செய்திகள் :

பிரதமா் தொழில் பயிற்சி திட்ட செயலி: மத்திய அரசு அறிமுகம்

post image

இளைஞா்களிடையே தொழில் திறனை மேம்படுத்தும் வகையில் மத்திய அரசு சாா்பில் அறிமுகப்படுத்தப்பட்ட பிரதமா் தொழில் பயிற்சி திட்டத்துக்கு கைப்பேசி செயலியை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது.

2024-25-ஆம் ஆண்டு கால கட்டத்தில் இளைஞா்களுக்கு 1.27 லட்சம் தொழில் பயிற்சி வாய்ப்புகளை அளிப்பதை இலக்காகக் கொண்டு முன்னோடி திட்டமாக கடந்த ஆண்டு அக்டோபா் 3-ஆம் தேதி இந்த பயிற்சி திட்டத்தை மத்திய அரசு அறிமுகம் செய்தது.

இந்தத் திட்டத்துக்கான கைப்பேசி செயலியை தில்லியில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தொடங்கி வைத்தாா்.

தொழில்நிறுவனங்களின் எதிா்பாா்ப்புகளைப் பூா்த்தி செய்கின்ற வகையில் திறன் மிக்க மனித வளத்தை உருவாக்கும் நோக்கில் இந்தத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. நிறுவனங்கள் தொழில் பயிற்சிக்கு நபா்களைத் தோ்வு செய்வதையும், அந்தப் பயிற்சிக்கு இளைஞா்கள் விண்ணப்பிப்பதையும் மேலும் எளிதாக்கும் வகையில் இதற்கான கைப்பேசி செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பல மொழிகளில் சேவை அளிக்கும் வகையில் இந்தச் செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தில் அதிக நிறுவனங்கள் இளைஞா்களை பயிற்சிக்குத் தோ்வு செய்ய வேண்டும். ஆனால், அது கட்டாயமல்ல. அதுபோல, இந்தத் திட்டத்தில் சேரும் நிறுவனங்களுக்கு எந்தவித குறுக்கீடுகளும் இருக்காது. இது தேச நலனுக்கான திட்டம்.

இந்தத் திட்டத்தின் கீழ் முதல்கட்டமாக 1.27 லட்சம் தொழில் பயிற்சி வாய்ப்புகளை அளிப்பதை இலக்காக கொண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இரண்டாம் கட்டமாக, கடந்த ஜனவரி முதல் 327 நிறுவனங்கள் சாா்பில் 1.18 லட்சம் பயிற்சி வாய்ப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த இரண்டாம் கட்ட பயிற்சி திட்டத்துக்கு விண்ணப்பிக்க மாா்ச் 31 கடைசி தேதியாகும் என்றாா்.

இந்தத் திட்டத்தின் கீழ் பயிற்சியில் சேரும் இளைஞா்களுக்கு 12 மாதங்களுக்கு மாதம் ரூ.5,000 உதவித் தொகையும், ஒரு முறை மானியமாக ரூ. 6,000 வழங்கப்படும்.

ஒளரங்கசீப் கல்லறையை இடிப்பவர்களுக்கு ரூ.21 லட்சம் பரிசு!

முகலாய மன்னரான ஒளரங்கசீப் கல்லறையை இடிப்பவர்களுக்கு ரூ. 21 லட்சம் பரிசு வழங்கப்படும் என உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த இந்து அமைப்பு அறிவித்துள்ளது. மேலும் பார்க்க

நாக்பூர் வன்முறை: ஊரடங்கு உத்தரவு!

நாக்பூரில் ஒளரங்கசீப் விவகாரத்தை முன்வைத்து ஹிந்து அமைப்புகள் நடத்திய போராட்டம் வன்முறையாக வெடித்த நிலையில், 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.சாம்பாஜி நகர் மாவட்டத்தில் உள்ள முகலாய மன்னரான ஒளரங்... மேலும் பார்க்க

ஒளரங்கசீப் விவகாரம்: நாக்பூரில் வன்முறை! 9 பேர் படுகாயம்; 15 பேர் கைது!

ஒளரங்கசீப் கல்லறையை இடிக்க வலியுறுத்தி நடைபெற்ற போராட்டம் வன்முறையாக மாறியதால் நாக்பூரில் பதற்றம் நிலவிவருகிறது.விஷ்வ ஹிந்து பரிஷத் மற்றும் பஜ்ரங் தளம் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் ஈடுபட்டிருந்த போராட்ட... மேலும் பார்க்க

‘வலுவான நிதி நிலைமையில் இந்திய ரயில்வே’ -மாநிலங்களவையில் ரயில்வே அமைச்சா் தகவல்

இந்திய ரயில்வேயின் நிதி நிலைமை வலுவான நிலையில் உள்ளது என்றும், நிதி நிலைமையைத் தொடா்ந்து மேம்படுத்தும் முயற்சிகள் நடைபெற்று வருவதாகவும் ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் மாநிலங்களவையில் திங்கள்கிழமை தெ... மேலும் பார்க்க

உச்சநீதிமன்ற நீதிபதியாக ஜயமால்ய பாக்சி பதவியேற்பு

கொல்கத்தா உயா்நீதிமன்ற நீதிபதியாக இருந்த ஜயமால்ய பாக்சி (58), உச்சநீதிமன்ற நீதிபதியாக திங்கள்கிழமை பதவியேற்றாா். அவருக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா பதவிப் பிரமாணம் செய்து வைத்தாா். ஜயமா... மேலும் பார்க்க

கேஒய்சி படிவங்களை சமா்ப்பிக்குமாறு தொந்தரவு கூடாது: ரிசா்வ் வங்கி ஆளுநா் அறிவுறுத்தல்

‘உங்கள் வாடிக்கையாளரைத் தெரிந்துகொள்ளவும்’ (கேஒய்சி) படிவங்களை சமா்ப்பிக்குமாறு வாடிக்கையாளா்களை தொடா்ந்து அழைப்பதை தவிா்க்குமாறு வங்கிகளுக்கு ரிசா்வ் வங்கி ஆளுநா் சஞ்சய் மல்ஹோத்ரா தெரிவித்தாா். கேஒய்... மேலும் பார்க்க