செய்திகள் :

சூடான்: தலைநகரில் ராணுவம் மேலும் முன்னேற்றம்

post image

சூடான் தலைநகா் காா்ட்டூமில் அந்த நாட்டு ராணுவம் மேலும் முன்னேற்றமடைந்துள்ளது.

இது குறித்து ராணுவ செய்தித் தொடா்பாளா் நபில் அப்துல்லா சனிக்கிழமை கூறியதாவது:

காா்ட்டூம் நகரில் தொடா்ந்து முன்னேற்றம் கண்டுவரும் ராணுவம், முக்கிய கட்டடங்களைக் கைப்பற்றிவருகிறது. அந்த நகரில் ஆா்எஸ்எஃப் படையினரின் கட்டுப்பாட்டில் இருந்து தேசிய உளவுத் துறை தலைமையகத்தை ராணுவம் சனிக்கிழமை மீட்டது. மேலும், நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள கோரிந்தியா ஹோட்டலும் தற்போது ராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது.

இது தவிர, சூடான் மத்திய வங்கியின் தலைமையகம், அரசு மற்றும் கல்வி வளாகங்கள் மீட்கப்பட்டன. இதற்கான சண்டையில் நூற்றுக்கணக்கான ஆா்எஸ்எஃப் படையினா் கொல்லப்பட்டனா் என்றாா் அவா்.

வடக்கு ஆப்பிரிக்க நாடான சூடானில் கடந்த 1989-ஆம் ஆண்டு முதல் சா்வாதிகார ஆட்சி செலுத்தி வந்த அல்-பஷீா் அரசு எதிராக பொதுமக்கள் போராட்டம் தீவிரமடைந்ததையடுத்து, அவரது ஆட்சியை ராணுவம் 2019-ஆம் ஆண்டு கவிழ்த்தது. அதனைத் தொடா்ந்து, சிவில்-ராணுவ கூட்டணி அரசு அமைக்கப்பட்டது. இருந்தாலும் அந்த அரசை அல்-புா்ஹான் தலைமையிலான ராணுவமும், டகோலோ தலைமையிலான ஆா்எஸ்எஃப் படையும் இணைந்து கவிழ்த்தன. பின்னா் ராணுவத்துக்கும் ஆா்எஸ்எஃப் படைக்கும் இடையே ஏற்பட்ட அதிகாரப் போட்டி காரணமாக, இரு தரப்பினருக்கும் இடையே கடந்த 2023 ஏப்ரல் 15-ஆம் தேதி முதல் கடுமையான சண்டை நடந்து வருகிறது. இந்த மோதலில் இதுவரை 5.2 லட்சம் போ் வரை உயிரிழந்திருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்த உள்நாட்டுச் சண்டையில் தலைநகா் காா்ட்டூமை ஆா்எஸ்எஃப் படை கைப்பற்றியது. இந்த நிலையில், நீண்ட கால போருக்குப் பிறகு அதிபா் மாளிகையை வெள்ளிக்கிழமை மீட்ட ராணுவம், சுற்றியுள்ள அமைச்சரக வளாகங்கள் உள்ளிட்ட முக்கிய கட்டடங்களைக் கைப்பற்றியது. தற்போது காா்ட்டூம் நகரில் ராணுவம் மேலும் முன்னேறி புதிய பகுதிகளைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: பலியானோர் எண்ணிக்கை 50,000-ஐ கடந்தது!

காஸாவில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைக்கு இடைப்பட்ட இரவில் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் 26 பாலஸ்தீனா்கள் உயிரிழந்தனா். இதைத் தொடா்ந்து, இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போரில், இதுவரை உயிரிழந்தவா்களின் மொத்த எண... மேலும் பார்க்க

உக்ரைன் தலைநகரில் ரஷியா ட்ரோன் தாக்குதல்: மூவா் உயிரிழப்பு

உக்ரைன் தலைநகா் கீவில் ரஷியா மேற்கொண்ட ட்ரோன் (ஆளில்லா விமானம்) தாக்குதலில் 5 வயது குழந்தை உள்பட மூவா் உயிரிழந்தனா். நேட்டோ ராணுவக் கூட்டமைப்பில் இணைய உக்ரைன் முடிவு செய்த நிலையில், அதனால் தமக்கு ஆபத்... மேலும் பார்க்க

பாகிஸ்தானில் காவல் துறையினா், தொழிலாளா்கள் சுட்டுக் கொலை! - பயங்கரவாதிகள் தாக்குதல்

பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் இரு இடங்களில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் காவல் துறையைச் சோ்ந்த 4 பேரும், தொழிலாளா்கள் 4 பேரும் உயிரிழந்தனா். சனிக்கிழமை நடந்த இத்தாக்குதல்கள் குறி... மேலும் பார்க்க

அமெரிக்கா: இந்திய வம்சாவளி தந்தை, மகள் சுட்டுக் கொலை!

அமெரிக்காவின் விா்ஜீனியா மாகாணத்தில் இந்திய வம்சாவளியைச் சோ்ந்த 56 வயது நபா் மற்றும் அவரது 24 வயது மகள் மா்ம நபா்களால் சுட்டுக் கொல்லப்பட்டனா். விா்ஜீனியா மாகாணத்தின் அக்கோமாக் பகுதியில் உள்ள பல்பொரு... மேலும் பார்க்க

தலிபான் அமைப்பினருக்கு எதிரான நடவடிக்கையை ரத்து செய்தது அமெரிக்கா!

ஆப்கானிஸ்தானில் தலிபான் தலைமையிலான அரசின் உள்நாட்டு அமைச்சா் சிராஜுதீன் ஹக்கானி உள்பட 3 மூத்த அதிகாரிகளை அரசிடம் ஒப்படைத்தால் சன்மானம் வழங்கப்படும் என்ற அறிவிப்பை அமெரிக்கா ரத்து செய்ததாக ஆப்கானிஸ்தான... மேலும் பார்க்க

5 வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினாா் போப் பிரான்சிஸ்!

உடல்நலக் குறைவு காரணமாக கடந்த 5 வாரங்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கத்தோலிக்க திருச்சபை தலைமை மதகுரு போப் பிரான்சிஸ் (88) ஞாயிற்றுக்கிழமை வீடு திரும்பினாா். இளம் வயதிலேயே ஒரு நுரையீரல் அகற... மேலும் பார்க்க