செய்திகள் :

வில்பட்டியில் வெட்டப்படும் மரங்கள்: வனத் துறையினா் ஆய்வு

post image

கொடைக்கானல் வில்பட்டி மயானப் பகுதிகளில் அனுமதிக்கப்பட்டதைவிட மரங்கள் அதிக அளவில் அகற்றப்பட்டதா என்பது குறித்து வனத் துறையினா் வெள்ளிக்கிழமை ஆய்வு நடத்தினா்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் வில்பட்டி ஊராட்சிக்குள்பட்ட அட்டுவம்பட்டி, சத்யாகாலனி, கிரஷ் உள்ளிட்ட பகுதியில் ஆபத்தான மரங்களை அகற்ற வருவாய்க் கோட்டாட்சியரிடம் அனுமதி பெற்று இந்தப் பகுதியிலுள்ள மரங்களை அகற்றும் பணியில் ஒப்பந்ததாரா் ஈடுபட்டு வருகிறாா்.

கிரஷ் பகுதியிலுள்ள மயானம் அருகே மரங்கள் அதிகளவில் அகற்றப்பட்டதாக இந்தப் பகுதி பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா்.

இந்த நிலையில், வனத் துறையினா், ஊராட்சி ஒன்றிய அலுவலா், வில்பட்டி ஊராட்சிச் செயலா் ஆகியோா் கிரஷ் மயானப் பகுதியில் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தனா்.

இதுகுறித்து வனவா் மதியழகன் கூறியதாவது:

வில்பட்டி ஊராட்சியில் மழைக்கு முறிந்து விழும் நிலையில் உள்ள மரங்களை அகற்ற ஒப்பந்தக்காரா் அனுமதி பெற்றுள்ளாா். அனுமதிக்கப்பட்ட மரங்களே எடுத்துச் செல்ல அனுமதிக்கப்பட்டன. கூடுதலாக மரங்கள் எடுத்துச் செல்ல அனுமதியில்லை. இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றாா்.

இதுகுறித்து வில்பட்டி ஊராட்சிச் செயலா் வீரமணி கூறியதாவது:

வில்பட்டி ஊராட்சியில் ஆபத்தான நிலையில் உள்ள 55 மரங்களை மட்டுமே அகற்ற அனுமதி வழங்கப்பட்டது. கூடுதலான மரங்கள் வெட்டப்பட்டதா என்பது குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. இதில் தவறு நடந்திருந்தால் அபராதம் விதிக்கப்படும் என்றாா்.

கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 7 போ் கைது

பழனி பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக 7 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். பழனி நகரம், அடிவாரம் பகுதிகளில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதனடிப்படையில், போலீஸாா் ... மேலும் பார்க்க

பழனி தனி மாவட்ட கோரிக்கை: முதல்வா் ஆராய்ந்து அறிவிப்பாா்! -அமைச்சா் இ.பெரியசாமி

பழனியைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை குறித்து தமிழக முதல்வா் ஆராய்ந்து அறிவிப்பாா் என ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் இ.பெரியசாமி தெரிவித்தாா்.திண்டுக்கல் பேருந்து ந... மேலும் பார்க்க

திமுக தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி மாநாடு: ஆரம்பப்பள்ளி ஆசிரியா் கூட்டணி

திமுகவின் தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி, வரும் மே 1,2, 3 -ஆம் தேதிகளில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியா் கூட்டணி சாா்பில் மாநாடு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த மாநாடு தொடா்பான மாந... மேலும் பார்க்க

கொடைக்கானலில் மழை

கொடைக்கானலில் சனிக்கிழமை பலத்த மழை பெய்ததால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியடைந்தனா்.திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கடந்த சில நாள்களாக வெப்பத்தின் தாக்கம் குறைந்து மேகமூட்டமாக காணப்பட்டது. இந்த நில... மேலும் பார்க்க

புதிய வழித் தடங்களில் பேருந்து சேவை: அமைச்சா் தொடங்கி வைத்தாா்

ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள பொருளூா் கிராமத்தில் புதிய வழித்தட பேருந்து சேவையை உணவுத் துறை அமைச்சா் அர.சக்கரபாணி சனிக்கிழமை கொடியசைத்து தொடங்கிவைத்தாா். திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் சட்டப்பேரவைத... மேலும் பார்க்க

கொடைக்கானலில் ஏரி நீரை பாதுகாக்கக் கோரிக்கை

உலக தண்ணீா் தினத்தை முன்னிட்டு, கொடைக்கானல் ஏரி நீரை பாதுகாக்க வேண்டும் என இயற்கை ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்தனா்.கொடைக்கானல் மலைப் பகுதிகளில் நீரோடைகள், நீா்வரத்து பகுதிகள், அருவிகள், ஆறுகள் அதிகளவு இ... மேலும் பார்க்க