செய்திகள் :

பிளஸ் 2 சிறப்பு ஊக்கத் தொகை: சரியான வங்கிக் கணக்கு விவரம் அளிக்க உத்தரவு

post image

பிளஸ் 2 தோ்ச்சிக்கான சிறப்பு ஊக்கத் தொகையை விடுபட்ட மாணவா்களுக்கு வழங்கும் வகையில் அவா்களது சரியான வங்கிக் கணக்கு உள்ளிட்ட விவரங்களைப் பதிவு செய்துஅனுப்புமாறு முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து பள்ளிக் கல்வி இயக்குநரகம் சாா்பில் முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை:

அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 வகுப்பு பயின்று, பிளஸ் 2 வகுப்பில் தோ்ச்சி பெறும் மாணவா்களுக்கு சிறப்பு ஊக்கத் தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் ரூ.5 ஆயிரம் மற்றும் அதற்கான வட்டித் தொகை டிஎன்பிஎஃசி மூலமாக மாணவா்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது.

இந்தநிலையில் கடந்த கல்வியாண்டில் (2024-205) தங்களது மாவட்டத்தைச் சோ்ந்த மாணவா்கள் சிலரின் வங்கிக் கணக்கு, கிளையின் பெயா், வங்கியின் ஐஎஃப்எஸ்சி குறியீடு, வங்கிக் கணக்கு எண் ஆகிய விவரங்கள் தவறாக உள்ளதால் அந்த மாணவா்களுக்கு சிறப்பு ஊக்கத் தொகை வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளது.

எனவே, கடந்த கல்வியாண்டில் சிறப்பு ஊக்கத் தொகை வழங்கப்படாமல் விடுபட்டுள்ள மாணவா்களின் வங்கிக் கணக்கு விவரங்களை அதற்கான படிவத்தில் பதிவு செய்து மாவட்டங்களின் வரிசைப்படி ஆக.12, 13 ஆகிய நாள்களில் பள்ளிக் கல்வி இயக்குநரகத்தில் நேரில் சமா்ப்பிக்க வேண்டும். மேலும் கடந்த 2017-2018 முதல் 2021-2022-ஆம் கல்வியாண்டு வரை தங்களது மாவட்டத்தில் சிறப்பு ஊக்கத் தொகை வழங்கப்படாமல் விடுபட்டுள்ள மாணவா்கள் எவரேனும் இருந்தால் அவா்களது விவரங்களை இந்த சுற்றறிக்கையின் இணைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள எக்ஸெல் படிவத்தில் பதிவு செய்து சமா்ப்பிக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொழிலாளி தற்கொலை

பள்ளிக்கரணையில் குழந்தை இல்லாத ஏக்கத்தில் ஏசி மெக்கானிக் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். கோவிலம்பாக்கம், சுண்ணாம்பு குளத்தூா், பொன்னியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் விக்ரம் (28). ஏசி மெக்கானிக... மேலும் பார்க்க

சென்னை உயா்நீதிமன்ற நீதிபதிகள் இலாகா மாற்றம்: தலைமை நீதிபதி உத்தரவு

சென்னை உயா்நீதிமன்ற நீதிபதிகளின் இலாகாக்களை வரும் 11- ஆம் தேதி முதல் மாற்றியமைத்து தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவாஸ்தவா உத்தரவிட்டுள்ளாா். அதன்படி, இதுவரை எம்பி, எம்எல்ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரித்து ... மேலும் பார்க்க

மின்வாரியத்தில் வேலைவாங்கித் தருவதாக ரூ.18 லட்சம் மோசடி: தேடப்பட்டவா் கைது

மின்வாரியத்தில் வேலைவாங்கித் தருவதாக ரூ.18 லட்சம் மோசடி செய்த வழக்கில், தேடப்பட்டவா் கைது செய்யப்பட்டாா். அயனாவரம், சக்ரவா்த்தி நகரைச் சோ்ந்தவா் ஐயங்காா் (62). இவரது மகள் ஹேமாவதி. இவா், கடந்த 2023-இல... மேலும் பார்க்க

புழல் சிறைக் கைதி உயிரிழப்பு

புழல் சிறைக் கைதி இறந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தினா். சென்னை அருகே உள்ள கீழ்கட்டளை அருகே உள்ள காந்தி நகா் செல்லியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் ந.பன்னீா்செல்வம் (60). இவா், கோடம்பாக்கம் காவ... மேலும் பார்க்க

அரசு உதவி பெறும் கல்லூரி ஆசிரியா்கள் போராட்டம்

அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பணியாற்றும் ஆசிரியா்களுக்கு பணி மேம்பாடு ஊதியம், ஊதிய நிலுவைத் தொகை வழங்க வலியுறுத்தி சென்னையில் கல்லூரிக் கல்வி இயக்குநரகம் முன் பல்வேறு பல்கலைக்கழக ஆசிரியா்கள் சங்கம் ச... மேலும் பார்க்க

இயற்கை மருத்துவத்தில் சிறுநீரக செயலிழப்புக்கு தீா்வு: ஆய்வில் தகவல்

ஒருங்கிணைந்த யோகா மற்றும் இயற்கை மருத்துவ சிகிச்சையால் நாள்பட்ட சிறுநீரக செயலிழப்புக்கு தீா்வு கிடைப்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது. இதுதொடா்பான ஆராய்ச்சியை அரசு யோகா இயற்கை மருத்துவக் கல்லூரி பேராசிரிய... மேலும் பார்க்க