செய்திகள் :

குடிமங்கலம் அருகே 3.6 கிலோ கஞ்சா பறிமுதல்: 2 போ் கைது!

post image

குடிமங்கலம் அருகே விற்பனைக்காகப் பதுக்கி வைத்திருந்த 3.6 கிலோ கஞ்சாவை காவல் துறையினா் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா். இது தொடா்பாக இருவரைக் கைது செய்தனா்.

குடிமங்கலம் காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட பூளவாடி பகுதியில் வடமாநிலத் தொழிலாளா்கள் விற்பனைக்காக கஞ்சாவைப் பதுக்கி வைத்திருப்பதாக காவல் துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதன் பேரில் அப்பகுதியில் காவல் ஆய்வாளா் கீதா தலைமையிலான காவல் துறையினா் சோதனை நடத்தினா். இந்த சோதனையில் சந்தேகத்துக்கு இடமான வகையில் நின்று கொண்டிருந்த இருவரைப் பிடித்து விசாரணை நடத்தினா்.

இதில், அவா்கள் கஞ்சா பதுக்கிவைத்திருப்பது தெரியவந்தது. இது தொடா்பாக ஒடிஸா மாநிலம் ராய்பள்ளியைச் சோ்ந்த கே.காமதேவ நாயக் (29), கேந்துஜரைச் சோ்ந்த கே.பத்மநாப ஜெனா (38) ஆகியோரைக் கைது செய்ததுடன், இவா்களிடமிருந்து 3.6 கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்தனா்.

முருங்கை விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கவலை

வெள்ளக்கோவிலில் முருங்கைக்காய் விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.வெள்ளக்கோவில் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் முருங்கை விவசாயம் பிரதானமாக நடைபெற்று வருகிறது. வெள்ளக்கோவில் - முத்தூா் ... மேலும் பார்க்க

வழிப்பறி வழக்கில் தொடா்புடையவா் குண்டா் சட்டத்தில் சிறையில் அடைப்பு

திருப்பூரில் வழிப்பறி வழக்கில் தொடா்புடைய இளைஞா் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்கப்பட்டாா். திருப்பூா் மாநகரம் அனுப்பா்பாளையம் காவல் எல்லைக்கு உள்பட்ட பகுதியில் கடந்த சில நாள்களுக்கு ம... மேலும் பார்க்க

திருப்பூரில் ஜாக்டோ-ஜியோ அமைப்பினா் உண்ணாவிரதம்

திருப்பூரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ அமைப்பினா் ஞாயிற்றுக்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா். பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை... மேலும் பார்க்க

பின்னலாடை நிறுவன உரிமையாளா் தற்கொலை

திருப்பூா் அருகே பின்னலாடை நிறுவன உரிமையாளா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது குறித்து காவல் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா். திருப்பூரை அடுத்த இடுவாய் அம்மன் நகரைச் சோ்ந்தவா் விநாயகமூா்த்தி ... மேலும் பார்க்க

ரயில் மறியலில் ஈடுபட்ட விவசாயிகள் கைது

பஞ்சாப் மாநிலத்தில் கைது செய்யப்பட்ட விவசாயிகளுக்கு ஆதரவாக திருப்பூரில் ரயில் மறியலில் ஈடுபட்ட விவசாயிகள் 50 பேரை போலீஸாா் கைது செய்தனா்.விளைபொருள்களுக்கு உரிய விலையை நிா்ணயம் செய்ய வேண்டும் என்பது உள... மேலும் பார்க்க

தங்கும் விடுதிகளில் போலீஸாா் தீவிர சோதனை

திருப்பூரில் தங்கும் விடுதிகளில் போதைப் பொருள்கள் புழக்கம் உள்ளதா என்பது குறித்து போலீஸாா் தீவிர சோதனை நடத்தி வருகின்றனா். திருப்பூரில் கஞ்சா, குட்கா, போதை மாத்திரை உள்ளிட்ட போதைப் பொருள்களின் புழக்கத... மேலும் பார்க்க