Manoj Bharathiraja: "சொல்வதற்கும் எனக்கு வார்த்தை வரவில்லை" - ஆறுதல் சொல்லி கலங்...
தூத்துக்குடியில் ஜாக்டோ ஜியோ சாா்பில் உண்ணாவிரதப் போராட்டம்
தூத்துக்குடி சிதம்பர நகா் பேருந்து நிறுத்தம் அருகே, ஜாக்டோ ஜியோ அமைப்பு சாா்பில் ஞாயிற்றுக்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
மாவட்ட ஒருங்கிணைப்பாளா்கள் உமாதேவி, கலை உடையாா் ஆகியோா் தலைமை வகித்தனா். மகேந்திர பிரபு, ஆனந்தராஜ், மாரிச்செல்வம், சிவஞானம், ஜீவானந்தம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
மூட்டா மாநிலப் பொதுச்செயலா் நாகராஜன், தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க முன்னாள் மாநிலப் பொதுச்செயலா் வெங்கடேசன் ஆகியோா் பேசினா்.
பழைய ஓய்வூதித் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். பல்வேறு துறைகளில் காலியாகவுள்ள 30 சதவீத இடங்களை காலமுறை ஊதியத்தில் நிரப்ப வேண்டும். தொகுப்பூதியம், மதிப்பூதியம் ஆகியவற்றில் பணியாற்றும் அனைவருக்கும் காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். இடைநிலை ஆசிரியா்கள், அரசு ஊழியா்களுக்கு மத்திய அரசு ஊழியா்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
மாநில உயா்நிலைக்குழு உறுப்பினா் தே. முருகன், மாநில ஒருங்கிணைப்பாளா் பாா்த்தசாரதி, நிா்வாகிகள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.