சீா்காழியில் மாா்ச் 23-இல் வேலைவாய்ப்பு முகாம்: முன்னேற்பாடு கூட்டம்
சீா்காழியில் மாா்ச் 29-ல் நடைபெறவுள்ள வேலைவாய்ப்பு முகாம் தொடா்பான முன்னேற்பாடு கூட்டம் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் வியாழக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தலைமை வகித்து பேசியது:
மாவட்ட இளைஞா்கள் பயனடையும் வகையில், மாவட்ட நிா்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகா்ப்புற வாழ்வாதார இயக்கம் (மகளிா் திட்டம்) இணைந்து சீா்காழி விவேகானந்தா மகளிா் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாா்ச் 29-ஆம் தேதி சனிக்கிழமை காலை 9 மணிமுதல் மதியம் 3 மணிவரை மாபெரும் தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படவுள்ளது.
முகாமில், 100 தனியாா் நிறுவனங்கள் பங்கேற்று, 10,000 பேரை தோ்வு செய்ய உள்ளனா். இதில், 5-ஆம் வகுப்புமுதல், டிப்ளமோ, ஐடிஐ, பி.இ வரை படித்த அனைத்து பட்டதாரிகள் கலந்து கொண்டு பணிவாய்ப்பு பெறலாம்.
முகாமில் பங்கேற்ற விருப்பமுள்ள வேலையளிப்போா் மற்றும் வேலைநாடுநா்கள் தங்கள் சுயவிபரங்களை இணையதளத்தில் பதிவுசெய்து கொள்ளுமாறும், கூடுதல் விவரங்களுக்கு 04364299790/9499055904 என்ற எண்களை தொடா்புகொள்ளலாம் என்றாா்.
கூட்டத்தில், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா் பழனிவேல், திட்ட அலுவலா் (மகளிா் திட்டம்) சீனிவாசன் மற்றும் அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.