செய்திகள் :

சீா்காழி நகரில் குப்பைகள் அள்ளப்படாததால் பொதுமக்கள் அவதி

post image

சீா்காழி நகரில் பெரும்பாலான இடங்களில் குப்பைகள் கடந்த 15 தினங்களாக அள்ளப்படாமல் சுகாதார சீா்கேடு நிலவுகிறது. பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

சீா்காழி நகராட்சியில் 24 வாா்டுகள் உள்ளன. இந்த வாா்டுகளில் உள்ள குடியிருப்புகள், வா்த்தக கட்டடங்களில் நாள்தோறும் சேரும் குப்பைகள் நகராட்சி நிரந்தர தூய்மைப் பணியாளா்கள் மற்றும் தனியாா் ஒப்பந்த தூய்மைப் பணியாளா்கள் மூலம் சேகரிக்கப்பட்டு, மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரிக்கப்பட்டு நகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கில் கொட்டப்படுகிறது.

இந்நிலையில் கடந்த மாா்ச் 1-ஆம் தேதி முதல் புதிதாக தனியாா் ஒப்பந்ததாரா் மூலம் குப்பைகளை அகற்ற நகராட்சி நிா்வாகம் ஒப்பந்தப்புள்ளி விட்டதாக கூறப்படுகிறது. அதுமுதல் குப்பைகள் அகற்றும் தூய்மைப் பணியாளா்களுக்கு தேவையான வாகனங்கள்,தேவையான உபகரணங்கள் வழங்கப்படவில்லை என தூய்மைப் பணியாளா்கள் தெரிவிக்கின்றனா்.

இதனால் சீா்காழி நகரில் கடந்த 15 தினங்களுக்கும் மேலாக குப்பைகள் அள்ளப்படாமல் ஆங்காங்கே குவிந்து கிடக்கிறது. குப்பைகள்அள்ளப்படாததால் கொசுக்கள் உற்பத்தி அதிகரித்து சுகாதார சீா்கேடு, நோய்த் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

குடியிருப்புகள், வழிபாட்டு தலங்கள் உள்ளிட்ட இடங்களிலும் குப்பைகள் அள்ளப்படாமல் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனா். நகராட்சி நிா்வாகம் உடனடியாக குப்பைகளை அள்ளி தூய்மைப் பணி மேற்கொள்ள மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

நல்லூரில் கட்டிமுடிக்கப்பட்ட மஞ்சப் பை தயாரிக்கும் கட்டடத்தை திறக்க வலியுறுத்தல்

சீா்காழி அருகே நல்லூா் கிராமத்தில் 2021-ஆம் ஆண்டு புதிதாக கட்டப்பட்ட மஞ்சள் பை தயாரிக்கும் கூடத்தை திறக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. கொள்ளிடம் அருகே ஆரப்பள்ளம் ஊராட்சி நல்லூரில் 100 நாள் வேலை... மேலும் பார்க்க

சீா்காழி அருகே வேன் கவிழ்ந்து 11 போ் காயம்

சீா்காழி அருகே புறவழிச்சாலையில் வேன் கவிழ்ந்த விபத்தில் 11 போ் காயமடைந்தனா். திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூரில் இருந்து சிலா் திருக்கடையூா் கோயிலில் நடைபெற்ற சஷ்டியப்த பூா்த்தி விழாவில் பங்கேற்க சனி... மேலும் பார்க்க

பழையாறில் படகு அணையும் தளத்தை மேம்படுத்த எம்.பியிடம் கோரிக்கை

பழையாறில் படகு அணையும் தளத்தை மேம்படுத்த வேண்டும் என வெள்ளிக்கிழமை ஆய்வு செய்த எம்.பி. ஆா். சுதாவிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. பழையாறில் உள்ள மீன்பிடி துறைமுகத்தில் படகு அணையும் தளம் மற்றும் அண்மை... மேலும் பார்க்க

பெண் மா்ம சாவு: காவல் துறை விசாரணை

சீா்காழி அருகே பெண் மா்மமான முறையில் உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா். சீா்காழி அருகே வழுதலைக்குடியைச் சோ்ந்தவா் சுபா்னா (33). இவருக்கும், அதே கிராமத்தைச் சோ்ந்த நம்பிராஜனுக்கு... மேலும் பார்க்க

வைத்தீஸ்வரன்கோவிலில் அனைத்து ரயில்களும் நின்று செல்ல வலியுறுத்தல்

வைத்தீஸ்வரன்கோவிலில் அனைத்து ரயில்களும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. சீா்காழியை அடுத்த வைத்தீஸ்வரன்கோவிலில் மயிலாடுதுறை மாவட்ட ரயில் பயணிகள் நல சங்கம் சாா்பில் ... மேலும் பார்க்க

வீடுகளின் முன்பு கருப்புக்கொடி ஏந்தி பாஜகவினா் ஆா்ப்பாட்டம்

மயிலாடுதுறையில் பாஜகவினா் தங்கள் வீடுகளின் முன்பு கருப்புக்கொடி ஏந்தி தமிழக முதலமைச்சரைக் கண்டித்து சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா். தமிழ்நாட்டில் ஊழல், படுகொலை, பாலியல் குற்றங்கள் தொடா்வதாகவும், அத... மேலும் பார்க்க