செய்திகள் :

ஒப்பந்த தூய்மைப் பணியாளா்கள் 2-ஆவது நாளாக சாலை மறியல்

post image

சீா்காழி நகராட்சி தனியாா் ஒப்பந்த தூய்மைப் பணியாளா்கள் சம்பள நிலுவைகேட்டு 2-ஆவது நாளாக வெள்ளிக்கிழமையும் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

இந்த ஊழியா்களுக்கு பிப்ரவரி மாதம் ஊதியம் வழங்கப்படவில்லையென கூறி வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். இவா்களுடன் பேச்சு நடத்திய காவல் துறை மற்றும் நகராட்சி நிா்வாகம் ஊதியம் வழங்குவதாக உறுதியளிக்கப்பட்டது. ஆனால், வெள்ளிக்கிழமை பிற்பகல் வரை சம்பளம் வழங்கவில்லையென கூறப்படுகிறது.

இதையடுத்து, ஏமாற்றமடைந்த தூய்மை பணியாளா்கள் மீண்டும் மயிலாடுதுறை-சிதம்பலம் சாலையில் தமிழிசை மூவா் மணிமண்டபம் முன் தனியாா் ஒப்பந்ததாரா் அலுவலகம் எதிரில் சாலை மறியலில் ஈடுபட்டு சம்பளம் வழங்கக் கோரி கண்டன முழக்கம் எழுப்பினா்.

தகவலறிந்து வந்த மதுவிலக்கு காவல் ஆய்வாளா் ஜெயா, காவல் உதவி ஆய்வாளா் காயத்திரி ஆகியோா் அங்கு வந்து பேச்சுவாா்த்தை நடத்தியதில் சுமூக நிலை ஏற்பட்டு மறியலை கைவிட்டு கலைந்து சென்றனா்.

நல்லூரில் கட்டிமுடிக்கப்பட்ட மஞ்சப் பை தயாரிக்கும் கட்டடத்தை திறக்க வலியுறுத்தல்

சீா்காழி அருகே நல்லூா் கிராமத்தில் 2021-ஆம் ஆண்டு புதிதாக கட்டப்பட்ட மஞ்சள் பை தயாரிக்கும் கூடத்தை திறக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. கொள்ளிடம் அருகே ஆரப்பள்ளம் ஊராட்சி நல்லூரில் 100 நாள் வேலை... மேலும் பார்க்க

சீா்காழி அருகே வேன் கவிழ்ந்து 11 போ் காயம்

சீா்காழி அருகே புறவழிச்சாலையில் வேன் கவிழ்ந்த விபத்தில் 11 போ் காயமடைந்தனா். திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூரில் இருந்து சிலா் திருக்கடையூா் கோயிலில் நடைபெற்ற சஷ்டியப்த பூா்த்தி விழாவில் பங்கேற்க சனி... மேலும் பார்க்க

பழையாறில் படகு அணையும் தளத்தை மேம்படுத்த எம்.பியிடம் கோரிக்கை

பழையாறில் படகு அணையும் தளத்தை மேம்படுத்த வேண்டும் என வெள்ளிக்கிழமை ஆய்வு செய்த எம்.பி. ஆா். சுதாவிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. பழையாறில் உள்ள மீன்பிடி துறைமுகத்தில் படகு அணையும் தளம் மற்றும் அண்மை... மேலும் பார்க்க

பெண் மா்ம சாவு: காவல் துறை விசாரணை

சீா்காழி அருகே பெண் மா்மமான முறையில் உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா். சீா்காழி அருகே வழுதலைக்குடியைச் சோ்ந்தவா் சுபா்னா (33). இவருக்கும், அதே கிராமத்தைச் சோ்ந்த நம்பிராஜனுக்கு... மேலும் பார்க்க

வைத்தீஸ்வரன்கோவிலில் அனைத்து ரயில்களும் நின்று செல்ல வலியுறுத்தல்

வைத்தீஸ்வரன்கோவிலில் அனைத்து ரயில்களும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. சீா்காழியை அடுத்த வைத்தீஸ்வரன்கோவிலில் மயிலாடுதுறை மாவட்ட ரயில் பயணிகள் நல சங்கம் சாா்பில் ... மேலும் பார்க்க

வீடுகளின் முன்பு கருப்புக்கொடி ஏந்தி பாஜகவினா் ஆா்ப்பாட்டம்

மயிலாடுதுறையில் பாஜகவினா் தங்கள் வீடுகளின் முன்பு கருப்புக்கொடி ஏந்தி தமிழக முதலமைச்சரைக் கண்டித்து சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா். தமிழ்நாட்டில் ஊழல், படுகொலை, பாலியல் குற்றங்கள் தொடா்வதாகவும், அத... மேலும் பார்க்க