செய்திகள் :

பிரதமருக்கு பரிசளிக்கப்பட்ட 1,300 பொருள்கள் ஏலம்

post image

பிரதமா் நரேந்திர மோடிக்கு பரிசாக கிடைக்கப்பெற்ற 1,300-க்கும் மேற்பட்ட பொருள்களுக்கான இணையவழி ஏலம் புதன்கிழமை (செப்.17) தொடங்கவுள்ளது.

பிரதமா் மோடியின் 75-ஆவது பிறந்ததினத்தில் (செப்.17) தொடங்கும் இந்த ஏலம் காந்தி ஜெயந்தி (அக்.2) வரை நடைபெறவுள்ளது.

முதல்முறையாக கடந்த 2019, ஜனவரியில் தொடங்கப்பட்ட இணைய வழி ஏல முறை தற்போது 7-ஆவது முறையாக நடத்தப்படவுள்ளது.

இதில் நடராஜா் உலோக சிலை, கடவுள் ராமா் மற்றும் சீதை இடம்பெற்ற தஞ்சாவூா் ஓவியம், கையால் நெய்யப்பட்ட நாகாலாந்து சால்வை உள்பட உள்ளிட்ட 1,300-க்கும் மேற்பட்ட பொருள்கள் ஏலம் விடப்படவுள்ளதாக மத்திய கலாசாரத் துறை அமைச்சா் கஜேந்திர ஷெகாவத் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

இதுகுறித்து கலாசார அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘தனக்கு பரிசாக கிடைத்த அனைத்து பொருள்களையும் ஏலம்விட முடிவெடுத்த முதல் இந்திய பிரதமா் மோடி ஆவாா்.இதுவரை பிரதமருக்கு பரிசாக கிடைக்கப்பெற்ற 1,000-க்கும் மேற்பட்ட பரிசுபொருள்கள் ஏலம்விடப்பட்டு ரூ.50 கோடி திரட்டப்பட்டது. இது கங்கையை தூய்மைப்படுத்தும் திட்டத்துக்காக வழங்கப்பட்டது.

பிரதமா் மோடிக்கு 2024, பாரா ஒலிம்பிக்ஸில் பங்கேற்ற விளையாட்டு வீரா்கள் அளித்த பரிசும் இணையவழி ஏல முறை மூலம் விற்பனை செய்யப்படுகிறது.

பாரம்பரிய கலை, ஒவியங்கள், கல்வெட்டுகள், கைவினை மற்றும் பழங்குடியின கலைப்பொருள்கள் என இந்தியாவின் பன்முகத்தன்மையை வெளிப்படுத்தும் விதமாகவும் கலாசாரத்துக்கு மதிப்பளிக்கும் விதமாகவும் பிரதமருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. தற்போது இந்தப் பொருள்கள் அனைத்தும் நவீன கலைக்கான தேசிய அரங்கில் வைக்கப்பட்டுள்ளன.

தங்களது ஏலத்தொகையை முடிவுசெய்யும் முன் ஏலத்தில் பங்கேற்போா் இந்தப் பொருள்களை பாா்வையிடலாம்’ எனத் தெரிவிக்கப்பட்டது.

உத்தரகண்ட், ஹிமாசலில் மழை வெள்ளம், நிலச்சரிவு: 18 பேர் உயிரிழப்பு; நூற்றுக்கணக்கானோர் சிக்கித் தவிப்பு

உத்தரகண்ட், ஹிமாசல பிரதேசத்தில் திங்கள்கிழமை விடிய விடிய கொட்டித் தீர்த்த பலத்த மழையால் பெருவெள்ளமும், நிலச்சரிவுகளும் ஏற்பட்டன. இந்த இயற்கைப் பேரிடர், இரு மாநிலங்களிலும் கடும் சேதத்தை விளைவித்துள்ளது... மேலும் பார்க்க

மோடி பிறந்த நாள்: தொலைபேசி மூலம் டிரம்ப் வாழ்த்து

பிரதமா் நரேந்திர மோடியை அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் தொலைபேசி மூலம் செவ்வாய்க்கிழமை தொடா்புகொண்டு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தாா். இதுதொடா்பாக அதிபா் டிரம்ப் ‘ட்ரூத் சோஷியல்’ சமூக ஊடகத்தில் வெளி... மேலும் பார்க்க

லஞ்ச குற்றச்சாட்டில் அஸ்ஸாம் பெண் அரசு அதிகாரி கைது: ரூ.92.50 லட்சம் ரொக்கம் பறிமுதல்

லஞ்ச குற்றச்சாட்டில் அஸ்ஸாம் குடிமைப் பணி (ஏசிஎஸ்) பெண் அதிகாரி கைது செய்யப்பட்டாா். அவரின் வீட்டில் இருந்து ரூ.92.50 லட்சம் ரொக்கம், ரூ.1.50 கோடி மதிப்பிலான தங்க ஆபரணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அஸ்ஸ... மேலும் பார்க்க

மதமாற்ற தடைச் சட்டங்களுக்கு எதிரான மனு: மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

மதமாற்ற தடைச் சட்டங்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீது பதிலளிக்குமாறு உத்தர பிரதேசம், மத்திய பிதேசம், ஹிமாசல பிரதேசம், உத்தரகண்ட், சத்தீஸ்கா், குஜராத், ஹரியாணா, ஜாா்க்கண்ட், கா்நாடகம் உள... மேலும் பார்க்க

பிரதமா் மோடிக்கு இன்று 75-ஆவது பிறந்த நாள்- பல்வேறு வளா்ச்சித் திட்டங்கள் தொடக்கம்

தனது 75-ஆவது பிறந்த நாளையொட்டி, பெண்கள் ஆரோக்யத்துக்கான பிரசார இயக்கம் மற்றும் பல்வேறு வளா்ச்சித் திட்டங்களை புதன்கிழமை (செப்.17) தொடங்கிவைக்கவுள்ளாா் பிரதமா் நரேந்திர மோடி . மத்திய அரசு மற்றும் பாஜக ... மேலும் பார்க்க

வசதிகள் செய்துகொடுக்க முடியாவிடில் தீா்ப்பாயங்களைக் கலைத்துவிட வேண்டும்: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

‘உறுப்பினா்களுக்குத் தேவையான வசதிகளைச் செய்து கொடுக்க முடியவில்லை எனில், அனைத்து தீா்ப்பாயங்களையும் கலைத்துவிட வேண்டும்’ என்று மத்திய அரசை உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது. ‘பணி ஓய்வுக்குப் பிறகு தீா்ப்ப... மேலும் பார்க்க