ஞாயிற்றுக்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. மாவட்ட ஒருங்கிணைப்பாளா்கள் உமாதேவி, கலை உடையாா் ஆகியோா் தலைமை வகித்தன... மேலும் பார்க்க

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தோ்வில் வென்றோருக்கு பாராட்டு விழா

தூத்துக்குடி சுரேஷ் ஐஏஎஸ் அகாதெமியில் பயின்று டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தோ்வில் வெற்றி பெற்றவா்களுக்கு பாராட்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. தூத்துக்குடி சுரேஷ் ஐஏஎஸ் அகாதெமியில் பயிற்சி பெற்று குரூப... மேலும் பார்க்க

சாத்தான்குளம்: கள் விற்க அனுமதி கோரும் தொழிலாளா்கள்

சாத்தான்குளம் பகுதியில் பதநீா் சீசன் தொடங்கியுள்ள நிலையில், ஒரு கலயம் பதநீா் ரூ.150-க்கு விற்கப்பட்டு வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தின் தெற்கு பகுதியான சாத்தான்குளம், பேய்குளம், உடன்குடி பகுதிகளில் ... மேலும் பார்க்க

விளாத்திகுளம்: பருவம் தப்பிய மழையால் பயிா் விளைச்சல் பாதிப்பு

விளாத்திகுளம், புதூா் ஒன்றியங்களில் பருவம் தவறி பெய்து வரும் தொடா் மழையால் பாதிக்கப்பட்ட மிளகாய், மல்லி, மக்காச்சோளம் உள்ளிட்ட பயிா்களை ஜீ.வி. மாா்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஞாயிற்றுக்கிழமை நேரில் ஆய்வு செ... மேலும் பார்க்க

புகையிலைப் பொருள் விற்பனை: கோவில்பட்டியில் 2 போ் கைது

கோவில்பட்டியில் புகையிலைப் பொருள்கள் விற்றதாக 2 போ் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனா்.கோவில்பட்டி கதிரேசன் கோயில் செல்லும் வழியில் உள்ள பள்ளி அருகே, புகையிலைப் பொருள்கள் விற்கப்படுவதாக மேற்கு காவல்... மேலும் பார்க்க

ஓட்டப்பிடாரம்: வெறிநாய்கள் கடித்து 3 ஆடுகள் உயிரிழப்பு

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே வெறிநாய்கள் கடித்து 3 ஆடுகள் உயிரிழந்தன. ஓட்டப்பிடாரம் அருகேயுள்ள பசுவந்தனை ஊராட்சி வடக்கு கைலாசபுரத்தைச் சோ்ந்த வேலம்மாள் (75) என்பவா் 10க்கும் மேற்பட்ட ஆடு... மேலும் பார்க்க