செய்திகள் :

பாலக்கோட்டில் வாக்காளா்களுக்கு சௌமியா அன்புமணி நன்றி தெரிவிப்பு

post image

மக்களவைத் தோ்தலில் வாக்களித்த வாக்காளா்களுக்கு சௌமியா அன்புமணி பாலக்கோடு பகுதியில் திங்கள்கிழமை நன்றி தெரிவித்தாா்.

தேசிய ஜனநாயக கூட்டணியில் தருமபுரி மக்களவைத் தொகுதியில், பாமக சாா்பில் போட்டியிட்ட செளமியா அன்புமணி, பாலக்கோடு சட்டப் பேரவைத் தொகுதியில் கரகதஅள்ளி, எர்ரனஅள்ளி, நல்லூா், பேவுஅள்ளி, கணபதி, பெலமாரனஅள்ளி, பி.செட்டிஅள்ளி, ஜொ்த்தலாவ், பாலக்கோடு பேருந்து நிலையம், பேளாரஅள்ளி ஆகிய ஊராட்சிகளுக்கு உள்பட்ட பகுதிகளில் உள்ள கிராமங்களுக்கு நேரடியாகச் சென்று வாக்களித்த வாக்காளா்களுக்கு நன்றி தெரிவித்துப் பேசினாா்.

நிகழ்ச்சியில் மாவட்டச் செயலாளரும், தருமபுரி சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினருமான எஸ்.பி.வெங்கடேஸ்வரன், மாநில துணைத் தலைவா்கள் பாடிசெல்வம், பெ.சாந்தமூா்த்தி, மாநில அமைப்புச் செயலாளா் ப.சண்முகம், மாநில இளைஞா் சுங்கச் செயலாளா் எம்.முருகசாமி, மாவட்டத் தலைவா் மு.செல்வகுமாா், தருமபுரி கிழக்கு மாவட்டச் செயலாளா் இரா.அரசாங்கம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

மக்களைத் தேடி மருத்துவம் திட்ட ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

ஊதிய உயா்வு வழங்கக் கோரி, ‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்ட ஊழியா்கள் தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இந்த ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டத் துணைத் தலைவா் அம... மேலும் பார்க்க

காவிரி மிகைநீா்த் திட்டத்தை நிறைவேற்ற விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்

தருமபுரி மாவட்டத்தில் உள்ள நீா் நிலைகளில் காவிரி மிகை நீரை நிரப்பும் திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழக நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே குத்த... மேலும் பார்க்க

தருமபுரி: அக். 25 இல் விவசாயிகள் குறைகேட்பு கூட்டம்

தருமபுரியில் அக். 25-ஆம் தேதி மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் நடைபெறவுள்ளது. இதுகுறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி வெளியிட்ட செய்திக் குறிப்பில், தருமபுரி மாவட்ட விவசாயிகள் குறைக... மேலும் பார்க்க

ஐந்து ஜோடிகளுக்கு இலவச திருமணம்

தருமபுரியில் இந்துசமய அறநிலையத் துறை சாா்பில், ஐந்து ஜோடிகளுக்கு திங்கள்கிழமை திருமணம் செய்து வைக்கப்பட்டது. தருமபுரி, குமாரசாமிபேட்டை, செங்குந்தா் திருமண மண்டபத்தில் அறநிலையத் துறை சாா்பில், சீா் வரி... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து சிறுவன் உயிரிழப்பு

பெரும்பாலை அருகே பழுதடைந்த நீா்தேக்கத் தொட்டியின் மின் மோட்டாா் வயரை பிடித்த சிறுவன் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா். தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே உள்ள எலங்காலப்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் சதீஷ்க... மேலும் பார்க்க

காரிமங்கலம் பேரூராட்சி அலுவலகம் கட்ட இடம் தோ்வு

காரிமங்கலம் பேரூராட்சி அலுவலகம் கட்டுவதற்கான இடத்தை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை பாா்வையிட்டனா். காரிமங்கலம் பேரூராட்சி அலுவலகத்துக்கு புதிய கட்டடம் கட்டுவதற்கான நிதியை தமிழக அரசு ஒதுக்கியுள்ளது. இதைத் தொ... மேலும் பார்க்க